இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

இந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்முகாஷ்மீர் , லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மேலும் ஜம்முவின் நிலவரத்தை நேரில் கண்டறிய வெளி நாட்டு எம்பிக்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் இங்கிலாந்து நாட்டின் லேபர் கட்சியை சேர்ந்த எம்.பி., டெபி ஆப்ரகாமும் ஒருவர் இவர் தற்போது இ -விசா முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை இந்திய அதிகாரிகள் எவ்வித காரணமும் இன்றி விசாவை மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில் இங்கிலாந்து நாட்டினருக்கு விசா ஆன் அரைவல் முறை வழங்கப்படவில்லை அதன் அடிப்படையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என கூறினர். அதே…

Read More

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி:   பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியா வர உள்ளார். இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகச்சிறந்த மனிதர். நான் இந்தியா செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளேன் எனக்கூறினார். இந்நிலையில், டிரம்ப் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலினாவும் வரும் 24 மற்றும் 25 ல் இந்தியா…

Read More

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவின் வுஹான் நகரில் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, ‘கொரோனா வைரஸ்’ உருவானது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி, 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. ‘கொரோனா வைரசால் தற்போது வரை, 904 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), ‘வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்….

Read More

மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

அமெரிக்காவைக் காப்பாற்ற வேண்டுமானால், அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும்’ என, மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்ததற்கு அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வந்த, மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தற்போது பாலத்தீன – இஸ்ரேல் விவகாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். குறிப்பாக, பாலத்தீன பிரச்னையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து வருகிறார். இந்நிலையில், இஸ்ரேல் – பாலத்தீன விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை’ முன்வைத்தார். அந்தத் திட்டம் குறித்து, மகாதீர் கூறியதாவது: அமெரிக்கா முன்வைத்துள்ள மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தைப் புறக்கணிக்க பாலத்தீனத்துக்கு முழு உரிமை உண்டு. பாலத்தீனத்தை இஸ்ரேல்…

Read More

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் – பாகிஸ்தான்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் –  பாகிஸ்தான்

‘சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை, தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள, 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை அழைத்துவரமாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியுள்ளனார். சபீர்…

Read More

‛பிரெக்சிட்’ மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்

‛பிரெக்சிட்’ மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லி.,யில் இன்று(ஜன.,23) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து…

Read More

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போனை ஹேக் செய்து சவுதி சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உளவுபார்த்ததாக வெளியான செய்தியை, சவுதி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி : கடந்த 2018 ம் ஆண்டு மே1 அன்று, ஜெப் பெசோசும், முகமது பின் சல்மானும் நட்பு அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அப்போது, பெசோசுக்கு வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை சல்மான் அனுப்பியுள்ளார். அதன் பின் ஒரு மணி நேரத்தில், பெசோஸ் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெசோசின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும் போது, பெசோசின் மொபைல் போனில் இருந்து…

Read More

பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

பாமாயில் இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு

சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது காஷ்மீர் விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசு கொடுத்துள்ள பதிலடி எனக் கூறப்படுகிறது. முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடவடிக்கைதான். ஆனால் இப்போதுதான் அந்த நடவடிக்கையின் முதல் நகர்வை மேற்கொண்டுள்ளது இந்திய அரசு. “காஷ்மீரை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா,” என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்து தான் இருதரப்பு உறவில் உரசலுக்கு வித்திட்டது. இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசிய பாமாயிலை இந்திய வணிகர்கள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது….

Read More

உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது -தவறுதலாக நடந்திருக்கலாம்

உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது -தவறுதலாக நடந்திருக்கலாம்

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை பாய்ந்து, சிறிது நேரத்திலேயே விமானம் மீது மோதுகிறது. 10 விநாடிகள் கழித்து, தரையில் ஒரு பெரும்சத்தம் கேட்கிறது. தீப்பிடித்த விமானம் பறந்து கொண்டிருந்தது. 176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. எனினும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறுகிறார். இரான் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி…

Read More

இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்வு – கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்

இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்வு – கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்

வங்கதேசத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவத்தின் காணொளி ஒன்றை, உத்தரப்பிரதேச காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளியை நீக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதேபோன்று வேறொரு செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை முதலில் பதிவிட்ட காணொளியை நீக்கியுள்ள இம்ரான் கான், நியூஸ் 18 செய்தி இணையதளத்தின் செய்தி ஒன்றை சனிக்கிழமை மதியம் பதிவிட்டுள்ளார். புகைப்பட காப்புரிமை @ImranKhanPTI@IMRANKHANPTI பாகிஸ்தானில் இருக்கும் வறுமை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்காமல் இந்தியாவில் நடப்பதைப் பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து வருவதாக அவரது பதிவின் பின்னூட்டத்திலேயே இந்தியாவைச் சேர்ந்த பலரும் அவரைக் கண்டித்திருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான…

Read More
1 20 21 22 23 24 48