குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : “இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” – அமித் ஷா
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். “யாராவது உங்களை அச்சத்திற்கு உள்ளாக்க முயற்சித்தாலும் அச்சப்படாதீர்கள்” என்று அவர் கூறினார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை)மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சட்ட மசோதாவால் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த…
Read More









