எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் – எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் இருந்த மேடையில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி அறிவிப்பு

எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் – எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் இருந்த மேடையில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்குபெற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சேலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மத்திய அமைச்சர் பேசும் போது பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தின் நீர்தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார். பசுமை வழிச்சாலை குறித்து பேசிய அவர், பசுமை வழிச் சாலை பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது…

Read More

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கான் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து, பா.ஜ.க. சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஆசம் கான், தன்னை எதிர்த்து போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா, காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், “இங்கு 10 வருடங்களாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக உள்ளார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்றார். அவருக்கு…

Read More

பிரசாரத்தில் ஈடுபட்ட இ.பி.எஸ், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை போட்டுத் தாக்கினார்

பிரசாரத்தில் ஈடுபட்ட இ.பி.எஸ், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை போட்டுத் தாக்கினார்

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி லோக்சபா தொகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை போட்டுத் தாக்கினார். அதற்கு, அ.தி.மு.க., தொண்டர்கள், விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பொள்ளாச்சியில் அவர் பேசுகையில், ‘ஸ்டாலின் ஒரு பண்பில்லாத அரசியல்வாதி. ஒரு முதல்வராக இருப்பதால், கட்டுப்பாட்டுடன் பேச விரும்புகிறேன். ஸ்டாலின் கண்ணிய குறைவாக பேசினால், அதற்கு நாங்களும், பதிலடி கொடுப்போம். ஏனென்றால், ஓரளவுக்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும். எல்லை மீறினால், வரம்பு மீறினால், அதற்கு உண்டான பேச்சை அவர் வாங்கிக் கொள்வார். எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது’ என்றார்.அடுத்து கோவைக்கு வந்ததும், இன்னும் காட்டம் கூடியது.’அனைவரையும் மதிக்கத் தெரிய வேண்டும். பிரதமரை கொச்சைப்படுத்தி பேசுவது, முதல்வரை கொச்சைப்படுத்தி…

Read More

தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்சார ரயில்: தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் – தமிழிசை

தூத்துக்குடி – திருச்செந்தூர் – நெல்லை இடையே மின்சார ரயில்: தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் – தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார். அதில், # விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்க நடவடிக்கை # பனைத் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிசந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு # தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட நடவடிக்கை # தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தாமிரபரணி வடிநிலக் கோட்டம் அமைக்க நடவடிக்கை # மத்திய அரசின் மூலம் நிதி பெற்று பெரியதாழையில் ரூ.200 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் # தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை…

Read More

ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது

ஊழல் செய்யவே காங்., ஆட்சிக்கு வர துடிக்கிறது

ஊழல் செய்வதற்காகவே காங்., ஆட்சிக்கு வர துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். குஜராத் மாநிலம் ஜூனாகர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல்வாதிகளை சிறை வாசல் வரை அனுப்பி உள்ளோம். இன்னும் 5 ஆண்டுகள் நீங்கள் எனக்கு கொடுத்தால் அவர்களை சிறைக்கு உள்ளாகவே அனுப்புவோம். காங்.,க்கு தெரியும் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த மேலும் பலரின் பெயர்கள் வெளியே வரும் என்று. பெயர் மட்டுமல்ல, அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. தேர்தலில் ஊழல் செய்து, ஏழைகளுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என காங்.,…

Read More

குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு

குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும்…

Read More

கர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து?

கர்நாடகா., ம.பி., ராஜஸ்தான் அரசுகளுக்கு ஆபத்து?

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது பற்றி இதுவரை 25 அமைப்புகள் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளன. இவை அனைத்திலுமே தனிப்பெரும்பான்மையாகவோ, கூட்டணி கட்சிகளாகவோ மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும் என்றே கூறப்பட்டுள்ளது. அப்படி பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்தால் ம.பி., ராஜஸ்தான், கர்நாடகா மாநில அரசுகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்று ஒரு பேச்சு டில்லியில் அடிபடுகிறது. காங்., அரசுகள் கலைக்கப்பட்டால் காங்.,கிற்கு நிதி கிடைப்பது சிரமமாகி, அக்கட்சியே ஆட்டம் கண்டுவிடும் என்று மோடி கணக்குப் போடுவதாகவும் டில்லியில் பேசப்படுகிறது. 2019 தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் நாடு முழுவதும் சுமார் 1500 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவற்றில்…

Read More

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா…

Read More

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார் – முதல்வர், இ.பி.எஸ்

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார் – முதல்வர், இ.பி.எஸ்

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார். சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதே, இதற்கு காரணம்,” என முதல்வர், இ.பி.எஸ்., பேசினார். திண்டுக்கல் லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர், ஜோதிமுத்து, கரூர், அ.தி.மு.க., வேட்பாளர், தம்பி துரை, நிலக்கோட்டை சட்டசபை தொகுதி வேட்பாளர், தேன்மொழியை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., வேடசந்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநியில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:’டிவி’யில் வந்தது தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. நான், 2016ல் எடப்பாடியில் போட்டியிட்டேன். கருத்துக்கணிப்பில், வெற்றி பெற மாட்டேன் என்றனர். ஆனால், 42 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.தமிழகத்திற்கு அதை செய்வோம்; இதைச்செய்வோம்…

Read More

48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

48 ஆண்டுக்கு பிறகு கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இந்தியா

48 ஆண்டுகளுக்குப் பிறகு கடற்படைக்கு இந்தியா ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது.இந்த நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் அதிநவீன எம்எச் – 60ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவிற்கு வழங்க உள்ள 24 ஹெலிகாப்டர்களின் விலை ரூ.17,861 கோடி. இந்த ஹெலிகாப்டரில் கண்காணிப்பு சென்சார்கள், தொலைதொடர்பு சாதனங்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவை இருக்கும். இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையில், 24 எம்எச் 60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர்களை இணைப்பதன் மூலம், இந்திய பாதுகாப்பு படையின் வான் தாக்குதல், நீர்மூழ்கிகளுக்கு எதிரான தாக்குதல் திறன் அதிகரிக்கும். அமெரிக்கா- இந்திய உறவை வலுப்படுத்த உதவும் வகையில்,…

Read More
1 95 96 97 98 99 181