விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தேசிய அளவில் கொள்கை முடிவு தேவை: அன்புமணி

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய தேசிய அளவில் கொள்கை முடிவு தேவை: அன்புமணி

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்தியப் பிரதேசத்தில் வேளாண் விளைப்பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்கக்கோரியும், பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உணவு படைக்கும் கடவுள்கள் விஷயத்தில் மென்மையையும், பொறுமையையும் கடைபிடிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். இந்தியாவில் வேளாண்துறை வளர்ச்சியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும். ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட…

Read More

கட்சி ஒற்றுமையை சசிகலா விரும்புவதாக தகவல்: அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு முயற்சியில் சசிகலா தம்பி திவாகரன்

கட்சி ஒற்றுமையை சசிகலா விரும்புவதாக தகவல்: அ.தி.மு.க. இரு அணிகளின் இணைப்பு முயற்சியில் சசிகலா தம்பி திவாகரன்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் புயல் வீசி வருகிறது. அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்று இரண்டாக பிரிந்த அ.தி.மு.க. தற்போது 3 ஆக உடைந்துள்ளது. அ.தி.மு.க. (அம்மா) அணியில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரை ஆதரித்து வந்த 122 எம்.எல்.ஏ.க்களில் 30 பேர் டி.டி.வி.தினகரனை ஆதரிக்க போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா மனமாற்றம் அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமீன் பெற்று திரும்பியதும், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர்…

Read More

டி.டி.வி.தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்திப்பு; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி

டி.டி.வி.தினகரனுடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து சந்திப்பு; எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி

‘கட்சி பணியில் மீண்டும் ஈடுபடுவேன்’ என்று அவர் அறிவித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் 27 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள். 60 நாட்கள் பின்னர், பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘இனியும் டி.டி.வி.தினகரனுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம்’ என்று கூறினார். அந்த நேரத்தில், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.டி.வி.தினகரன், ‘என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்குத்தான் உள்ளது. 60 நாட்கள் காத்திருந்து கட்சி நடவடிக்கைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளேன்’ என்றார். 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவு தெரிவித்த 11 எம்.எல்.ஏ.க்களும் அவருடன் சென்றனர். அதாவது, தங்க தமிழ்ச்செல்வன்…

Read More

அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதி; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்ட அறிவிப்பு

அ.தி.மு.க. (அம்மா) அணியில் இருந்து தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதி; அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்ட அறிவிப்பு

அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி.தினகரனை விலக்கி வைக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க.வில் பிளவு தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் பொதுச் செயலாளராக இருந்த அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. ஒரு அணிக்கு கட்சியின் புதிய பொதுச் செயலாளரான சசிகலாவும், மற்றொரு அணிக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தலைமை வகித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்–அமைச்சராகவும் பதவி ஏற்றுக்கொள்ள சசிகலா முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் சசிகலா சரண் அடைந்தார். பின்னர், அங்குள்ள சிறையிலேயே அவர் அடைக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம்…

Read More

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்

காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல்காந்தி தீவிர ஆலோசனை தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபடுமாறு அறிவுறுத்தினார்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் அவரின் 60 ஆண்டு கால சட்டமன்ற பணிகள் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று முன்தினம் சென்னை வந்தார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ராகுல்காந்தி நேற்று காலை தமிழக, புதுச்சேரி கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் புதுச்சேரி மாநில மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண் டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து பகல் 12 மணிக்கு தி.மு.க. தலைவர்…

Read More

சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டார் டிடிவி தினகரன்

சசிகலாவை சந்திக்க பெங்களூரு புறப்பட்டார் டிடிவி தினகரன்

சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பெங்களூரு புறப்பட்டார். இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை சென்ற பின்னர் கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டன. தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் கட்சியில் இருந்து ஒதுக்கிவைப்பதாக அதிமுக அம்மா அணி மூத்த அமைச்சர்கள் அறிவித்தது. ஓபிஎஸ் அணியுடன் இணைப்புக்கு 7 பேர் கொண்ட குழு அமைத்தது, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலா பேனர்களை அகற்றியது என பல்வேறு அரசியல் நகர்வுகள் இருந்தன. இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற…

Read More

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: மொத்த செலவு ரூ.50,000 கோடி

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: மொத்த செலவு ரூ.50,000 கோடி

கூடங்குளத்தில் உள்ள இந்தியாவின் பெரிய அணு மின் நிலையத்தில் மேலும் 2 அணு உலைகளை நிர்மாணிக்க ரூ.50,000 கோடி செலவாகும். இந்தச் செலவில் பாதித்தொகையை ரஷ்யா கடனாக வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் 7 ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி நடைபெறத் தொடங்கும் என்று இந்திய அணு மின் நிறுவன சேர்மமும் நிர்வாக இயக்குநருமான எஸ்.கே.சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் 5 மற்றும் 5-வது அணு உலைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் வியாழனன்று கையெழுத்திட்டது. “இந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கும் ஆகும் செலவு ரூ.50,000 கோடி, இந்த புதிய இரண்டு அணு உலைகளில் முதலாவது 66 மாதங்களில் உருவாகும் 2-வது அணு உலை இதன்…

Read More

இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

முதல்வர் தொடங்கி வைத்த மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தப்பட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். சில வாரங்களில் அணை முழுவதும் தூர்வாரி முடிக்கப்படும். அதனால் அணையின் கொள்ளளவு 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது. அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தேவையான அளவுக்கு இலவசமாக அள்ளிச் செல்லலாம் என்று முதல்வர் அறிவித்திருந்ததால், வண்டல்…

Read More

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்

ஜெயலலிதா, சசிகலா சொத்துகள் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் பறிமுதல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர் புடைய ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான 6 நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்ய தமிழ் நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பரவியிருக்கும் சொத்துகளை எந்த வகையில் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் திணறியது. பின்னர் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டபோது, தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி அந்த சொத்துகளை பறிமுதல் செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெய லலிதா,…

Read More

சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் செயல்படுகிறார் பிரதமர்: டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சர்வாதிகாரத்துடன் பிரதமர் மோடி செயல்பட்டு வரு கிறார் என மாநிலங்களவை திமுக உறுப்பினர் டிகேஎஸ் இளங் கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இறைச்சிக்காக மாடுகள் விற் பதற்கு மத்திய அரசு தடை விதித் துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழ கம் சார்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடை பெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலை வர் தா.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பீமராவ், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Read More
1 140 141 142 143 144 181