தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசியுள்ளார். இதன் பின்னணியில் தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சி இருப்பதாக கருத்து எழுந்துள்ளது. நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சர்தார் பட்டேல் பிறந்த நாள் கொண்டாடப்படும் முக்கியத் துவத்தை எடுத்துக்கூறினார். ‘ஒரே நாடு, உயர்ந்த நாடு’ என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இது கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார். அப்போது நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை சுட்டிக் காட்டினார். இதில் குறிப்பாக தமிழ்மொழி குறித்து அவர் பேசியது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற எடுத்த முயற்சி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. நிதி…

Read More

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற்றம்: கே.வி.ராமலிங்கம் எம்எல்ஏ கருத்து

அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்ப்பந்தத்தால் சசிகலா படம் அகற் றப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பின ருமான கே.வி.ராமலிங்கம் தெரிவித் தார். ஈரோட்டில் நேற்று ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது: அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்காக ரூ.50 கோடி வரை பேரம் பேசி யது யார் என்று இதுவரை சொல்ல வில்லை. யாருக்காக லஞ்சம் கொடுக்கச் சென்றனர் என்பதையும் தெரியப்படுத்தவில்லை. யாரோ ஒருவர் சொன்னதை வைத்து தினகரனை கைது செய் துள்ளனர். அவரை மிரட்ட வேண் டும் என்று கைது செய்துள்ளனர். அதிமுக இரு அணிகளையும் இணைப்பது…

Read More

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

விவசாயிகளுக்காக ஸ்டாலின் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்: வைகோ குற்றச்சாட்டு

திமுக ஆட்சியின் போது விவசாயிகளுக்காக ஒன்றுமே செய்யாத மு.க.ஸ்டாலின் தற்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என வைகோ குற்றம் சாட்டினார். கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பின்னர் அவரது காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க…

Read More

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

தாயும்,தந்தையும் இல்லாத கட்சியாக அதிமுக உள்ளது அமைச்சர் செல்லூர் ராஜூ உருக்கம்

எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தாய் தந்தையை இழந்து தவிப்பது போல தனித்துவிடப்பட்டுள்ளோம்.அ.திமு.,க இணைய வேண்டும் என இரு அணி தலைவர்களும் விரும்புகிறார்கள்.அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுக ஒன்றாக செயல்படும். கூட்டுறவு வங்கிகள் தனியார் வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. ரூ 7 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Read More

நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நியாயமான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்து தமிழகத்தில் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மின்வெட்டு தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கடுமையான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோடை வெயிலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகிவிட்டதாகக் கூறி இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது மின்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும். வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.1,156 கோடியை தமிழக அரசு செலுத்தாததால், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 1,065 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்திவிட்டது. சென்னையில்…

Read More

கொடநாடு காவலாளி கொலை: உண்மையான காரணத்தை அரசு விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு காவலாளி கொலை: உண்மையான காரணத்தை அரசு விளக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

கொடநாடு பங்களாக காவலாளி கொலை தொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கும், பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருக்கிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாக காவலாளி ஓம்பகதூர் என்பவர் கடந்த 23-ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கி எடுத்திருக்கிறது. குறிப்பாக அதிமுக நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் பெரும் பதட்டத்தை உண்டாக்கியிருக்கிறது. நள்ளிரவில் பல வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஜெயலலிதா பங்களா என்று தெரிந்தே, அத்துமீறி உள்ளே நுழைந்து, அவர்களைத் தடுத்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு, பல சூட்கேஸ்களில் ஆவணங்களை அள்ளிச் சென்றதாக பத்திரிகைகளில்…

Read More

அரசு ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அரசுடன் பேச்சு நடத்திய பின் ஊழியர் சங்கம் அறிவிப்பு

அரசு ஊழியர் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு: அரசுடன் பேச்சு நடத்திய பின் ஊழியர் சங்கம் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு அளித்த உறுதியை தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்தது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. போராட்டத்தை யொட்டி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழகம் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன….

Read More

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் – தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை

தமிழ்நாடு மின்வாரியம் நிலுவைத் தொகை செலுத்தவில்லை: வல்லூர் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம் – தேசிய அனல் மின் கழகம் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. தேசிய அனல் மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து அமைத்துள்ள இந்த அனல் மின் நிலையம் 3 அலகுகள் கொண்டது. இங்கு கிடைக்கும் 1,500 மெகாவாட் மொத்த மின் உற்பத்தியில், தமிழகத்தின் பங்காக 1066.95 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மின்சாரம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. வல்லூர் அனல் மின் நிலையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் கடந்த மார்ச் வரை தமிழகத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்ததற்காக, தேசிய அனல்மின் கழகத்துக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்…

Read More

டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் இன்று சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

டி.டி.வி.தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் இன்று சென்னைக்கு அழைத்து வருகிறார்கள்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. விசாரணை இந்த வழக்கில் முதலில் கடந்த 16–ந் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள்…

Read More

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் சப்–இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகம், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.அலுவலகமும் இங்கு தான் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் மோட்டார் வாகனப்பிரிவில் பணியாற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன பழைய போலீஸ் கமி‌ஷனர் அலுவலக வளாகத்தில், 24 மணி நேரமும் போலீசார் காவலுக்கு உள்ளனர். போலீஸ் காவலையும் மீறி மோட்டார் சைக்கிள் திருட்டுப்போன சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More
1 148 149 150 151 152 181