கொரோனா பாதிப்புகளில் ரஷ்யா 2வது இடம்

கொரோனா பாதிப்புகளில் ரஷ்யா 2வது இடம்

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து உலகளவில் ரஷ்யா இரண்டவது இடத்தை பிடித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,899 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,32,243 ஆக அதிகரித்தது. இவற்றில் 43, 512 பேர் குணமடைந்தனர். கொரோனா நோய் பாதித்து இதுவரை 2,116 பேர் பலியாகினர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். மாஸ்கோவிலும் பலருக்கு கொரோனா பரிசோதனைகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் பாதிக்கப்படுபவர்களின் நாளொன்றுக்கான…

Read More

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியில் கொரோனா தொற்று உறுதி

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியில் கொரோனா தொற்று உறுதி

சீனாவின் ஜிலின் நகரின் புறநகர்ப்பகுதியான ஷூலானில் ஒரு குழுவினரிடம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஜிலின் நகரின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் பலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், இண்டர்நெட் மையங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார். ஜிலினில் மட்டும் இதுவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா இரண்டாம் அலை வீசும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர்.

Read More

ஒன்ராறியோவில் முதல் செவிலியர் COVID-19 ஆல் இறந்தார்

ஒன்ராறியோவில் முதல் செவிலியர் COVID-19 ஆல் இறந்தார்

குழந்தைகளில் புதிய அறிகுறிகள் இருப்பதாக மாகாணம் எச்சரிக்கிறது ஒன்ராறியோ மாகாணம் தனது முதல் செவிலியரை COVID-19 க்கு இழந்தது. குழந்தைகளில் தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்தும் வீக்கமும் ஏற்படும். நர்ஸ் பிரையன் பீட்டி, லண்டனில் உள்ள கென்சிங்டன் கிராமத்தின் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் பணிபுரிந்தார். இங்கு ஏப்ரல் தொடக்கத்தில் COVID-19 நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டது. அதன் 78 குடியிருப்பாளர்கள் ஐந்து பேர் தொற்று வைரஸால் முன்னமே உயிரிழந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. பீட்டி எப்படி நோயால் பாதிக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இந்த தோற்று நீண்ட கால பராமரிப்பு இல்லத்திலுள்ள மேலும் ஒரு சில ஊழியர்களையும் பாதித்துள்ளது. “அவர் அர்ப்பணிப்புக்கான வரையறை, அவர் தனது சகாக்கள் மற்றும்…

Read More

தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு: அதிகாரிகள் அதிருப்தி

தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு: அதிகாரிகள் அதிருப்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு தபால் துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது குறித்து இலங்கை தபால் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய குறைப்பு குறித்து தபால் அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில்,அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில், தபால் துறையினருக்கும் முக்கிய பங்கு இருந்ததாக தபால் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் கொரோனா நிதி பங்களிப்பாக ஏப்ரல் மாதத்திற்கான ஒரு நாள் ஊதியத்தை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளது. போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எடுத்த தற்காலிக முடிவுகளின் காரணமாக, அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து குறைக்கப்பட்ட…

Read More

” ஊதிய நிறுத்தம் ” திணிக்க வேண்டாம் – CERB மற்றும் EI உரிமைகோரல்களில் மோசடி செய்வோரை புறக்கணிக்க Federal ஊழியர்களுக்கு உத்தரவு !!

” ஊதிய நிறுத்தம் ” திணிக்க வேண்டாம் – CERB மற்றும் EI உரிமைகோரல்களில் மோசடி செய்வோரை புறக்கணிக்க Federal ஊழியர்களுக்கு உத்தரவு !!

ஒரு மெமோ ஊழியர்களை பணம் செலுத்துவதை நிறுத்தவோ அல்லது சாத்தியமான துஷ்பிரயோகத்திற்கான விசாரணையைத் தூண்டவோ கூடாது என்று கூறியது, அதே நேரத்தில் துறை EI திட்டத்தின் “இணக்கம் மற்றும் அமலாக்கத்தை” இயக்கத்தை நிறுத்தியது. தொற்றுநோய்களின் போது அவசரகால மற்றும் வேலைவாய்ப்பு-காப்பீட்டு (ஈஐ) சலுகைகளுக்கான மில்லியன் கணக்கான விண்ணப்பங்களை பரிசோதிக்கும் Federal ஊழியர்கள் பரவலான மோசடி அறிக்கைகள் இருந்தபோதிலும், மோசடி செய்வதற்கான பெரும்பாலான சாத்தியமான வழக்குகளை புறக்கணிக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஊழியர்கள் சாத்தியமான துஷ்பிரயோகத்தைக் கண்டறிந்தால், அவர்கள் இன்னும் கட்டணத்தைச் செயல்படுத்த வேண்டும், மேலும் அந்தக் கோப்பை திணைக்களத்தின் ஒருமைப்பாட்டுக் கிளையில் குறிப்பிடக்கூடாது என்று வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடா கடந்த மாதம் வெளியிட்ட மெமோ கூறுயது….

Read More

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ், இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இவர் கடந்த ஒரு மாத காலம் அதிபர் விளாடிமிர்புடினை நேரில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளும் ‘கொரோனா’ வைரஸ் புகுந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த…

Read More

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்வு

இலங்கையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று முதல் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ள பின்னணியில், தொழில்சார் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியை இன்று (மே 11) முதல் வழங்கவுள்ளதாக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மக்களை வெளியில் செல்ல அனுமதிக்க புதிய நடைமுறை ஒன்றை இன்று முதல் அமல்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் நாட்டு பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையிலுள்ள இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டே வெளியில் செல்ல…

Read More

சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தியது

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்புகளை சமாளிக்க, சவுதி அரேபிய அரசு, வரியை 3 மடங்கு உயர்த்தி உள்ளது. மேலும் அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை குறைத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது. சவுதி அரேபியாவுக்கு முக்கிய பொருளாதார வளமான கச்சா எண்ணெய், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் முக்கிய வருவாய் தரும் மெக்கா, மெதினா புனிததலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் செல்வம் கொழிக்கும் சவுதி, சிக்கன நடவடிக்கையில் இறங்கிவிட்டது. அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை(ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடிப்படை பொருட்களுக்கான வரியையும் 15 சதவீதமாக (3 மடங்கு) உயர்த்தி…

Read More

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

இந்தியா மானேசரோவர் யாத்திரைக்கான சாலைப்பணியை துவைக்கியது

கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக தங்கள் நாட்டு எல்லையில் சாலைப்பணி மேற்கொண்ட இந்தியாவிற்கு நேபாளம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியா சீனா எல்லைப்பகுதியான உத்தர்கண்ட் மாநிலம் தர்ச்சூலா என்ற பகுதியிலிருந்து கைலாஷ் மானேசரோவர் யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்காக 80 கி.மீ. தொலைவிற்கு சாலைப்பணியை இந்திய அரசு கடந்த வெள்ளியன்று துவக்கியுள்ளது. இப்பணிகள் நேபாளம் நாட்டின் லைப்பூலோக் கணவாய் வழியாக சாலை போடப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருவதாகவும், நேபாளத்திற்கு சொந்தமான பகுதிகளில் சாலைப்பணிகள் மேற்கொண்டு வருவதற்கு நேபாளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிற்கான நேபாளம் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது. நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டுவிட்டரில் வெளியிட்டிருப்பதாவது: இந்தியாவின் இந்த…

Read More

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவின் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு : 69 ஆயிரம் பேர் பாதிப்பு

கனடாவில் அதிகரிக்கும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,148 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 68,839 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. கனடாவின் பல மாகாணங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தவும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். நோய் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் (நேற்று) புதிதாக 1,148 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 178 பேர் பலியாகினர்….

Read More
1 134 135 136 137 138 256