தினகரன் ஜாமீன் மனு விசாரணை 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) நடைபெறவிருந்த நிலையில் தினகரனின் வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். முன்பணமாக கொடுக்கப்பட்ட…
Read More









