வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

வாரணாசியில் மோடி பேரணி; திரளான மக்கள் பங்கேற்பு

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இன்று ( 25 ம் தேதி ) மெகா பேரணி நடந்தது. நாளை (26 ம் தேதி ) வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மாலை வாரணாசி வந்தார். தொடர்ந்து ஆதரவாளர்களுடன் மோடி 6 கி.மீ. தூரம் வரை பேரணியாக சென்றார். 5 லட்ச தீபம் 2வது முறை போட்டியிடும் பிரதமர் வருகையை முன்னிட்டு இங்குள்ள கோயில்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. வழி நெடுகிலும் அலங்கார சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் 5 லட்சம் தீபம் ஏற்றப்பட்டது.பனராஸ் இந்து பல்கலை., வளாகம் லங்கா கேட் அருகே இருந்து பேரணி துவங்கியது. பேரணியில் பா.ஜ.,…

Read More

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

தாயை பிரிந்தது ஏன்? மோடி விளக்கம்

பிரதமர் மோடி, தான் தனது தாயுடன் வசிக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து நடிகர் அக்சய் குமாருக்கு கலந்துரையாடல் வடிவில் அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்றுபட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, தனது தாய் குறித்தும், தான் தனது தாயுடன் வசிக்காததற்கான காரணம் குறித்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர், மிக இளம் வயதிலேயே நான் என் தாயை பிரிந்து வந்து விட்டேன். சிறு வயதிலேயே அனைத்து பற்றுகளில் இருந்தும் விடுபட்டேன். அனைத்து பந்தங்களும் மாயை என்பது தான் நான் எனது பயிற்சியில் கற்றுக் கொண்டது. அதனை அனைத்து பந்தங்களில் இருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன். அந்த வயதில் நான் வீட்டை விட்டு வெளியேறிய போது துன்பமாக…

Read More

ரபேல் விவகாரம்: பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு

ரபேல் விவகாரம்: பொய் சொன்ன ராகுல் சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு

ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாம் என கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. ‘ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை’ என, முதலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. ‘திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்கக் கூடாது’ என மத்திய அரசு வாதிட்டது….

Read More

வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

வருமான வரித்துறை அதிகாரிகள் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தவில்லை தேர்தல் கமிஷன் விளக்கம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இதற்காக தூத்துக்குடியில் அவர் தங்கியிருந்த வீட்டில் கடந்த 16-ந்தேதி, உள்ளூர் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழுவினருடன் இணைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன் நடந்த இந்த சம்பவத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இது ஒரு ஜனநாயக படுகொலை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதைப்போல பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை என தேர்தல் கமிஷன் நேற்று விளக்கம் அளித்து உள்ளது. இது வெறும் ஒரு சரிபார்த்தல்…

Read More

லோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது

லோக்சபா தேர்தலில் ஒடிஷாவில் அதிக இடங்களில் வெற்றி பெறலாம் என்று பா.ஜ., நம்புகிறது

சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒடிஷா முதல்வராக பிஜூ ஜனதா தள தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை சரியில்லை.2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு, ஒடிஷாவில் பா.ஜ.,வை வளர்க்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டன. அம்மாநிலத்தில காங்., வீழ்ச்சி அடைந்த பிறகு பா.ஜ.,வுக்கும் பி.ஜ.த.,க்கும் இடையே போட்டி நிலவுகிறது. அங்கு 21 லோக்சபா தொகுதிகள், 147 சட்டசபை தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 19 தொகுதிகளில் பா.ஜ.,வும் பி.ஜ.த.,வும் நேரடியாக மோதுகின்றன. சட்டசபை தேர்தலி்ல் நிலைமை கொஞ்சம் வேறுபடுகிறது. பி.ஜ.த., எம்.பி., ததகத் சத்பதி கூறும்போது, ‛‛லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக வெற்றிகளை…

Read More

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி ‘சஸ்பெண்ட்’

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி ‘சஸ்பெண்ட்’

பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை சோதனை செய்ய உத்தரவிட்ட அதிகாரி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மோடியின் புகாரின் பேரில், விதிமுறைப்படி செயல்படாத அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (ஏப்.,18 ) இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில், நாடு முழுவதும் பிரதமர் மோடி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.,16) ஒடிசா சென்ற பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். பிரதமரின் சிறப்பு பாதுகாவலர்கள் தடுத்த நிலையிலும், இச்சோதனை நடைபெற்றது….

Read More

போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா

போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை 2016 மே மாதம் நீக்கியது. இதனையடுத்தும் விசாரணையை எதிர்க்கொண்டு வருகிறார். ஜாமீனில் வெளியே வந்துள்ள சாத்வி பிரக்யா, பா.ஜனதாவில் இணைந்துள்ளார். இதனையடுத்து அவரை மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தரப்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் களமிறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ம.பி., தலைவநகர் போபால். இங்கு…

Read More

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் – பிரதமர் மோடி கவலை

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் – பிரதமர் மோடி கவலை

ரபேல் விவகாரத்தில் காவலாளிதான் திருடன் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். எனவே, அவருக்கு பதிலடியாக, ‘நானும் காவலாளிதான்’ என்ற பிரசாரத்தை நடத்துமாறு பா.ஜனதாவினருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதன்படி, அவர் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் தங்கள் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை…

Read More

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்டது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதிதேர்தல் ரத்து செய்யப்பட்டது

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மேற்கொள்ள பெருமளவு பணம் இறங்கியுள்ளது என கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. திமுக பொருளாளர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து தேர்தல் அத்தொகுதியில் ரத்து செய்யப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது என தகவல் வெளியாகியது. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரையை தேர்தல் ஆணையம் 14-ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பான…

Read More

கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை

கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை சோதனை

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்திவருகிறது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் இந்த தொகுதியில் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என்பது குறித்து சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் பணப்பட்டுவாடா குறித்து சோதனை செய்யச் சென்ற அதிகாரிகளை அமமுக கட்சியைச் சேர்ந்த சிலர் சிறைப்பிடித்தநிலையில் போலீசார் வான் நோக்கிச் ஒரு ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி எச்சரிக்கை செய்தனர். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து, மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுகிறார். முன்னதாக திமுகவைச் சேர்ந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா…

Read More
1 94 95 96 97 98 181