குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர், ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரினார் மோடி

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர், ஓபிஎஸ்ஸிடம் ஆதரவு கோரினார் மோடி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற் கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவருக் கான வேட்பாளரை பாஜக நேற்று முன்தினம் மாலை அறிவித்தது. மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக முதல்வர் கே.பழனிசாமியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி துணை குடியரசுத்தலைவர் வேட்பாள ருக்கு ஆதரவு கோரினார். இது தொடர்பாக நேற்று அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘‘பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரித்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரி வித்தார். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வெங்கய்ய நாயுடுவுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து,…

Read More

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் சம்பளம் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் வலியுறுத்தினர். குறிப்பாக முன்னாள் எம்.எல்.ஏ. கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வலியுறுத்தப்பட்டது. முதல்வர் பழனிச்சாமியின்…

Read More

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது; 20-ம் தேதி முடிவு தெரியும்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) காலை சரியாக 10 மணிக்குத் தொடங்கியது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 25-ம் தேதியு டன் முடிவடைகிறது. இதையடுத்து நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆச்சரியமூட்டும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அதே அறையின் டேபிள் எண் 6-ல் இருந்து வாக்களிக்கின்றனர்.

Read More

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரை சந்திக்க மாட்டோம்: அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரை சந்திக்க மாட்டோம்: அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரைச் சந்திக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நெடுவாசல் மக் கள், பேச்சுவார்த்தைக்கு வந்த அதி காரிகளை திருப்பி அனுப்பினர். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட் டம் நெடுவாசலில் 92-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத் தின்போது, மாவட்ட வருவாய் அலு வலர் எ.ராமசாமி, கோட்டாட் சியர்(பொ) ஜெயபாரதி, ஆலங்குடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது, “இந்தத் திட்டத் துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் உறுதி அளித் துள்ளார். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, முதல்வரைச் சந்தித்துப் பேச மக்கள் முன்வர வேண்டும்” என…

Read More

கதிராமங்கலத்தில் மயங்கி விழுந்தார் வைகோ

கதிராமங்கலத்தில் மயங்கி விழுந்தார் வைகோ

கதிராமங்கலத்தில் நடைபெற்ற ஆதரவுக் கூட்டத்தின் போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேடையில் இருந்து மயங்கி விழுந்தார். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யை அகற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட 10 பேரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் கடையடைப்பு மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பேரணியாக நடந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதற்குப் பிறகு மேடையில் ஆதரவுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைகோ…

Read More

ஓ.பன்னீர் செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது பதற்றம் அதிரடிபடை குவிப்பு

ஓ.பன்னீர் செல்வம் தோட்டத்தை முற்றுகையிட்ட 10 பேர் கைது பதற்றம் அதிரடிபடை குவிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்ªசல்வத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 200 அடி ஆழத்தில் ராட்சத கிணறுகள் தோண்டப்பட்டது. இதனால் அருகில் உள்ள கிணறுகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தோட்டத்தில் வெட்டப்பட்ட கிணற்றை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதனை மூட வேண்டும் எனவும் தெரிவித்து பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். அதிகாரிகள் சமரசம் செய்து உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் ஓ.பி.எஸ். தோட்டம் உள்ள பகுதியை அளந்து சர்வே செய்தனர். தொடர்ந்து லெட்சுமிபுரம் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நேற்று இரவு…

Read More

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் ஆர்ப்பாட்டம்: விசிக பங்கேற்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் ஆர்ப்பாட்டம்: விசிக பங்கேற்பு

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் தலைமையில் செயல்படும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் நீட் நுழைவுத் தேர்வு குறித்து, கடந்த 04.07.2017 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மமக, இ.யூ.மு.லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது. எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக்கோரி தமிழக…

Read More

கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா?- வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா?- வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு திட்டத்துக்கான வேலைகளில் ஈடுபட முயன்றதை எதிர்த்து விவசாயிகள், பொதுமக்கள் அறப்போராட்டம் நடத்தினர். இந்நிலையில், காவல்துறை அடக்குமுறையை ஏவியது. மேலும், இத்தகைய திட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் மீத்தேன் எதிர்ப்புப் போராட்ட இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது அபாண்டமாகப் பொய் வழக்குப் போட்டு தமிழக காவல்துறை அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. ஜெயராமன் உள்ளிட்டோரை பிணையில் விடுவிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்த காவல்துறை, நேற்று 10 பேர் மீது…

Read More

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும்

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதைக் கண்டித்து திரையரங்குகள் மூடப்பட்டிருகின்றன. ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு காரணமான தமிழக அரசின் புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 35 சதவீதம் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கேளிக்கை…

Read More

அ.தி.மு.க. அணிகள் இணைகிறது கட்சியை வழி நடத்த ஓ.பி.எஸ். தலைமையில் 7 பேர் குழு?

அ.தி.மு.க. அணிகள் இணைகிறது கட்சியை வழி நடத்த ஓ.பி.எஸ். தலைமையில் 7 பேர் குழு?

முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். மறைந்தபோது எவ்வாறு கட்சி பிளவுபட்டு நின்றதோ, அதேபோல் கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் அ.தி.மு.க. 3 பிரிவாக உள்ளது. முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் (அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா), முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றொரு அணியும் (அ.தி.மு.க. அம்மா) உருவாகியுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் ஒருங்கிணைந்தது. அதேபோல், இப்போதும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. முதலில், திரை மறைவுக்கு பின்னாலேயே 2 அணி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில், சசிகலா…

Read More
1 137 138 139 140 141 181