முருகன், நளினியை சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முருகன், நளினியை சிறை விடுப்பில் விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்

முருகனையும், நளினியையும் விடுதலை செய்வதன் மூலமாக மட்டுமே அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய முடியும். அவர்களை குறைந்தபட்சம் சிறை விடுப்பில் விடுதலை செய்ய தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து முடித்து விட்ட நிலையில் தம்மை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தொடர்ந்து 12-ஆவது நாளாக உண்ணாநிலை நீடிக்கும் நிலையில், முருகனின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட…

Read More

அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்

அதிமுக கூட்டத்துக்கு வராத எம்எல்ஏக்கள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். தற்போதைய சூழலில் முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் ஆதரவாளர்கள் 21 பேர் தவிர, 113 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. இவர்களில் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தவிர 110 எம்எல்ஏக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 75 மட்டுமே நேற்று கூட்டத்துக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘எம்எல்ஏக்கள் சிலருக்கு தகவல் சரியாக செல்லவில்லை. அவர்கள் தற்போது வராததற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்’’ என்றனர். காத்திருந்த ஓபிஎஸ் கூட்டம் 9.30 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்ட…

Read More

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை அழையுங்கள்: காங்., சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆளுநருக்கு கடிதம்

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வரை அழையுங்கள்: காங்., சட்டப்பேரவை தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆளுநருக்கு கடிதம்

தமிழக அரசியலில் உள்ள குழப்பமான சூழ்நிலையில் 22 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்துள்ள சூழ்நிலையில் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி எடப்பாடி பழனிசாமியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “ஓபிஎஸ் எடப்பாடி அணிகள் இணைந்ததை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் நேற்று ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து சட்டப்பேரவை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று ஆளுநருக்கு நேற்று கடிதம் எழுதிருந்தார். இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் இதே…

Read More

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் டிடிவி தினகரன் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவின் இரு அணிகளும் திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து புதுச்சேரியிலும் ஓபிஎஸ் – எடப்பாடி ஆதரவாளர்கள் இணைந்தனர். இந்நிலையில், தினகரன் உருவபொம்மையை எரித்து புதுச்சேரி அதிமுகவினர் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டிடிவி ஆதரவாளர்கள் அனைவரும் சொகுசு விடுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சசிகலா, தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், முன்னாள் எம்.பி., ராமதாஸ் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓம்சக்தி சேகர், “தினகரன், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏ.,க்கள் சிறைக்குதான் செல்ல வேண்டியிருக்கும். கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எப்போதுமே…

Read More

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆதரவு யாருக்கு? – உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அறிவிப்பு

கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆதரவு யாருக்கு? – உரிய நேரத்தில் முடிவு எடுப்பதாக அறிவிப்பு

முதல்வர் பழனிசாமியின் அரசுக்கு ஆதரவளித்து வந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் தற்போது தினகரன் பக்கம் சாய்ந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. அதிமுக கடந்த 2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தபோது, பல்வேறு கட்சிகள் ஆதரவளித்தன. ஆனால், மனிதநேய ஜனநாயக கட்சிக்கு 2, முக்குலத்தோர் புலிப்படை- 1, கொங்கு இளைஞர் பேரவை- 1, சமக-1, இந்திய குடியரசு கட்சி- 1 என 6 தொகுதிகளை மட்டும் கூட்டணிக்கு அளித்தார். ஆனால், இந்த 6 பேரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதில், தமிமுன் அன்சாரி (நாகை), கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்) ஆகிய 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். இவர்கள் மூவரும் தொடர்ந்து…

Read More

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! – டிடிவி தினகரன்

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!! – டிடிவி தினகரன்

அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. தமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்…

Read More

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஜெயகுமாரின் 3 இலாகா ஒப்படைப்பு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் இலாகா ஜெயகுமாரின் 3 இலாகா ஒப்படைப்பு

அ.தி.மு.க. இரு அணிகள் இணைந்ததையட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இதில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித்துறையும், உடுமலை ராதா கிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதி ஊரக வீட்டு வசதி, வீட்டு வசதி மேம்பாடு, குடியிருப்பு கட்டுப்பாடு, நகர்ப்புற ஊரமைப்பு சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய இலாகாக்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. இப்போது டி.ஜெயக்குமார் வசம் இருந்த இலாகாக்களில் திட்டமிடுதல், சட்டமன்றம், தேர்தல் பாஸ்போர்ட் ஆகிய இலாகாக்களும் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஜெயக்குமார் மீன் வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை ஆகிய இலாகாக்களை கவனிப்பார்.

Read More

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்

முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியே கடிதம்

அ.தி.மு.க. 2 அணிகள் நேற்று இணைந்தது இதை தொடர்ந்து தினகரன் இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல் ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு டி.டி.வி.தினகரன் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் வருவதாக பரபரப்பாக பேசப்பட்டது. தமிழக கவர்னரை சந்திக்க டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று கவர்னர் மாளிகை வந்தனர். அவர்கள் கவர்னர் வித்யாசாகர் ராவைச் அந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர்.அதில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை அரசு இழந்து விட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் மனு கொடுத்து உள்ளனர்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு இல்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்…

Read More

பொதுக்குழுவில் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

பொதுக்குழுவில் சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படலாம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று கூறியதாவது:- அணிகள் இணைப்பு என்பது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அ.தி.மு.க.வில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி. இது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மகிழ்ச்சி. இணைப்பு முயற்சியில் எந்த தரப்பினரும் சசிகலாவை பற்றி மன்ற கூட்டத்தில் வாய் திறக்கவே இல்லை. பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்கவேண்டும் என வைத்திலிங்கம் கருத்து கூறி இருக்கிறார் என்றால் அதை தலைமை கழகத்துக்கு வெளியே அவர் சொல்லி இருப்பதாக கருதுகிறேன். பொதுக்குழு கூட்டப்படும் போது பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம். வைத்தியலிங்கத்துக்கு ஒரு ஓட்டு, எனக்கு ஒரு ஓட்டு அவ்வளவுதான்….

Read More

18 எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்திவருகிறார்

18 எம்.எல்.ஏக்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்திவருகிறார்

டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டுள்ளனர். தினகரன் இல்லத்துக்கு மூத்த வழக்கறிஞர்கள் வருகை தந்தனர். அவர்களுடன் சட்ட ஆலோசனயும் நடத்தப்பட்டது. சசிகலா பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட தினகரன் தரப்பு தயாராகி வருவதாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், ஜக்கையன், முத்தையா, முருகன், கோதண்டபாணி, ரெங்கசாமி, தங்கதுரை, மாரியப்பன், கென்னடி, ஜெயந்தி, பார்த்தீபன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க் களும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் கலந்து கொண்டனர். ————————————–

Read More
1 133 134 135 136 137 181