டெல்லியில் சேலை அணிந்த தமிழக விவசாயிகள் ‘தாலி அறுத்து’ போராட்டம்
டெல்லியில் இன்று (சனிக்கிழமை) சேலை அணிந்த ஆண் விவசாயிகள் ‘தாலி அறுக்கும்’ போராட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியோரின் தலைவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்து உரையாற்றினர். டெல்லியின் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 33-வது நாளை நிறைவு செய்துள்ளது. இது, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்படப் பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளன. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு…
Read More









