தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை இஸ்லாமாபாதில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாட்களுக்கு துாக்கில் தொங்க விட வேண்டும் என, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விபரம், தற்போது வெளியாகி உள்ளது. பாக்., முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான முஷாரப்புக்கு, 76, தேச துரோக வழக்கில், இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. மூன்று நீதிபதிகளுமே, முஷாரப் புக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.ஆனால், தண்டனை நிறைவேற்றம் குறித்து, மூன்று பேரும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை அளித்துள்ளனர். இதன் முழு விபரங்கள், நேற்று வெளியாகின. சிறப்பு நீதிமன்ற…

Read More

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம். 2001 – 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது. 1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய…

Read More

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன்,…

Read More

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி உள்ளது.     ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் கிரேட்டா இடம் பெற்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். பருவ நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் குரல் எழுப்பத் தயங்காதவர் கிரேட்டா. செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா., கூட்டத்தில் 2018 ம் ஆண்டு இவர் ஆற்றிய உரை உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் பயணித்த தனது…

Read More

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது

ஜெர்ரி நாட்லர் தலைமையிலான அவை நீதிக்குழு வெளியிட்ட குற்றச்சாட்டின் முதல் பிரிவு டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகிறது. அடுத்த பிரிவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை தடுத்ததாக கூறுகிறது. அத்துடன் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக யுக்ரைனுக்கான உதவியை நிறுத்திவைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுக்கும் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையே ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிறார். அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழு இந்தக் குற்றச்சாட்டுகளை அங்கீகரித்துவிட்டால், இந்தவாரக் கடைசியில் இது பிரதிநிதிகள் சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்படும். இந்த அவையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் அதிகம். அங்கே இந்த குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால், பிறகு அவை ஆளுங்கட்சியான…

Read More

இலங்கை குறித்து சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை

இலங்கை குறித்து சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை

பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் கன்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. வெளிநாட்டு தேர்தல் ஒன்று என்ற போதிலும், அதனுடன் தொடர்பில்லாத மக்கள் மத்தியில்கூட இதனால் பிரச்சனை எழுந்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். இலங்கையில் இனங்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினைக்கு ‘இரண்டு நாடுகளுக்கிடையிலான தீர்வு” (two-state solution) என பிரிட்டனை ஆளும் கன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளதாக அவர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக சுட்டிக்காட்டினார். ”பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

Read More

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் – பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் – பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி , பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவன் லண்டன் பங்குச்சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில் 8 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவன் என்றும் தெரிய வந்தது.   லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன்…

Read More

பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்கள் –

பெண்ணியம், நாத்திகம், ஓரினச்சேர்க்கை ஆகியவற்றை தீவிரவாத கருத்துக்கள்  –

சவுதி அரேபியாவின் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை மாற்றுவதற்காகவும், அந்நிய முதலீட்டை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு திட்டங்களை சவுதி அரேபியாவில் செயல்படுத்தி வருகிறார். இஸ்லாத்தின் மிகவும் மிதமான வடிவத்திற்கு அழுத்தம் கொடுத்து தேசியவாத உணர்வை ஊக்குவித்து வருகிறார். சமூக கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார் மற்றும் சுற்றுலா விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு சவுதி அரேபியா 20 நாடுகள் குழுவின் தலைவராக பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார். சவுதி அரேபியாவின் அரசு பாதுகாப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு விளம்பர வீடியோவில், பழமைவாத முஸ்லிம் அரசான சவுதி அரேபியா சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கவும், வெளிநாட்டினரை ஈர்க்க முயன்றபோதும், “பெண்ணியம் பேசுதல், ஓரினச்சேர்க்கை மற்றும் நாத்திகம்”…

Read More

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொல்லப்பட்டார்

சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரசபையிலிருந்து 2007ல் காசாவை வலுக்கட்டாயமாகக் ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் காசா போராளிகள் மூன்று போர்களை நடத்தினர். 2014ல் மூன்றாவது போர் 50 நாட்கள் நீடித்தது. இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. இதுபோல் அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு அபு எல்-அட்டா தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் ஈரானிய ஆதரவு தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார். வான்வழித் தாக்குதலில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும்…

Read More

பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு $25 மில்லியன் பரிசு

பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு $25  மில்லியன் பரிசு

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடம் குறித்து, அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கொடுத்த உளவாளிக்கு, $25 மில்லியன் பரிசு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, அமெரிக்க ராணுவம், சமீபத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தப்பிக்க முடியாத பாக்தாதி, உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்தார். அவரது உடலை, அமெரிக்க ராணுவம் கடலில் துாக்கி வீசியது. இந்நிலையில், பாக்தாதியை, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது குறித்து, அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:அல் பாக்தாதியின் இருப்பிடம், அவர் தங்கியிருந்த அறை,…

Read More
1 21 22 23 24 25 48