கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்து இருப்பதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்துஅமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டின. இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா வகுப்புகள் நடைபெற்று வந்தன. கன்சர்வேடிவ் கட்சியினரின் எதிர்ப்பால், அலபாமா கல்வி வாரியம், 1993ல், யோகா வகுப்புகளை தடை செய்தது. இந்நிலையில், ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜெர்மி கிரே, ”மன அழுத்தம், பதற்றம், மன சோர்வு உள்ளிட்டவற்றை நீக்க உதவும் யோகா வகுப்புகளை, மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்,” என, வலியுறுத்தினார். அவரது முயற்சியால், அலபாமா மாகாண பிரதிநிதிகள் சபையில், யோகா மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மசோதாவில், ‘யோகாவின் அனைத்து தோற்றங்கள், பயிற்சிகள்…

Read More

இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் சந்தித்து கொண்ட போது, இருவரும் கைகுலுக்காமல், இந்து பாரம்பரிய முறைப்படி வணக்கம் (நமஸ்தே) தெரிவித்து கொண்டனர். சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரானில் ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா அச்சுறுத்தலை தடுக்க முகமூடி அணியவும், கைகுலுக்குவதை தவிர்த்து, வணக்கம் தெரிவிக்க வேண்டும். சற்று இடைவெளி விட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் கூட, கொரோனா பரவுதலை தடுக்க இந்தியர்களை போல் நமஸ்தே சொல்ல…

Read More

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா தாக்கம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டத்திற்கு பின், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவில் நேற்று (மார்ச் 5) கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரை தவிர, மற்ற அனைவரும் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் இதுவரை, 20 மாகாணங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை தேவை உள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவற்றை ஒரு…

Read More

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம்…

Read More

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை, பாக்., நாடியுள்ளது.   சீனாவில், சில ஆண்டுகளுக்கு முன், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவற்றை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற வாத்துகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு வாத்தும், தினமும், 200 வெட்டுக்கிளிகளை பிடித்து தின்னும் திறன் பெற்றவை. கோழிகளும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றாலும், அவற்றால், தினமும், 70…

Read More

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 8 மாதங்களில் 5வது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளேன். நேற்றைய தினம் அலகாபாத்தின் மோதிரா மைதானத்தில் அதிபர் ட்ரம்பிற்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவொரு மறக்க முடியாத தருணமாக இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடுகள் ஆகும். இன்றைய தினம் அமெரிக்கா – இந்தியா இடையிலான அனைத்து முக்கியமான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை, ஆற்றல், வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்த உள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் பாதுகாப்புத் துறை தொடர்பாக உருவாகும் ஒப்பந்தம் மிக முக்கியமானது. வர்த்தகத்துறையில் நமது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு…

Read More

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்தில் தேவை இல்லாமல் மூக்கை நீட்டிய மலேசிய பிரதமர் மகாதீர் திடீர் ராஜினாமா

இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையிலும் சிஏஏ விவகாரத்திலும் தேவை இல்லாமல் மூக்கை நீட்டி, கருத்து தெரிவித்த மலேசிய பிரதமர் மகாதீர், அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது. மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை. பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து வெற்றி பெற்றார்.’இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டை, மலேசியா ஏற்று நடத்துகிறது. நவ., மாதத்தில் நடைபெறும்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கு சிறப்பான வரவேற்பு !

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக, இன்று இந்தியா வந்தார். அவரை வரவேற்க, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டது. வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து, 22 கி.மீ.,க்கு நடைபெறும் வரவேற்பு பேரணியில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இன்று வந்தார். அவருடைய மனைவி மெலீனா டிரம்ப், மகள் இவாங்கா உள்ளிட்டோரும் உடன் வந்தனர். உயர்நிலை குழுவும் வந்தது. பயணத்தின் முதல் நாளான இன்று,குஜராத்தின் ஆமதாபாதுக்கு டிரம்ப் வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் ரூபானி ஆகியோர் டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். பிரதமர்…

Read More

இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார்

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் அதன் பட்ஜெட்டை மார்ச் 11ல் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ரிஷி சுனாக்(39) தாக்கல் செய்கிறார்.  இந்தியாவுக்கு பிறகு பிரிட்டனிலும் ஹிந்து நிதியமைச்சர் படஜெட்டை சமர்பிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் அமைச்சரவையில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரும், இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனுமான, ரிஷி சுனாக், பிரிட்டன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். நாராயணமூர்த்தியின் மகளான, அக் ஷதாவை திருமணம் செய்துள்ள ரிஷி, முதல் முறையாக, 2015ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, பிரிட்டன் பார்லிமென்டிற்குள் நுழைந்தார். ‘கன்சர்வேடிவ்’ கட்சியின் முக்கிய தலைவராகவும் உருவெடுத்தார். இந்நிலையில், மார்ச் 11ல், பிரிட்டன் பட்ஜெட்டை ரிஷி…

Read More
1 19 20 21 22 23 48