பீகார் மூளைக் காய்ச்சல் : பலி 104 ஆனது
பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 83 குழந்தைகள் பலியாகி உள்ளன. முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவமழை இல்லாத நிலையில் இந்த நோய் குழந்தைகள் இடையே பரவியதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் முஷாபர்நகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக அளவில் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு தேவையான அனைத்து சிகிச்சைகளும் துரித கதியில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். முதல்வர் நிதிஷ்குமார், தொடர்…
Read More









