பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வம்

வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் லோக்சபா தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், பாலிவுட் நடிகர் சன்னி தியோலை பார்க்க, தொகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவரால் அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியவில்லை. காரணம், வட மாநிலங்கள் பலவற்றிற்கும், பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளராக அவர், சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இதனால், தொகுதிக்கு, வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் தான் அவரால் வர முடிகிறது. இந்த லோக்சபா தொகுதியின், ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குள் அடங்கியுள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல், மேலோட்டமாக, நகர்புறங்களில் மட்டும் பிரசாரம் செய்கிறார்.ஆனால், காங்கிரஸ் வேட்பாளர், சுனில் ஜாக்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தை துவக்கி, இரண்டு முறை, அனைத்து இடங்களுக்கும் சுற்றி வந்து…

Read More

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

எங்கள் ஆட்சியிலும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்ற காங்கிரசை கலாய்த்த பிரதமர் மோடி

இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும்போது எல்லாம் என்னுடைய அரசு எல்லைத் தாண்டிச் சென்று பயங்கரவாத முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். காங்கிரஸ்  ஆட்சியின்போது ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கால இடைவெளிகளில் பல்வேறு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது, எங்களைப் பொறுத்தவரையில் ராணுவ நடவடிக்கை என்பது ஒரு வியூக நடவடிக்கையாக இருந்தது. இந்தியாவிற்கு எதிரான படைகளுக்கு எதிராகவே மேற்கொண்டோம், ஆனால் அதனை வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தவில்லை எனக் கூறினார். இந்நிலையில் எங்கள் ஆட்சியின்போது 6 சர்ஜிக்கல்…

Read More

காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை

காலை 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவு: சுப்ரீம் கோர்ட் யோசனை

வெயில் காரணமாக லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் யோசனை உள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் ஓட்டுப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் ஓட்டுப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே. வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு ஓட்டளிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே ஓட்டுப்பதிவை துவங்கலாமே என தெரிவித்துள்ளது….

Read More

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

வாரணாசியில் பிரதமருக்கு எதிராக களமிறங்கிய எல்லை பாதுகாப்பு படை வீரரின் வேட்பு மனு நிராகரிப்பு

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி மக்களவை தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். வருகிற மே 19ந்தேதி நடைபெறும் 7வது கட்ட தேர்தலில் இந்த தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் தேஜ் பகதூர் யாதவ் என்பவரை சமாஜ்வாடி கட்சி களமிறக்கி உள்ளது. இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து அவர் புகார் எழுப்பினார். தரமற்ற முறையில் உணவு பரிமாறப்படுவதால் இரவில் பட்டினியுடன் படுக்கைக்கு செல்ல நேரிடுகிறது என்ற குற்றச்சாட்டுடன் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

Read More

மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

மாவோயிஸ்ட் தாக்குதல்: 16 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனத்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்து தாக்குதல் நடத்தியதை போன்று மகாராஷ்டிராவில் கமாண்டோக்கள் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில், 16 கமாண்டோ படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் கமாண்டோ படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு வீசி மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 15 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வாகன டிரைவரும் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. முன்னதாக நேற்று பாதுகாப்பு படையினரின் வாகனங்களுக்கு தீவைத்து மாவோயிஸ்டுகள்…

Read More

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வெளிநாட்டினர் உள்பட 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என…

Read More

நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போகிறீர்களா’ என, நிருபர்கள் கேட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார். மதுரையில் அவர் கூறியதாவது:நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள, மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், அ.ம.மு.க.,வில் இருப்பதற்கான ஆவணங்கள், சபாநாயகரிடம் உள்ளன. தற்போது, அ.தி.மு.க.,வில், ‘சீட்’ கேட்டு, கிடைக்காதவர்களுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலும், விரைவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம், ‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே’ என, நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த கேள்வி அடிமுட்டாள்தனமானது. ஸ்டாலினிடம், காங்கிரசில் சேரப் போகிறீர்களா என கேட்க முடியுமா?’ என, கோபமாக கேட்டார். முன்னதாக ”துணை முதல்வர் பன்னீர்செல்வம் மே., 23க்கு பின் பா.ஜ.,வில் இணைவது உறுதி” என அ.ம.மு.க., கொள்ளை பரப்பு செயலர் தங்க…

Read More

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் சுளீர்

பொய் சொன்ன ராகுலை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது. ரபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் சொன்ன தவறான பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., எம்.பி., மீனாட்சி லெக்வி அவதூறு வழக்கு தொடர்ந்தார். ரபேல் வழக்கில் கூடுதல் ஆவணங்களை ஏற்று விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து ராகுல் சுப்ரீம்கோர்ட்டே, காவலாளி மோடி திருடன் என்று சொல்லி விட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து பா.ஜ., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு ராகுல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்; உணர்ச்சிப்பூர்வமாக தவறுதலாக கூறி விட்டதாகவும், இதற்கு வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த…

Read More

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி

மம்தாவின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் சேருவர் : மோடி

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பா.ஜ.,வில் இணையப்போகின்றனர் என பிரதமர் மோடி அதிரடியாக பேசினார். மே.வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜியின் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள, ஸ்ரீராம்பூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், ” மேற்கு வங்கத்தில் மம்தாவை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய விரும்புகின்றனர். நாடுமுழுவதும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும், இங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்….

Read More

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

இலங்கைக்கு செல்ல கறுப்பு பூனை படை தயார்

பயங்கரவாதிகளை எதிர்கொள்வது குண்டுவெடிப்பு நேரங்களில் கையாள்வதில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களும் என்.எஸ்.ஜி., , எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் ( கறுப்பு பூனை படை ) சென்னையில் தயார் நிலையில் உள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக 253 பேர் கொல்லப்பட்டனர். இன்னும் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இலங்கையில் கடந்த 21 ம் தேதி தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த குண்டுவெடிப்பில் 253 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து இலங்கை படையினர் பயங்கரவாதிகளை கைது செய்வதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கிழக்கு இலங்கையின் கல்முனை பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது…

Read More
1 93 94 95 96 97 181