ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ.30 லட்சம்: திமுக. ‘ஆடியோ’ வைரல்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு ‘சீட்’ ஒதுக்க, தி.மு.க..,வினரிடம், ரூ.30 லட்சம் பேரம் பேசியது தொடர்பான, ‘ஆடியோ’ வைரலாகியுள்ளது. கட்சிக்கு பணம் கொடுக்காமல் ஊராட்சி ‘வார்டு’ உறுப்பினர் ‘சீட்’ கூட வாங்க முடியாது என்பது, சமீப கால அரசியலில் எழுதப்படாத விதிமுறையாகி வருகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஆச்சிபட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர் அறிவிக்க, பணம் பேரம் நடந்த ‘ஆடியோ’ சமூகவலை தளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆடியோவில், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், ஆச்சிபட்டி தி.மு.க., பிரமுகரும், மாஜி ஊராட்சி தலைவருமான ஈஸ்வரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. ‘ஆடியோ’வில், ஒன்றிய செயலாளர் மருதவேல், கோவை…
Read More









