போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று ஜெனிவாவில் “கொக்கரித்த” திலக் மாரப்பன
போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை அரசு, அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன் தினம் புதன் கிழமையன்று இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் உரையைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். இதன்போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார். இலங்கைப் போரில் இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லை. ஐ.நா. நிபுணர்கள் குழுவின் விசாரணைஅறிக்கையில் குறிப்பிட்டவாறு இறுதிப்போரில் பெருந்தொகையான மக்கள் கொல்லப்படவில்லை. அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் உள்ளக நீதி விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படும். அதில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது….
Read More







