குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : “இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” – அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : “இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” – அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். “யாராவது உங்களை அச்சத்திற்கு உள்ளாக்க முயற்சித்தாலும் அச்சப்படாதீர்கள்” என்று அவர் கூறினார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை)மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சட்ட மசோதாவால் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த…

Read More

நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் – மு.க. ஸ்டாலின்

நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் – மு.க. ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியில் 1,20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்துள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 80-ம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போது 7 நிர்வாகிகளில் ஒருவராக இளைஞரணியில் பணியை தொடங்கினேன். நான் கலைஞரின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடத்தில் வாங்கியிருக்கிறேன். நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன். நான் பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதி செயலாற்ற வேண்டும். இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். உதயநிதி மீது…

Read More

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ., கடுமையான விளைவுகளை சந்திக்கும் – சிதம்பரம் எச்சரிக்கை

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ., கடுமையான விளைவுகளை சந்திக்கும் – சிதம்பரம் எச்சரிக்கை

திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வான ரகுபதியின் வீட்டிற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அங்கு ரகுபதி மற்றும் காங்., நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது: குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. மத்திய அரசு இதற்கு பதிலாக எல்லா நாடுகளிலும் உள்ளது போல முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். அதிலுள்ள பல மரபுகளை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை என்ற தவறான சட்டத்தை அரசு கொண்டு வருகிறது….

Read More

பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் – இலங்கை தமிழ் எம்.பி

பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் – இலங்கை தமிழ் எம்.பி

பிரபாகரன் உடனான தனது மலரும் நினைவுகளை மேடைதோறும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்துவருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசுவதாக தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன். விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். பிரபாகரன் குறித்தும்…

Read More

தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா – மோடி

தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா –  மோடி

வலிமையான இலங்கை அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் கோத்தபயவை தேர்வு செய்தனர். வலிமையான இலங்கை என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கடல் பகுதிக்கும் முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா இலங்கை இடையே வலிமையான உறவு உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், இலங்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் கண்டனம் தெரிவிப்பதுடன், போரிட்டும் வருகிறது. இலங்கைக்கு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 50 மில்லியன் டாலரும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலரும், சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா செய்யும். இலங்கையில், இந்தியா சார்பில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி…

Read More

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்

சமீபத்தில் நடந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். டில்லியில் அவர், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்த இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும், பொதுமக்களும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு. இந்தப் பின்னணியில் கோட்டாபய இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார்….

Read More

சிதம்பரத்தின் மகன் கார்த்தியை கைது செய்வதற்காக காத்திருக்கிறோம் – அமலாக்கத்துறை

சிதம்பரத்தின் மகன் கார்த்தியை கைது செய்வதற்காக காத்திருக்கிறோம் – அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்காக நடவடிக்கைக்காக காத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வாதத்தை கேட்ட சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமின் கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ”12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், 12 வெளிநாட்டு சொத்துக்களில் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் கண்டறியப்பட்ட சொத்துக்களுடன் சிதம்பரத்திற்கு தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது” என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. அதை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்க டில்லி…

Read More

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு – சோனியா, ராகுல் ஆப்சென்ட்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு – சோனியா, ராகுல் ஆப்சென்ட்

மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. விழாவிற்கு பங்கேற்காதது குறித்து இருவரும் உத்தவுக்கு கடிதம் அனுப்பினர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ‘மகா விகாஸ் அஹாதி’ எனப்படும் மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணியை அமைத்தன. இந்த கூட்டணி தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணி, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இன்று(நவ.,28) மாலை 6.40 மணிக்கு…

Read More

நாதுராம் கோட்சே தேசபக்தர் – பா.ஜ எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேச்சு

நாதுராம் கோட்சே தேசபக்தர் – பா.ஜ எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேச்சு

நாதுராம் கோட்சே தேசபக்தர் என பா.ஜ.வைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மஹாத்மா காந்தியை கொன்றது ஏன் என நாதுராம் கோட்சே கூறியதை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது குறிக்கிட்ட பா.ஜ. பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் “ஒரு தேசபக்தரை உதாரணமாக கூறக்கூடாது” என்றார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பிரக்யா தொடர்ந்து பேச முற்பட்டார். அவரை பா.ஜ.வினர் உட்காரும்படி சமாதானப்படுத்தினர்.”ராஜா பேசியது மட்டுமே சபைக் குறிப்பில் இடம்பெறும்” என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர…

Read More

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு சிதம்பரம் – ஜாமின் தராமல் மறுக்க பில்லாவா? ரங்காவா? – காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல்

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு சிதம்பரம் – ஜாமின் தராமல் மறுக்க பில்லாவா? ரங்காவா? – காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல்

‘ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தியின் தந்தை என்பதற்காக மட்டுமே சிதம்பரத்துக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. ஜாமின் தராமல் மறுக்க அவர் என்ன பில்லாவா? ரங்காவா?’ என அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது. அவரது ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் 20ல் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று(நவ.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்…

Read More
1 79 80 81 82 83 181