தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு
துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை இஸ்லாமாபாதில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாட்களுக்கு துாக்கில் தொங்க விட வேண்டும் என, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விபரம், தற்போது வெளியாகி உள்ளது. பாக்., முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான முஷாரப்புக்கு, 76, தேச துரோக வழக்கில், இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. மூன்று நீதிபதிகளுமே, முஷாரப் புக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.ஆனால், தண்டனை நிறைவேற்றம் குறித்து, மூன்று பேரும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை அளித்துள்ளனர். இதன் முழு விபரங்கள், நேற்று வெளியாகின. சிறப்பு நீதிமன்ற…
Read More







