ம.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

ம.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது

சசிகலாவின் கணவரும் ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனைக்குச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ”நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா. இவரின் கணவர் ம.நடராஜன் (74). இவர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. அத்துடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல்…

Read More

தீபாவளிக்கு பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என சச்சின் பைல்ட தகவல்

தீபாவளிக்கு பின்னர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகலாம் என சச்சின் பைல்ட தகவல்

காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தியைத் தொடர்ந்து அவர்களது வாரிசாக ராகுல் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். 46 வயதாகும் ராகுல்காந்தி 2004-ம் ஆண்டு அரசியலில் குதித்தார். அந்த ஆண்டு பாராளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். அமேதி தொகுதியில் தொடர்ந்து எம்.பி. ஆக இருந்து வரும் ராகுல் 2007-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்தார். 2013-ம் ஆண்டு ராகுலுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராகுலை காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் ஆக்க…

Read More

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீண்டும் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்…

Read More

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுநர் நியமனம்

தமிழக புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இவர் மேகாலயா மாநில ஆளுநராக இருந்தவர். ரோசய்யா பதவிக்காலம் முடிந்தபின்னர் தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்துவந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநரான இவருக்கு தமிழக ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது மறைவு, அதிமுக பிளவு என அடுத்தடுத்து தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், முழுநேர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பார்வர்டு பிளாக்,…

Read More

எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

எம்.நடராஜன் கவலைக்கிடம்: பரோல் கேட்டு சசிகலா மனு

அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்புக்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 10-ம் தேதி திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரலும், சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நடராஜனுக்கு தற்போது டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று, நடராஜனுக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடராஜனின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் அவரைப் பார்ப்பதற்காக தனக்கு பரோல் வழங்க…

Read More

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.15 முதல் 17-ம் தேதி வரை: சென்னையில் இருந்து 4,820 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.15 முதல் 17-ம் தேதி வரை: சென்னையில் இருந்து 4,820 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் 17-ம் தேதி வரை சென்னையில் இருந்து 4,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய தினங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். ஏற்கெனவே, ரயில்களில் டிக்கெட்கள் விற்று முடிந்துவிட்ட நிலையில், தற்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. இருப்பினும், அனைவருக்கும் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை. மேலும், பண்டிகையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை அதிகரிக்கும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், பெரும்பாலானவர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையே…

Read More

அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது என ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதை தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம். மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது. வேளாண் படிப்பில் சேரத் தயாரான மாணவி அனிதா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்று விசாரிக்க ஆணையத்திடம் கேட்டுள்ளோம். கல்வியில் எஸ்.சி., எஸ்,டி., மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்துவருகிறோம்” என்றார். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த…

Read More

சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா?- அப்போலோ நிர்வாகம் பதில்

சிகிச்சையின் போது ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா?- அப்போலோ நிர்வாகம் பதில்

ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றபோது பார்த்தேன் என்று சில அமைச்சர்களும், பார்க்கவில்லை என சில அமைச்சர்களும் முரணாக பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அப்போலோ நிர்வாகி மறுத்து விட்டார். ஜெயலலிதா மரணம் மர்மம் குறித்த பல்வேறு சர்ச்சை கருத்துகள் எழும் நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 22-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, “ஜெயலலிதாவை தாங்கள் யாரும் பார்க்கவில்லை என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க அனைத்து அரசியல் தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று கீழ்ப்பாக்கம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தானும் மற்ற அமைச்சர்களும் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்ததாக…

Read More

டெங்குவை விட மோசமானது எடப்பாடியின் ஆட்சி: தினகரன் தாக்கு

டெங்குவை விட மோசமானது எடப்பாடியின் ஆட்சி: தினகரன் தாக்கு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தும் நடவடிக்கை இல்லையே என்ற கேள்விக்கு டெங்குவை விட மோசமான அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உள்ளதாக தினகரன் பேட்டி அளித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது: ஜெயலலிதா மரணம் மர்மம் பற்றி அமைச்சர்களே தெரியாது என்கிற ரீதியில் பேசுகிறார்களே? ஜெயலலிதா இறந்து சில நாட்களில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக சசிகலாவை பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்று கெஞ்சி கூத்தாடி ஒத்துக்கொள்ள வைத்தது யார். இதே அமைச்சர்கள் அவர் காலில் விழுந்ததை நாடே பார்த்தது. திண்டுக்கல் சீனிவாசன் சசிகலாவை பொதுச் செயலாளர் மட்டுமல்ல முதல்வராகவும் வர வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். அன்று இதே எடப்பாடி,…

Read More

சசிகலா குடும்பத்தினர் சொல்லச்சொன்னதையே ஊடகங்களிடம் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசன்

சசிகலா குடும்பத்தினர் சொல்லச்சொன்னதையே ஊடகங்களிடம் கூறினோம்: திண்டுக்கல் சீனிவாசன்

முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் என்ன சொல்லச் சொன்னார்களோ அதையே ஊடகங்களிடம் கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை. நாங்கள் சொன்னது எல்லாம் பொய். பொதுமக்கள் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மதுரையில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், திண்டுக்கல் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “ஜெயலலிதா உணவு அருந்தியதாக சசிகலா குடும்பத்தினர் கூறச்சொன்னதையே ஊடகங்களிடம் நாங்கள் தெரிவித்தோம். இதையே மதுரை பொதுக்கூட்டத்தில் நான் தெளிவுபடுத்தி விளக்கினேன். மேலும், ஜெயலலிதா மரணம்…

Read More
1 130 131 132 133 134 181