விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்: முதல்வர் பழனிசாமி

விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்: முதல்வர் பழனிசாமி

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம். நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார். போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு தேவையான நிதி ஒதுக்கி, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இரட்டை…

Read More

கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி

கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி- தினகரன் இடையே கடும் போட்டி

அ.தி.மு.க. அம்மா அணி யில் உள்ள 122 எம்.எல்.ஏ.க் களில் பெரும்பாலானவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், 37 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரன் தலைமையிலும் செயல்பட்டு வருகிறார்கள். கட்சியையும், ஆட்சியையும் யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது என்பதில் இவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எடப்பாடிக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பலப்பரீட்சையால் அ.தி.மு.க. அம்மா அணியில் பரபரப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தொண்டர்கள் கவலையோடும் வேதனையோடும் இந்த பரபரப்பு நிகழ்வுகளை உற்றுப் பார்த்து வருகிறார்கள். இதையடுத்து தினகரன் முதலில் தலைமைக் கழகத்துக்கு வராமல் மாவட்ட வாரியான சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவார் என்று தெரிய வந்துள்ளது. 4 கட்டங்களாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தினகரன், முதலில் தெற்கு…

Read More

அமித்ஷாவின் வருகையால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

அமித்ஷாவின் வருகையால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கம்: தமிழிசை சவுந்தரராஜன் கணிப்பு

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வரும் 22, 23, 24 தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். கட்சி யின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் வரும் அவர், கட்சியின் மாநிலத் தலைவர் முதல் கிளை கமிட்டி தலைவர் வரையிலான நிர்வாகி கள், தொண்டர்களுடன் உரையாட வுள்ளார். நாடெங்கும் தனது செயல் திட்டத் தால் வெற்றிக்கனியை பறித்து வரும் அமித்ஷாவின் வருகை தமிழக பாஜக தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அவரது வருகை யால் தமிழக அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. அமித்ஷா வின் வருகை தமிழக அரசியலில் நேர்மறையான…

Read More

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க சென்னைக்கு வருமாறு தனது அணி சார்ந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் தினகரன் அணி என 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், சிறை சென்று திரும்பிய தினகரன், மற்ற இரு அணிகளும் இணைவதற்கு 60 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 4-ம் தேதி (இன்று) வரை காலக்கெடு விதித்தார். அத்துடன், ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி அலுவலகத்துக்கு வரப்போவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் மாவட்ட நிர்வாகிகள், நாளை (சனிக்கிழமை) சென்னை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்….

Read More

அணிகள் இணைப்பு குறித்து பேச 2 அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு?

அணிகள் இணைப்பு குறித்து பேச 2 அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வத்துடன் சந்திப்பு?

60 நாட்கள் கெடு முடிந்து வருகிற 5-ந்தேதி முதல் தீவிர சுற்றுப்பயணத்துக்கு தினகரன் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு அவர் செல்ல போவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. டி.டி.வி.தினகரன் தனது வியூகத்தை தொடங்க இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்றே தனது அதிரடியைத் தொடங்கி விட்டார். இன்று மாலை அவர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பத்திரிகைத் தொடர்பாளர்கள் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு எத்தகைய அதிரடியான பதிலடியை கொடுப்பது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. எனவே…

Read More

அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு

அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு

அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அவர் சிலைக்கு அருகில் பகவத் கீதையை வைத்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ”கலாமுக்கு நினைவு மண்டபம் அமைத்ததை வரவேற்கிறோம். ஆனால் அப்துல் கலாம் வீணை வாசிப்பது போல சிலை எதற்கு? பக்கத்தில் பகவத் கீதை எதற்கு? திருக்குறளை விட சிறந்ததா பகவத் கீதை? நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உறுதியோடு தமிழக அரசு இருக்க வேண்டும். பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வரும் என்கிறார்கள். இத்தகைய சூழலில் செப். 15-ல் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றார் வைகோ.

Read More

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன்: இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி கடிதம்

தமிழகத்தை சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன்: இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் கோபால்கிருஷ்ண காந்தி கடிதம்

தமிழகத்தைச் சேர்ந்தவன் என்ற உரிமையுடன் கேட்கிறேன். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இரண்டாவது வாக்கை எனக்கு அளியுங்கள்’ என்று முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக எம்.பி.க்களுக்கு கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கைய நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால்கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க தாங்கள் முடிவு எடுத்திருப்பதை நான் நன்றாகப் புரிந்து கொள்கிறேன். அரசியல் தர்க்கத்துக்கு உட்பட்ட…

Read More

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்த எஸ்.ஐ.: விசாரணை அதிகாரிக்கு வந்த கடிதத்தால் பரபரப்பு

சசிகலாவுக்கு சிறையில் சகல வசதிகளையும் செய்து கொடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு டிடிவி தினகரனும், இளவரசியின் மகன் விவேக்கும் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக விசாரணை அதிகாரி வினய்குமாருக்குப் புகார் கடிதம் வந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்தது பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரித்து வருகிறார். இந்நிலையில் வினய்குமார், சிறைத்துறை கூடுதல் டிஜிபி மேக்ரிக் ஆகியோருக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் பெயர் குறிப்பிடாமல் கூட்டாக புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். ஊடகங்களில் வெளியான அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடக மாநில தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கஜராஜ் மாகனூரு, பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்புப்…

Read More

அப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார்

அப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார்

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினை விடத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கி றார். மேலும், ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத் தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருடன் அதிகபட்ச பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு, கலாம் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என 2015-ல் பிரதமர் நரேந்திர…

Read More

அதிமுக இரு அணிகளும் டெல்லியில் முகாம்: பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – முதல்வர் கே.பழனிசாமி இன்று சந்திக்கிறார்

அதிமுக இரு அணிகளும் டெல்லியில் முகாம்: பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – முதல்வர் கே.பழனிசாமி இன்று சந்திக்கிறார்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள முதல்வர் கே.பழனிசாமியும் பிரதமரை இன்று சந்திக்க திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தமிழக அமைச்சர்கள் சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் தலைமையில் 6 அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை நேற்று சந்தித்து நீட் தேர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தினர். தொடர்புடையவை இதற்கிடையே குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக…

Read More
1 135 136 137 138 139 181