‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்

‘பரோல்’ முடிந்த சசிகலா மீண்டும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், ‘பரோலில்’ வந்தார். சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை. அவரது பரோல் விடுமுறை,…

Read More

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்

ஆமதாபாத் : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அக்டோபர் 9 முதல் 11 வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார், ராகுல். சோட்டா உதய்பூரில் இளைஞர்கள் இடையே பிரசாரம் செய்வதற்காக அவர் சென்றுள்ளார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் சென்றுள்ளார். கழிவறைக்கு வெளியே குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்து, அதை கவனிக்காமல் ராகுல் சென்றுள்ளார். அவருடன் வந்த எஸ்பிஜி கமாண்டோக்கள்,…

Read More

எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?

எடப்பாடி பழனிசாமி அணியில் யார்-யாரெல்லாம் சிலீப்பர் செல்கள்?

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 113 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், 21 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும் உள்ளனர். தினகரனை ஆதரிக்கும் 21 எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் கட்சி விதிகளை மீறி விட்டதாக கூறி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சட்ட சபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின்பலம் 116 ஆக குறைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். கட்சியை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத் துடன் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகிறார்கள்.’ அவர்கள் அடிக்கடி “எங்களுக்கு ஆதரவு தெரி விக்கும் 8 அமைச்சர்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணியில்…

Read More

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ

சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன -கருணாஸ் எம்.எல்.ஏ

தலைமை செயலகத்தில் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியம் அளிக்கின்றன. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கே அரசியல்வாதிகளை பார்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சசிகலா பரோலுக்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் சதி உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Read More

திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

திடீரென உதகை வந்து அவசரமாக சென்னை திரும்பிய ஓபிஎஸ்: பேரன், பேத்தியைக் காண வந்ததாக விளக்கம்

நான் எனது பேரன் மற்றும் பேத்தியைக் காணவே உதகை வந்தேன் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென உதகை வந்து, அவசரமாக சென்னை திரும்பினார். உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் தங்கினார். ஞாயிற்றுக்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கட்சியினரை சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி காண முற்பட்ட போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சென்றார். ”நான் எனது பேரன் மற்றும் பேத்தியை காண வந்தேன்” என்று மட்டும் கூறி விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.

Read More

மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா – சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

மருத்துவமனை செல்ல ஜெயலலிதா காரை பயன்படுத்தினார்: கணவர் நடராஜனை பார்த்ததும் கண்கலங்கிய சசிகலா – சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்

சென்னை பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனை பார்த்ததும் சசிகலா கண் கலங்கினார். பின்னர் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா, தனது கணவர் நடராஜன், ஆபத்தான நிலையில் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரைப் பார்க்க பரோலில் நேற்று முன்தினம் சென்னை வந்தார். தி.நகரில் உள்ள தனது அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவை, திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் வழக்கறிஞர் அசோகன் ஆகியோர் நேற்று சந்தித்துப்…

Read More

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு: வைகோ கண்டனம்

மத்திய அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்களின் விருப்பத்துக்கு மாறாக ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளை நீக்கிவிட்டு, சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற அயல் மொழிகளை மூன்றாவது மொழியாக அனுமதிக்கக் கூடாது என்று திட்டவட்டமாக அறிவுறுத்தி இருக்கிறது. மாணவர்கள் விரும்பினால் அந்நிய மொழிகளை நான்காவது, ஐந்தாவது மொழியாகக் கற்றுக்கொள்ளட்டும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி பாடத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்போது, இந்தி,…

Read More

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு

ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நேரத்தில் நடந்தது. ஜெயலலிதாவை யாரும் பார்க்க இயலாத நேரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கிய ஒரு படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்தும் மற்றொரு…

Read More

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல் ஆணையருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்களில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து எந்த விவரமும் வெளியிடவில்லை. ஆளுநர் கூட அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அரசின் முதன்மை பொறுப்பில் உள்ளவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடவேண்டும். அப்போலோ மருத்துவமனை அனைத்தையும் மறைத்து விட்டது. எனவே இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ்…

Read More

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அமைச்சர் தலைமை ஏற்பதா?- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ

மதுரையில் ஆர்எஸ்எஸ் பேரணியைத் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைப்பதாகச் செய்திகள் வெளியான நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகள் காற்றில் பறக்க விடப்படுவதாகவும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி அனுமதியளிக்கக் கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர்கள், ”முந்தைய காலங்களில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஆர்எஸ்எஸ் விழா ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்ட பிறகே அனுமதி அளிப்பார். ஆனால் இப்போது எந்த விதிமுறைகளும் இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது. அம்மா வழியில் செயல்படுவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, இந்தப் பேரணியை அனுமதித்து அவருக்கு…

Read More
1 129 130 131 132 133 181