பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்

பாக். விமான விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு மோடி இரங்கல்

பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 107 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும்,வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதாவது: விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

Read More

அமெரிக்காவிலுருந்து அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்

அமெரிக்காவிலுருந்து  அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்

அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஜூபைர், 41, அமெரிக்காவில் இல்லினியோஸ் பல்கலை.யில் பொறியியல் படித்துள்ளான். 2006-ம் அமெரிக்காவின் ஒஹிகோ மாகாணத்தைச் சேர்ந்த பெண்ணை மணந்து கொண்டதன் மூலம் அந்நாட்டு நிரந்தர குடிமகன் உரிமை பெற்றான். இந்நிலையில் அரேபிய நாடுகளில் செயல்பட்டு வரும் அல்கொய்தா பிரிவு முக்கிய தலைவரிடம் தொடர்பு வைத்துக்கொண்டு, அந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியாக இவன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டான். கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு முகமது இப்ராஹிம் ஜூபைர் நாடு கடத்தப்பட்டான்….

Read More

கனடாவில் கொரோனாவால் பலி 6000த்தை தாண்டியது

கனடாவில் கொரோனாவால்  பலி 6000த்தை தாண்டியது

கனடாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து பலியானவர்களின் எண்ணிக்கை 6000 ஐ தாண்டியதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா நோய் அதிகரித்த நாடுகளில் அதிகபட்ச பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையிலும், ரஷ்யா அதற்கு அடுத்ததாகவும் இருந்து வருகிறது. பல ஐரோப்பியநாடுகளில் தற்போது நோய் தொற்று குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கனடாவிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் சற்று கூடிக்கொண்டே செல்கிறது. கனடாவை பொறுத்தவரை, நாட்டில் பல மாகாணங்கள் இருப்பினும், கியூபெக்கில் தான் அதிகபட்ச ( நாட்டின் பாதியளவு பாதிப்பு ) உறுதிசெய்யப்படுவதாக அதிகாரிகளின் தரப்பில் தெளிவாகிறது. இந்நிலையில் கனடாவில், கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக…

Read More

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் தலைகாட்ட துவங்கி உள்ளது. கடந்த ஆண்டு, சீனாவில் முதன் முதலாக, வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், இந்நகரில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர், வூஹான் நகரைச் சேர்ந்தவர். நோய் அறிகுறி இல்லாமல், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 285 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,…

Read More

தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

தினமும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொள்கிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

மலேரியாவிற்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா தடுப்பாக தினமும் உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேரியாவிற்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்பின்னர், அது குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. இதற்கிடையே இந்தியாவில் இருந்து பெருமளவு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்கா இறக்குமதியும் செய்தது. ஆனால், இந்த மருந்து குறித்த ஆராய்ச்சியில், உண்மையில் கொரோனாவை முற்றிலும் குணமாக்கும் என்பது இதுவரையில் நிரூபணம் ஆகவில்லை. மேலும், இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என உலக நாடுகளும், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று…

Read More

கொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மலேசியா

கொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மலேசியா

மலேசியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 6,978 ஆக அதிகரித்துள்ளது; 114 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில், 3,347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப்…

Read More

COVID-19 ஊதிய மானியம் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் : ஜஸ்டின் ட்ரூடோ

COVID-19 ஊதிய மானியம் ஆகஸ்ட் வரை மூன்று மாதங்கள் நீட்டிக்கப்படும் : ஜஸ்டின் ட்ரூடோ

“ஒவ்வொரு துறையிலும் உள்ள கனடியர்கள் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர்” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை காலை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். “COVID-19 தொற்றுநோய்களின் போது பல கனேடியர்கள் வேலை இழந்துவிட்டனர்.” இதனால், கனடா அவசர ஊதிய மானியம் (CEWS) ஜூன் 6 முதல் ஆகஸ்ட் 29 வரை நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்தார் ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட, CEWS 75 சதவீத தகுதிவாய்ந்த முதலாளிகளின் ஊதியங்களை உள்ளடக்கியது – வாரந்தோறும் ஒரு ஊழியருக்கு 847 டாலர் வரை – மார்ச் 15 முதல் 12 வாரங்கள் வரை அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து பல்வேறு துறைகளில் உள்ள பல நிறுவனங்கள் பல்வேறு “தொழில்நுட்பங்கள்” காரணமாக…

Read More

மங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா

மங்களூருவில் 20 துபாய் பயணிகளுக்கு கொரோனா

துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மங்களூருக்கு வந்த பயணிகளில் கர்நாடகாவை சேர்ந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன் 179 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாயில் இருந்து மங்களூரு (கர்நாடகா) வந்தடைந்தது. மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் (Mangaluru International Airport) பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பாதுகாப்பு கருதி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த பயணிகளில்…

Read More

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்த வேண்டும்

இந்தியாவால் தேடப்படும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான முறையான கோரிக்கையை மலேசிய அரசுக்கு பிரதமர் மோடியின் அரசு அனுப்பி வைத்தது. மும்பையைச் சேர்ந்த மத போதகர் ஜாகீர் நாயக் 53. வங்கதேச தலைநகர் டாக்காவில் 2016-ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவன், தாம் ஜாகீர் நாயக்கின், பேச்சில் கவரப்பட்டு தாக்குதல் நடத்தியதாக கூறியதையடுத்து, ஜாகீர் நாயக்கை கைது செய்து விசாரணை நடத்துமாறு வங்கதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஜாமீர் நாயக் மீது பயங்கரவாத செயல்களில் ஈடுபட துாண்டியது மற்றும் கறுப்பு பண மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2016 -ம் ஆண்டு…

Read More

ஜஸ்டின் ட்ருடோவின் லிபெரல் அரசாங்கம் கனடாவில் ஊழலையும், ஏமாற்றுவோரையும் வோட்டுக்காக ஊக்குவிக்கின்றதா? – CERB

ஜஸ்டின் ட்ருடோவின் லிபெரல் அரசாங்கம் கனடாவில் ஊழலையும், ஏமாற்றுவோரையும் வோட்டுக்காக ஊக்குவிக்கின்றதா? –  CERB

வேலையில்லாத கனேடியர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வழங்குவதற்கு ஒட்டாவா வழக்கமான காசோலைகளையும் நிலுவைகளையும் தள்ளிவைக்கிறது. கனடிய அரசிடமிருந்து ஒரு மாதத்திற்கு $ 2,000-அவசரக் கட்டணத்தைப் பெறுவதற்கான ஒரு தேவை தொற்றுநோயால் உரிமைகோருபவர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டிரெடுக்கவேண்டுமென்பதுமாகும். வழக்கமான வேலைவாய்ப்பு காப்பீட்டுக்கு (EI) தகுதி பெறுவது அல்லது முந்தைய EI சலுகைகள் தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு தகுதி கிடைக்கும். விண்ணப்பங்களை செயலாக்கும் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடா (ஈ.எஸ்.டி.சி) ஊழியர்களுக்கு ஒரு புதிய குறிப்பு, அந்த நபர் தானாக முன்வந்து விலகியிருந்தாலும் அல்லது தவறான நடத்தைக்காக நீக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் உரிமைகோரல்களை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறுகிறது. தகுதியில்லாதோரும் மாதம் தோறும் $2000 வாங்க விண்ணப்பித்தாலும், அவர்களுக்கும் அந்த…

Read More
1 133 134 135 136 137 256