பேச்சுவார்த்தைக்கு நான் முட்டுக்கட்டை போட்டேனா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
பேச்சுவார்த்தைக்கு தான் முட்டுக்கட்டை போடவில்லை என்றும், பாண்டியராஜன் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். குற்றச்சாட்டு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2 ஆக உடைந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இரு அணிகளும் தினந்தோறும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருவதால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்தநிலையில், திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியை சேர்ந்தவருமான க.பாண்டியராஜன், அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதில் அமைச்சர் ஜெயக்குமார் முட்டுக்கட்டை போடுகிறார் என்று கருத்து தெரிவித்து இருந்தார். அவரின் இந்த கருத்து சிறந்த நகைச்சுவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தற்போது பதிலடி…
Read More








