ஆர்.கே.நகரில் தினம் ஒரு பரிசு.சங்கேத வார்த்தை, வீட்டு உபயோகபொருட்கள், தேர்தல் அதிகாரிகள் தவிப்பு

ஆர்.கே.நகரில் தினம் ஒரு பரிசு.சங்கேத வார்த்தை, வீட்டு உபயோகபொருட்கள், தேர்தல் அதிகாரிகள் தவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா , தினம் ஒரு பரிசு, வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிகின்றன. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது. அந்த தொகுதியில் மொத்தம் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது. பணப்பட்டு வாடாவைத் தடுக்க தலைமை தேர்தல் கமிஷன் 35 பார்வையாளர்கள், 10 பறக்கும் படைகள் உள்பட பல ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் அவை அனைத்தையும் மீறி மிகத் திறமையாக பணப் பட்டுவாடா நடத்தப்பட் டுள்ளது. இதற்கு “சங்கேத வார்த்தை”யை…

Read More

பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி மலரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் ஜெயலலிதா விரும்பிய ஆட்சி மலரும்; ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளுக்கு உட்பட்ட ஏகப்பன் தெரு, முனியப்பன் தெரு, கருமாரியம்மன் தெரு, தங்கவேல் பிள்ளை தெரு, மதுரை முத்து தெரு, மண்ணப்பன் தெரு, சாய்பாபா கோவில் தெரு உள்பட்ட இடங்களில் திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, கே.பாண்டியராஜன் உள்பட நிர்வாகிகளும் ஆதரவு திரட்டினர். பிரசாரத்தின்போது வாக்காளர்களிடையே ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:– இரும்பு கோட்டை ஒரு குடும்பத்தின் பிடியில், கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதே…

Read More

காசிமேட்டில் படகில் சென்று கங்கை அமரன் நூதன பிரசாரம் நடுகடலில் மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்

காசிமேட்டில் படகில் சென்று கங்கை அமரன் நூதன பிரசாரம் நடுகடலில் மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்

தினமும் தொகுதி மக்களிடம் பாட்டு பாடி ‘தாமரை’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகு மூலம் நடுகடலுக்கு சென்றார். அவருடன் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில மீனவரணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர்கள் செம்மலர் சேகர், தாமோதரன் உள்பட நிர்வாகிகளும் படகில் சென்றனர். நடுகடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர்களிடம், ‘‘மீனவர்கள் படும் கஷ்டத்தை நேரில் அறிந்து வாக்கு சேகரிப்பதற்காக படகில் உங்களை தேடி வந்துள்ளேன். என்னை நீங்கள் வெற்றி பெறச்செய்தால் உங்களது வாழ்வாதாரம் மேம்பட அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து…

Read More

டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர்: ஓபிஎஸ் அணியில் இணைந்த ராஜ கண்ணப்பன் பேட்டி

டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர்: ஓபிஎஸ் அணியில் இணைந்த ராஜ கண்ணப்பன் பேட்டி

டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர். அவரை 60 சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகதான் கருதுகிறோம். எங்கள் உண்மையான எதிரி திமுக தான் என்று முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திங்கட்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆதரவு தெரிவித்தார். ஓபிஎஸ் பொன்னாடை போர்த்தி ராஜ கண்ணப்பனை வரவேற்றார். அப்போது ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கட்சியில் உள்ளேன். டிடிவி தினகரன் ஒரு ஜோக்கர். அவரை 60 சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவராகதான் கருதுகிறோம். எங்கள் உண்மையான எதிரி திமுக தான். ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் இ.மதுசூதனன்…

Read More

வன்முறையில் ஈடுபட டி.டி.வி.தினகரன் அணியினர் திட்டம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரிக்கை

வன்முறையில் ஈடுபட டி.டி.வி.தினகரன் அணியினர் திட்டம்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரிக்கை

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த எம்.பி.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– எங்கள் அணியின் தலைவரும், முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரம் செய்யும்போது, அங்கு சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் மிகப்பெரிய அளவில் வன்முறையை நடத்த வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள். மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் ஆகியோரை அ.தி.மு.க. அம்மா அணியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தூண்டிவிட்டிருக்கிறார். செருப்பு காட்டி எதிர்ப்பு 2–ந் தேதியன்று மாலை 6 மணி அளவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ….

Read More

‘களை’ இழந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம், வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்

‘களை’ இழந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம், வேலைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்

ஜெயலலிதாவின் தாய் சந்தியா ஆசையாக வாங்கிய இடம். தாயின் நினைவாக வேதா நிலையம் என்று அந்த வீட்டுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டினார். அந்த வீட்டை ஜெயலலிதா மட்டு மல்ல அவரை உயிராக நேசிக்கும் தொண்டர்களும் ஒரு கோவில் போலவே போற்றினார்கள். கால் நூற்றாண்டுக்கும் மேலாக பலத்த போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு என்று அந்த இல்லமே எப்போதும் பரபரப்பாக இருக்கும். அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள், பிரதமர்கள் என்று பலர் தடம் பதித்த இடம் அது. ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அந்த வீட்டை ஒரு நினைவு இல்லாமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொண்டர்கள் முன்வைத்தனர். ஆனால் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக 33 ஆண்டுகள் அதே வீட்டில்…

Read More

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3,316 மதுபான கடைகள் மூடல்: நெடுஞ்சாலையோர கிளப்களிலும் மதுபான விற்பனை நிறுத்தம்

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3,316 மதுபான கடைகள் மூடல்: நெடுஞ்சாலையோர கிளப்களிலும் மதுபான விற்பனை நிறுத்தம்

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள 3,316 மதுபான கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் 5,672 மதுபான கடைகளை தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக் நடத்தி வருகிறது. இதில் 3,316 மதுபான கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ளன. இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுபானக் கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் மார்ச் 31-ம் தேதி இரவுக்குள் நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மது பானக் கடைகள் அனைத்தையும் கட்டாய மாக மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் கூறியது. இதனையடுத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள…

Read More

ஆர்.கே.நகர் பகுதியில் ஜெயலலிதா பாணியில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

ஆர்.கே.நகர் பகுதியில் ஜெயலலிதா பாணியில் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஓ.பன்னீர்செல்வம் நேற்று கொருக்குப்பேட்டை பகுதிக்குட்பட்ட எழில் நகர், தொப்பை விநாயகர் கோவில் வீதி சந்திப்பு, அண்ணாசாலை, அன்னை சத்தியாநகர், கருமாரியம்மன் நகர், கோபால் ரெட்டி நகர், கார்னேசன் நகர் குடியிருப்பு, குமரன் நகர், சிவாஜி நகர், வைத்தியநாதன் பாலம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், கூட்டணி கட்சியான இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஜவஹர் அலி உள்பட நிர்வாகிகளும் வாக்கு சேகரித்தனர். கொள்கை–கோட்பாடு ‘மின் கம்பம்’ சின்னத்துக்கு…

Read More

இரட்டை வேடம் போடும் தி.மு.க பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

இரட்டை வேடம் போடும் தி.மு.க பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம்

தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் முதலில் இந்தி மொழியில் தான் ஊர்ப்பெயர் எழுதப்பட்டிருக்கும். அடுத்து ஆங்கிலம், அதனையடுத்தே தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு தான் இவ்வாறு எழுதப்படுகிறது என்று திமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், ”மைல்கற்களில் இந்தி எழுதப்பட்டிருப்பதில் இரட்டை வேடம் போடுகிறது திமுக. காரணம், 2006ஆம் ஆண்டு, திமுக மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் டி.ஆர் பாலு. அவர்தான் இந்தியில் எழுத உத்தரவு போட்டார். ஆனால், இப்போது திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்தியில் எழுத உத்தரவு போட்ட டி.ஆர் பாலுவை கட்சியை விட்டு…

Read More

தமிழக அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

தமிழக அளவில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், பழைய வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் கடந்த 30–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  இந்த போராட்டம் நேற்று 4–வது நாளாக நீடித்தது.சரக்குகள் தேக்கம் இந்த போராட்டம் காரணமாக லாரிகள் ஓடாததால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சரக்கு போக்குவரத்து தடைபட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள…

Read More
1 156 157 158 159 160 181