5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்கள் பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டுறவு சங்க பயிர் கடன் தமிழ்நாட்டில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும். நியாயமான நடவடிக்கை தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில், அனைத்து விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இயற்கை அதன் கொடுங்கரங்களால் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும்போது, அது சிறு, குறு விவசாயிகள்,…

Read More

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன

சொத்து குவிப்பு வழக்கில் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் ஆகின்றன

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்துவைத்துள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு முதல்-அமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான்மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. இதற்கிடையே ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். தற்போது கோர்ட்டு…

Read More

மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் மோடி அரசு தடை: ஜூன் 2 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மாடுகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்து வெளியிட்டுள்ள அறிவிக்கையை அடுத்து ஜூன் 2-ம் தேதி தமிழகம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்கும் விற்பதற்கும் மத்திய அரசு தடை விதித்திருப்பது மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு சமம். இந்த அறிவிப்பை உடனடியாக பாஜக அரசு திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மத்தியில் ஆளும் மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத அறிவிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஜூன் 2 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…

Read More

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி: தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்

மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு முதல்முறையாக தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத் தார். ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆகஸ்ட் 21-ம் தேதி கட்டப்பட்டது. அணை கட்டி முடிக்கப்பட்டு 82 ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்ட நிலை யில், இதுவரை அணையில் தூர் வாரப்படவில்லை. இந்நிலையில், மேட்டூர் அணையில் மூலக்காடு நீர்பரப்புப் பகுதியில் தூர்வாரும் பணியை தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். அணையின் வலது கரைப் பகுதியில் உள்ள மூலக்காடு, கொளத்தூர், பண்ணவாடி, இடது கரைப் பகுதியில் உள்ள கூணான் டியூர் மற்றும்…

Read More

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அரசின் முடிவை அரசியலாக்க வேண்டாம்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: அரசின் முடிவை அரசியலாக்க வேண்டாம்; மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அரசு தொடங்கி இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். குறிப்பாக மேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை முதல்-அமைச்சர் தொடங்கி இருப்பதாக வருகிற செய்தி பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. மழை வரும் போது அவர்கள் தூர்வாரும் பணியை தொடங்கி இருக்கிறார்கள். 2 மாதத்திற்கு முன்னதாக இந்த பணியை தொடங்கி இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்டம் மற்றும் பொம்மைகள் செய்யக்கூடியவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும். ஆற்று மணலை நேரடியாக விற்பனை செய்யும் நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பது பாராட்டுக்குரியது….

Read More

ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

ஒரு வாரத்திற்குள் அணிகள் இணைப்புக்கு வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் சீனிவாசன் பேட்டி

கொடைக்கான‌லில் வ‌ன‌த்துறை அமைச்ச‌ர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியார்களிடம் கூறியதாவது: நடிகர் ர‌ஜினி அர‌சிய‌லுக்கு வ‌ருவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து. பேச்சுவார்த்தையின் அம்சங்கள் குறித்து தற்போது வெளியிட முடியாது. அணிகள் இணைப்புக்கு பேச்சுவார்த்தை நடப்பதாக முதல்-அமைச்சர் கூறியது உண்மை தான். அனைத்து அமைச்ச‌ர்க‌ளையும் கூட்டி முதல்-அமைச்சர் த‌லைமையில் மாட்டிறைச்சி விவ‌கார‌த்தில் முடிவெடுக்க‌ப்ப‌டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பா.ஜ.க. அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா: சென்னையில், பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 3 ஆண்டுகால சாதனைகள் குறித்து, தமிழ் மொழியில் இணையதளம் தொடங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இணையதளத்தை தொடங்கிவைத்தார். இதனைதொடர்ந்து பிரதமர் மோடியின் உருவம் பொறித்த ஸ்டிக்கரை, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட, டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அப்போது இல.கணேசன் எம்.பி. உடன் இருந்தார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் 4-ம் ஆண்டு தொடக்க விழாவினை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்….

Read More

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி இரவில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணமடைந்தார். அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் வைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வந்தது. இந்தநிலையில் 24-ந்தேதி டெல்லிக்குச்சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தார். பிரமாண்ட விழா மேலும், இதற்காக தனி விழாவை தமிழக அரசு பிரமாண்டமான அளவில் நடத்த இருப்பதாகவும், அதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அழைப்பு விடுத்தார். இந்த விழா சட்டசபையில் நடைபெற உள்ளது. விழா நடக்கும் நாள் பற்றி தற்போது அரசு ஆலோசித்து வருகிறது….

Read More

8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

“பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை தேர்வு இல்லாத நிலையை மாற்ற வேண்டும்” என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டி: மோடி நாட்டின் பிரதமரான பிறகு பாமர மக்களின் வங்கிக் கணக்கு ரூ. 4 கோடியிலிருந்து, ரூ. 28 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டில் 23 கோடி பேருக்கும், குமரி மாவட்டத்தில் 82 ஆயிரம் பேருக்கும் ரூபே கார்டு வழங்கப்பட்டுள்ளது. பாமர மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட விபத்து காப்பீடு திட்டத்தில் குமரியில் 1.26 லட்சம் பேரும், தமிழகத்தில் 65 லட்சம் பேரும் இணைந்திருக்கின்றனர். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் குமரியில் 1,600 பேரும், தமிழகத்தில் 2.14 லட்சம் பேரும்…

Read More

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் கருத்து

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் கருத்து

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓ.பன்னீர் செல்வம் பாஜகவில் சேர்ந்து விடுவதே நல்லது என நாஞ்சில் சம்பத் பேசினார். டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் ஒரு பிரிவினர் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மதுரை சுப்பிர மணியபுரத்தில் நேற்று இரவு கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தி செல்ல பெரும் பங்கு வகித்தவர் சசி கலா. ஆனால், ஆட்சியிலோ, கட்சியிலோ பதவிகளுக்கு வர அவர் ஆர்வம் காட்டவில்லை. ஓ. பன்னீர்செல்வம் அரசியலுக்கு வர வாசல் அமைத்துக் கொடுத்தவர் சசிகலா. ஆனால், இன்று ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும், அதிமுக வையும்…

Read More
1 141 142 143 144 145 181