ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

ஐபோன் திருடர்களுக்கு ஆப்பிள் நிர்வாகம் எச்சரிக்கை – ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலையும் சூரையும்

அமெரிக்காவின் மெனேசோட்டா மாகாணத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபுளாயிடு படுகொலை பிற மாகாணங்களுக்கும் பரவி தற்போது பெரிய போராட்டமாக வெடித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் பல கடைகள் சூறையாடப்பட்டன. பிலடல்ஃபியா மாகாணத்தில் கொரோனா ஊரடங்கை அடுத்து ஆப்பிள் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சில கருப்பர்கள் ஐபோன் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ஐபோன்கள் திருடப்பட்டதை அடுத்து ஆப்பிள் நிர்வாகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. ‘திருடப்பட்ட ஐபோன்கள் இயங்காதபடி செய்யமுடியும். மேலும் ஐபோன்களைத் திருடியவர்களை இதில் உள்ள மென்பொருள் உதவியுடன் கையும் களவுமாக காவலர்களால் பிடிக்கவும் முடியும். ஆக திருடியவர்கள் அவர்களாகவே முன்வந்து போன்களை திருப்பி அளிப்பது நல்லது’ என ஆப்பிள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஜார்ஜ்…

Read More

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

பிரேத பரிசோதனையில் தகவல் – ஜார்ஜ் பிளாய்டுக்கு கொரோனா தொற்று

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபொலிசில், ஜார்ஜ் பிளாய்டு என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை, டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் , சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினார். அப்போது, பிளாய்டை தரையில் தள்ளி, அவரின் கழுத்தில், தன் கால் முட்டியால் அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி, பிளாய்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டும், கறுப்பின மக்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்தும் அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹென்னெபின் கவுண்டி மருத்துவ பரிசோதனை அலுவலகம், ஜார்ஜ் பிளாய்டின் 20 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையை,…

Read More

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கலாம் வாங்க : கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 2

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கலாம் வாங்க : கோவிலின் வரலாறும் & ஸ்தலபுராணமும் – பாகம் 2

ஸ்ரீரங்கம் கோவிலின் கட்டமைப்பும் ஸ்தலபுராண குறிப்புகளும் – சிறப்பு விளக்கத்துடன் பாருங்கள். கோவில் எவ்வளவு பெரியது? இந்த பிரமாண்டமான கோயிலுக்குள் / சன்னதி எத்தனை கோயில்கள் உள்ளன? சிறப்புகள் என்ன? இந்த கோவிலுக்குள் எத்தனை பரிக்ரமங்கள், தெய்வங்கள், ஆச்சார்யர்கள் உள்ளார்கள் ? இந்த கோவிலின் ஒவ்வொரு அம்சத்திற்கும் பின்னால் உள்ள கதை என்ன? இந்த வீடியோவில் அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ரங்கநாயக்க தாயர் ஆகியோரால் ஆசீர்வதிக்கப்படுங்கள். வீடியோவைப் பகிர்ந்து மற்றவர்களையும் புண்ணிய பலன் பெற உதவுங்கள். பி.கு : – இது 6 பகுதித் தொடர் கொண்டது. கோவில் ஸ்ரீரங்கத்திற்கு எப்படி வந்தது & ஆரம்ப கால கோவிலின் வரலாறு குறித்த…

Read More

சீன எதிர்ப்பு செயலி ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ பிளே ஸ்டோரில் நீக்கம்

சீன எதிர்ப்பு செயலி ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ பிளே ஸ்டோரில் நீக்கம்

ஒரு மாதத்தில் 50 லட்சம் பேர் பதவிறக்கம் செய்த . சீன எதிர்ப்பு செயலியான ‘ரிமுவ் சீனா ஆப்ஸ்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு, விதிமுறைகளை மீறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் பரவியுள்ளது. மேலும் இந்திய எல்லையில், சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதனால், சீன பொருட்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பிரசாரம் நடக்கிறது. தொடர்ந்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலியை கடந்த மே 17 ல் அறிமுகப்படுத்தியது. இது மொபைலில் உள்ள சீன செயலிகளை அடையாளம் காட்டி அதனை…

Read More

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

சந்திர கிரஹணம் ஜூன் 5ஆம் தேதி நிகழ்கிறது – சனாதன தர்மம் கூறுவதென்ன ?

இந்த முறை சந்திர கிரஹணம் ஆசிய, ஆஸ்திரேலியா, ஐரோபா, ஆப்பிரிக்க கண்டங்களில் தெரியும். மற்றவர்கள் மோ கிரஹண பரிகார பூஜையோ செய்ய தேவையில்லை !! உங்கள் இடத்தில் கிரகணம் தோன்றும் நேரத்திற்கு நீங்கள் உள்ளூர் விவரத்திற்கு குருமார்களிடம் கலந்தாலோசித்து அவர்களறிவுரையை பின்பற்றலாம் . சந்திர கிரகண நாளில் நாம் கிரகணம் தொடங்கியவுடன் குளிக்க வேண்டும் மற்றும் கிரகணம் முடிந்ததும் தர்பனம் செய்ய வேண்டும் .. கிரகணத்தின் போது சனாதன தர்மத்தைப் பின்பற்றும் நமது இந்துக்கள் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. மாதவிடக்காய் காலங்களில் பெண்கள் கிரகணக் குளியல் எடுக்க வேண்டும் .. கிரகணத்தின் இறுதி வரை நாம் தூங்கக்கூடாது, மந்திரங்களை முழக்கமிட வேண்டும். கர்ப்பிணி பெண்கள்…

Read More

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

குவியும் பாராட்டு – அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ்

கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர்….

Read More

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பேசியபோது ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்கு…

Read More

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார். ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை…

Read More

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

வெட்டுக்கிளிகள் – இலங்கைக்குள் படையெடுப்பு

இலங்கையின் வடமேல் மாகாணத்திற்கு வெட்டுக்கிளிகள் பிரவேசித்துள்ள நிலையில், அங்குள்ள விவசாயிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். வடமேல் மாகாணத்தின் குருநாகல் பகுதியிலேயே இந்த வெட்டுக்கிளிகள் தாக்கியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்தார். இலங்கைக்குள் பிரவேசித்துள்ள இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான பயிர்கள் மற்றும் மரங்களின் இலைகளை உட்கொள்ளும் திறன் கொண்டவை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த வெட்டுக்கிளிகள் தொடர்பில் தமது திணைக்களத்திற்கு நேற்று முன்தினம் (30) முதன் முறையாக தகவல் கிடைத்திருந்ததாகவும், அது தொடர்பில் நேற்றைய தினம் (மே 31) முதல் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ஆய்வுகளின் ஊடாக, இந்த வெட்டுக்கிளிகள் அனைத்து விதமான மரங்களிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக…

Read More

சவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா

சவுதியில் புதிதாக 1,581 பேருக்கு கொரோனா

கொரோனா தாக்கம் அதிகரித்து சவுதி அரேபியாவில் புதிதாக 1,581 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சவுதியில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோய் பாதிப்புக்கு மேலும் 1,581 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 81,766 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். சவுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை 458 ஆக உள்ளது. நோய் தொற்றுகளில் இருந்து புதிதாக 2,460 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,013…

Read More
1 131 132 133 134 135 256