கோ பூஜா – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

கோ பூஜா  – அஸ்வ பூஜா – நந்தி (ரிஷப ராஜா) பூஜா – திருவண்ணாமலை கோசாலையில் அற்புத நிகழ்ச்சி !!

ஒவ்வொரு த்வாதசியிலும் கோ மாதாவுக்கு இதேபோல் சிறப்பு பூஜை நடக்கின்றது. இந்த வீடியோவைக் கிளிக் செய்து பாருங்கள் !! அகத்தி கீரையை (செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா) த்வாதசி தினத்தன்று பசுவுக்கு உண்ணக்கொடுத்தால், நம் வாழ்கை எல்லா கஸ்ட்ங்களும் நீங்கி அமைதியும்… செழிப்பும் நிறைந்ததாகும். உங்களால் முடிந்தால், பரிந்துரைத்தபடி பசுவுக்கு உணவளிக்கவும். அகத்தி கீரையை பசுவுக்கு உண்ணக்கொடுக்க சாத்தியமில்லாத இடத்தில் நீங்கள் இருந்தால், எங்கள் கோசாலாவில் பசுவுக்கு உணவளிக்க நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம், மேலும் ஒரு வருடத்தில் அனைத்து 24 த்வாதாஷிகளுக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பப் பெயருக்கும் அர்ச்சனை செய்து, வருடா வருடம் பிரசாதமும் அனுப்பிவைக்கப்படும். இதேபோல 24 பிரதோஷங்களின் போது சிறப்பு பூஜை மற்றும் ரிஷாப்…

Read More

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா- வெறிச்சோடும் நகரங்கள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா- வெறிச்சோடும் நகரங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன; அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் பெரும் விளையாட்டு போட்டிகள், நிகழ்வுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதுஇந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அடுத்த 14 நாட்களுக்கு …

Read More

இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

இந்துக்களுக்கு புகழாரம் – நமஸ்தே சொல்லும் டிரம்ப்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் சந்தித்து கொண்ட போது, இருவரும் கைகுலுக்காமல், இந்து பாரம்பரிய முறைப்படி வணக்கம் (நமஸ்தே) தெரிவித்து கொண்டனர். சீனாவின் வூஹான் நகரில் உண்டான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஈரானில் ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா அச்சுறுத்தலை தடுக்க முகமூடி அணியவும், கைகுலுக்குவதை தவிர்த்து, வணக்கம் தெரிவிக்க வேண்டும். சற்று இடைவெளி விட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் கூட, கொரோனா பரவுதலை தடுக்க இந்தியர்களை போல் நமஸ்தே சொல்ல…

Read More

இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கோவிட் 19 – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் இன்றைய தினம் (மார்ச் 12) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக இன்று மாலை அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்கவை மேற்கோள்காட்டி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவெவ இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை ஐ.டி.எச் தொற்று நோய் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையர் இவராவார். உலகம் முழுவதும் பாரிய உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கோவிட் – 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையை தாக்கியுள்ளதையடுத்து, இலங்கை…

Read More

ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா

ஜோதிர் ஆதித்யா சிந்தியா மற்றும் 22 எம்.எல்.ஏ.க்கள், கட்சியிலிருந்து விலகியதால் ம.பி.காங்., அரசு மீது மார்ச் 16-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக ம.பி., பாஜ., மூத்த தலைவர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். ஒரு வருடம் மற்றும் மூன்று மாதங்களை நிறைவு செய்யவுள்ள கமல்நாத் தலைமையிலான காங்., அரசு, ஆட்சியைக் காப்பாற்ற கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கட்சியிலிருந்து சிந்தியா விலகிய பிறகு அவரும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் ராஜினாமா கடிதங்களை ஆளுநர், சட்டசபை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். இதனால், கமல்நாத் அரசு ஆட்டம் கண்டுள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால் சட்டசபையில் காங்., பலம் 92ஆக குறைந்துவிடும். பெரும்பான்மையை நிரூபிக்க 104 இடங்கள் தேவையுள்ள நிலையில்,…

Read More

முன்னாள் காதலியை ” விபசாரி ” என்று பேசிய சீமானின் தமிழ் பண்பாடு காற்றில் பறக்கிறது !!

முன்னாள் காதலியை ” விபசாரி ” என்று பேசிய சீமானின் தமிழ் பண்பாடு காற்றில் பறக்கிறது !!

‘மேடைகள் தோறும், என்னை விபச்சாரி என, சித்தரித்து பேசிவரும், சீமான் மற்றும் அவரது அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, நடிகை விஜயலட்சுமி, போலீசில் புகார் அளித்துள்ளார். ‘தம்பி’ உள்ளிட்ட படங்களை, இயக்கியவர், சீமான். இவர், நாம் தமிழர் என்ற அமைப்பை துவங்கி, ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவரும், ‘பூந்தோட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள, விஜயலட்சுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீமான், வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதனால், சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய விஜயலட்சுமி, காதலர் தினத்தன்று, இருவரும், ‘கேக்’ வெட்டிய படங்களையும் வெளியிட்டார். சமீபத்தில், சீமான், ‘ஏய் பொண்டாட்டி… நான் கெட்டவன் இல்லடி… கேடு கெட்டவன்டி’ என, பேசுவதுபோல, ‘வீடியோ’…

Read More

“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

“யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி

பல்வேறு முறைகேடு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ” யெஸ்” வங்கியில் ஜெகன்நாதர் கோயில் பணம் ரூ.545 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.இதனை எடுக்க முடியாமல் இந்த கோயில் நிர்வாகம் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார். வாராக்கடன் நிர்வாகச் சீர்கேடு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளில் தனியார் வங்கியான ‘யெஸ் பேங்க்’ சிக்கியுள்ளது. இதனால் அந்த வங்கி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வங்கியின் வாடிக்கையாளர் ‘அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம்’ என்ற கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது…

Read More

போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதை மருந்து கொடுத்து பெண்கள் போராட்டம் !!

போதைப்பொருளின் தாக்கத்தால் தான் பெண்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், அதனால் அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடுவதாகவும் பாஜ தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் உள்ள ரபின்திர பாரதி பல்கலை.,யில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில பாஜ., தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநிலத்தில் கலாச்சார மரபுகள் பாழாகி வருகின்றன. பெண்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை மறந்துவிடுகிறார்கள். அவர்கள் போராட்டங்களின் முகமாக மாற்றப்படுகிறார்கள். போதைப்பொருளின் தாக்கத்தால் நாள் முழுவதும் அவர்கள் கூச்சலிடுகின்றனர். இது என்ன வகையான வங்கம்?பெண்கள் இப்படி இருந்தால், அவர்களுடன் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும். இந்த சமூக அவலத்திற்கான காரணத்தை அனைவரும் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு…

Read More

தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை !!

மருத்துவமனையில், கவலைக்கிடமான நிலையில் இருக்கும், அன்பழகனின் உடல் நலம் குறித்து, டாக்டர்களிடம், கேட்டறிந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘தீவிர சிகிச்சைக்கு பலனளிக்காமல் அன்பழகனின் உடல் நிலை உள்ளது’ எனத் தெரிவித்தார். தி.மு.க., பொதுச்செயலர், அன்பழகன், 97, உடல் நலக்குறைவு காரணமாக, சில நாட்களாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அன்பழகனுக்கு, சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து, அவரது உறவினர்களிடமும், டாக்டர்களிடம் விசாரித்தார். பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:…

Read More

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா சோதனை கருவி-அலருது அமெரிக்கா : வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டம்

கொரோனா தாக்கம் குறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த அவசரக் கூட்டத்திற்கு பின், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவில் நேற்று (மார்ச் 5) கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவரை தவிர, மற்ற அனைவரும் வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் இதுவரை, 20 மாகாணங்களைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்யும் சோதனை கருவிகள் போதுமான அளவு கைவசம் இல்லை. தற்போது, 10 லட்சம் கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை தேவை உள்ளது. அவற்றை ஒரு வாரத்திற்குள் தருமாறு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவற்றை ஒரு…

Read More
1 143 144 145 146 147 256