நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும் – ஸ்டாலின்

நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும் – ஸ்டாலின்

‘நீதியின் சக்கரம் நிற்காமல், நிச்சயம் சுழன்றே தீரும். அப்போது, ஊரடங்கு நேர ஊழல்களும், கொரோனா கால கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும், மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும்’ என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், கூறியுள்ளார். அவரது அறிக்கை: சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘கான்ட்ராக்டர்’ துரை ஜெயகுமார், பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், கூறப்பட்டுள்ள முறைகேடுகள், நெடுஞ்சாலை துறை முறைகேட்டை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளன. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில், 462.11 கி.மீ., நீள சாலைகளை, ஐந்து ஆண்டு பராமரிக்க, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பீதியில் உறைந்து, வீட்டிற்குள் முடங்கி கிடந்த நேரத்தில், ஏப்., 15ல், ‘ஆன்லைன் டெண்டர்’ தாக்கல் செய்ய கடைசி…

Read More

கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினரே காரணம் – யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்திலும் இதர பகுதி களிலும், கொரோனா வைரஸ் பரவ காரணமாக, தப்லிக் – இ – ஜமாத் அமைப்பினர் விளங்குகின்றனர். ஒரு நோயால் நாம் பாதிக்கப்படுவது குற்றமல்ல; ஆனால், தங்களுக்கு நோய் இருப்பதை மறைப்பது, மிகப்பெரிய குற்றம். இது கண்டனத்திற்குஉரியது. இந்த குற்றத்திற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். – யோகி ஆதித்யநாத் , உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ., ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும்! கொரோனா வைரசால் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நம் உறவினர் மற்றும் நண்பர்களை இழந்து தவிக்கிறோம். பொருளாதார சீர்குலைவு, அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து நாம் மீண்டு வர, மக்கள் ஒன்றிணைந்து இந்த…

Read More

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களை கைது செய்கிறது மலேசியா

ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யவுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களின் மூலம் நோய்த்தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கவே அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்தது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஒன்ராறியோ சில வணிகங்களை பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க முடிந்தால் மே 4 ஐ மீண்டும் திறக்க அனுமதிக்கிறது

ஒன்ராறியோ சில வணிகங்களை பாதுகாப்பு விதிகளுக்கு இணங்க முடிந்தால் மே 4 ஐ மீண்டும் திறக்க அனுமதிக்கிறது

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க அனுமதிக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு இணங்கக்கூடிய சில வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்று பிரீமியர் டக் ஃபோர்டு இன்று கூறுகிறார். கர்ப்-சைட் பிக்-அப்கள் கொண்ட தோட்ட மையங்கள், புல்வெளி பராமரிப்பு மற்றும் இயற்கையை ரசித்தல் நிறுவனங்கள் மற்றும் தானியங்கி கார் கழுவுதல் உள்ளிட்ட பல பருவகால வணிகங்கள் திறக்கப்படும். ஃபோர்டு கூறுகையில், ஆட்டோ டீலர்ஷிப்களை மீண்டும் திறக்க முடியும், ஆனால் நியமனம் மூலம் மட்டுமே வாடிக்கையாளர்களைப் பார்க்க வேண்டும். மற்றும் மரினாக்கள் மற்றும் கோல்ஃப் மைதானங்கள் மீண்டும் திறக்க கூடியவிரைவில் தயாராக முடியும். மீண்டும் வணிகங்கள் திறப்பதற்கு மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரியின் ஆலோசனையைப் பின்பற்ற…

Read More

ஆர்சனிக் ஆல்பம் 30 – கொரோனாவிலிருந்து காத்து கொள்ள ஹோமியோபதி மருந்து

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளவும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30′ என்ற ஹோமியோபதி மருந்தினை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்கின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிக்காமல் தடுக்க ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தினை ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி தும்மல், இருமல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்….

Read More

நடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

நடிகர் ரிஷி கபூரின் உடல் இன்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமார் ஒரு வருடம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 2018ஆம் ஆண்டு நியூயார்க்கிற்கு சிகிச்சைக்கு சென்ற அவர் கடந்த செப்டம்பர் மாதம் தான் இந்தியா திரும்பினார். கடந்த பிப்ரவரி மாதம் திடீரென மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதற்காக இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  நேற்று மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள ஹெச் என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,…

Read More

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் மிக அதிகமாக ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா – சென்னையில் 138 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தலைநகரமான சென்னையில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  ”தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2323 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று  ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில்…

Read More

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – நம்பிக்கையை இழக்கும் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது – நம்பிக்கையை இழக்கும் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிபர் டிரம்பின் கருத்துகள், அமெரிக்கர்களிடம் நம்பிக்கையை இழந்து வருவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தும் டிரம்பின் யோசனையை பெரும்பாலானோர் நிராகரித்துள்ளனர். கடந்த வாரம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக கொரோனா நோயாளிகள் உடலில் கிருமிநாசினி அல்லது புற ஊதா கதிர்களை செலுத்துவதால் ஏற்படும் நன்மை குறித்துபேசியதோடு, சுகாதார அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டுமென கூறியிருந்தார். டிரம்பின் யோசனைக்கு மருத்துவ நிபுணர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர். கிருமி நாசினி தயாரிப்பாளர்கள் அவற்றை செலுத்தி கொள்ள வேண்டாமென பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் டிரம்ப் அதனை நகைச்சுவையாக…

Read More

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் – 53 வயதில் அகால மரணம்

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் இர்பான்கான் – 53 வயதில் அகால மரணம்

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான்கான். பெருங்குடல் நோய் தொற்று காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அவர், இன்று திடீரென மரணமடைந்த சம்பவம் திரைத்துறையினருக்கு பேரதிர்ச்சியை அளித்தது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அமிதாபச்சன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பானின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,…

Read More

ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

ஐ.நா.வின் நிரந்தர இந்திய பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் – வாழ்த்துக்கள்

தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு பிப்.,5 ம் தேதி முதல் வெளியுறவுத்துறையின் பொருளாதார பிரிவில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

Read More
1 136 137 138 139 140 256