போராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும்-பிரியங்கா வாத்ரா

போராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும்-பிரியங்கா வாத்ரா

போராடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கும் உ.பி., அரசும், மாநில போலீசும் அராஜகத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் போலீஸ் அதிகாரி தாராபுரியின் குடும்பத்தாரை சந்திக்க காங்., பொதுச்செயலர் பிரியங்காவை, லக்னோ போலீசார் அனுமதிக்கவில்லை. அதையடுத்து, கட்சித் தொண்டரின், ‘பைக்’ கில் சென்றார். அதையும் போலீசார் தடுத்ததால், நடந்து சென்றார். இது குறித்து பிரியங்கா கூறுகையில், ‘என்னிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்டனர்; கழுத்தை நெரித்தனர்’ என்றார். இதனை உத்தர பிரதேச பெண் போலீஸ் அதிகாரி மறுத்தார். ‘கழுத்தை நெரிக்கவில்லை; என்னுடைய கடமையைத் தான் செய்தேன்’ எனக்…

Read More

இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் – பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய கவிஞர் வைரமுத்துவை கொவ்ரவிக்க மாட்டார் !!

இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் – பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய கவிஞர் வைரமுத்துவை கொவ்ரவிக்க மாட்டார் !!

சென்னை SRM பல்கலை கழகத்தில், இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பயின்று முடித்த மாணவர்களுக்கு டிகிரி வழங்கி பேச வர இருந்தார். அதே சமயத்தில் அவர் பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கும் கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிப்பார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கு கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிக்கக்கூடாதென பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல பெண்கள் ஆர்வலர் குழுக்களும், தாய் ஆண்டாளை அவதூறாக பேசிய மதவாத ஹிந்து துரோகியை சிறப்பித்து மக்களையும் நமது தேசத்தையும், சனாதன தர்மத்தையும், ஹிந்து மக்களையம் ராஜ்நாத் சிங் இழிவு…

Read More

” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்

” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்

மானமிகு தமிழினத் தலைவர் ” ஓசி சோறு ” தி.க வீரமணி, இதே போல, ரம்ஜான் மாதத்தில் பிறை வந்த பின்பே உண்ண வேண்டும் எனும் நம்பிக்கையையும் எதிர்த்து, பிறை வரும் முன்பே மசூதி எதிரில் உணவு உண்பர் என தெரிவித்துக்கொண்டு.. தமிழக மக்கள் ” ஓசி சோறு ” தி.க வீரமணிக்கு கேள்வி !! உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே ? பதில் அழிப்பரா அல்லது எப்போதும்போல் ஓடி பதுங்குவாரா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும் .  

Read More

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற பாஜக, அதிக இடங்களில் வென்ற ஜே.எம்.எம்

ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்: அதிக வாக்குகள் பெற்ற பாஜக, அதிக இடங்களில் வென்ற ஜே.எம்.எம்

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலுக்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 47 இடங்களில் வென்றுள்ளது. அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும், அதிக சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சியாக பாரதிய ஜனதா கட்சியும் உள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகள் மூலம் தெரியவருகிறது. மாவோயிஸ்டுகள் பிரச்சனை தீவிரமாக உள்ள இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதால், இங்கு 81 தொகுதிகளே உள்ளபோதிலும் நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெற 41 இடங்கள் தேவை. கட்சி தொகுதிகள்…

Read More

மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று… – பா.ஜ.க.

மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று… – பா.ஜ.க.

பெரியாரின் நினைவு தினமான இன்று, பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பிரிவின் ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “மணியம்மையின் தந்தை ஈவே ராமசாமியின் நினைவு தினமான இன்று குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்து போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க இன்று உறுதி கொள்வோம்” எனக் கூறப்பட்டிருந்தது. பா.ஜ.கவின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு பா.ஜ.கவின் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. ஐ.டி. பிரிவின் தலைவர் நிர்மல்குமார், “கூட்டணித் தலைவர்களும் எங்கள் தலைவர்களும் கேட்டுக்கொண்டதால் அந்தப் பதிவை நீக்கிவிட்டோம். ஆனால், அதில்…

Read More

மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா, இந்தியாவாக உள்ளது. அவரை போன்ற இரும்பு மனிதர் இல்லையெனில் வன்முறையால் நாடு துண்டாடப்பட்டிருக்கும். இந்தியாவிற்கு மோடியின் தலைமையும், தமிழகத்திற்கு பழனிச்சாமியின் தலைமையும் தேவை. நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு இல்லை. அதிமுக ஆதரிக்கும் எல்லா திட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக.,விற்கு நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என…

Read More

எப்போதும் சிறுபான்மைக்கு உழைப்போம்: ஸ்டாலின் பேச்சு

எப்போதும் சிறுபான்மைக்கு உழைப்போம்: ஸ்டாலின் பேச்சு

இலங்கை தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும் எனவும், குடியுரிமை சட்டம் பற்றியே தெரியாமல் அதை முதல்வர் ஆதரிக்கிறார் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் வரும் டிச.,23ம் தேதி சென்னையில் பேரணி நடைபெறுகிறது. இதில் திமுக.,வின் கூட்டணி கட்சிகள் மற்றும் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், கொளத்தூரில் கிறிஸ்துமஸ் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இல்லாவிட்டலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சி திமுக. இலங்கை தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் திமுக என்றைக்கும் பாதுகாப்பாய் துணை நிற்கும். திமுக.,வின் பேரணிக்கு அனைவருக்கும் அழைப்பு…

Read More

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது  ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார். பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள…

Read More

மன்மோகன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ

மன்மோகன் கேட்ட குடியுரிமை சட்டம் : வைரலாகும் வீடியோ

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி, 2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில் காங்., முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வீடியோவை பா.ஜ., வெளியிட்டுள்ளது. தற்போது பா.ஜ.,அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வரும் முக்கிய கட்சியாக காங்., இருந்து வருகிறது. இந்த நிலையில் 1.08 நிமிடங்களை கொண்ட மன்மோகனின் உரை இடம்பெற்ற வீடியோவை பா.ஜ., இன்று (டிச.,19) வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பா.ஜ., அந்த வீடியோவுடன், “2003 ம் ஆண்டு ராஜ்யசபாவில்…

Read More

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் – பா.ஜ.க

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் – பா.ஜ.க

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. எனவே, மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பா.ஜனதா சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சாவர்க்கரை ‘மண்ணின் மைந்தர்’ என்று கூறினார். ஆனால், அவருடைய பேரன் ராகுல் காந்தியோ, சாவர்க்கரை அவதூறாக பேசுகிறார். மேலும், ராகுல் காந்தி குடும்பம், அரசியல் ஆதாயத்துக்காக ‘காந்தி’ என்ற பெயரை திருடி, தங்களது குடும்பப்பெயராக ஆக்கி விட்டது. ஆகவே, ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More
1 78 79 80 81 82 181