யானை சின்னம் யாருக்கு? ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளது !!

யானை சின்னம் யாருக்கு? ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்துள்ளது !!

ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இந்த கூட்டணி திங்கட்கிழமை உருவாக்கப்பட்டது. கொழும்பு தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதீயூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துக்கொண்டுள்ளன. அது மாத்திரமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 20…

Read More

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

மோடி அறிவுரை – கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்

டில்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில் ‘அச்சம் வேண்டாம்’ என பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலை தளத்தில் கூறியுள்ளார். மேலும் வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நம் அண்டை நாடான சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகெங்கும் 67 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் மருத்துவம் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருந்தது. பூரண குணமடைந்த அவர்கள் கடந்த மாதம் வீடு திரும்பினர். இந்த நிலையில் டில்லி மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த தலா ஒருவருக்கு…

Read More

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார்

மாடு மேய்க்கும் கண்ணே – பாடலை வைஷ்ணவி திலிபன் மிக அழகாக பாடியிருக்கிறார் . இது யசோத மாயாவுக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான உரையாடல் போல அமைந்திருக்கும் அழகான கிருஷ்ண பக்தி பாடல். கிருஷ்ணா வெய்யில் நேரத்தில் வெளியே செல்வதையும், எல்லா வகையான ஆபத்துகளையும் நீர்கொள்வதையும் அம்மா தடுக்கப்பார்கிறார். ஆனால் மறுபுறம், கிருஷ்ணர் ஏன் நிச்சயமாக வெளியே செல்ல வேண்டும் என்று தனது அம்மா யசோதாவை சமாதானப்படுத்துகிறார், வழக்கம் போல் அவர் தனது வழியைப் பெறுகிறார். இந்த அழகான தமிழ் பாடலை கேட்டு ரசித்து பின் செல்வி வைஷ்ணவி மென்மேலும் பல நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று முன்னேற ஆசிர்வதித்து வாழ்த்துங்கள் !!  

Read More

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை பீர் தாரிக் – மகள் இன்ஷா கைது

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கடந்தாண்டு பிப்ரவரியில், காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது, தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த அடில் அகமது தர் என்பது பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்தது. இந்த சம்பவம்…

Read More

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு !!

இலங்கை பார்லிமென்ட் கலைப்பு !!

இலங்கை பார்லிமென்டை கலைப்பதற்கான அரசாணையில் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டார்.  இலங்கைக்கு கடந்த 2015ம் வருடம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 2015ம் வருடம் செப். 1ல் பார்லிமென்ட் பதவிக்கு வந்தது. ராஜபக்சே முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பார்லிமென்டை கலைப்பதற்கான அரசாணையில் கையெழுத்திட்டார். கையெழுத்திடப்பட்ட அரசாணை இலங்கை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்லியின் பதவிக்காலம் 6 மாதம் இருக்கும் நிலையில் அந்நாட்டில் பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. இலங்கை பார்லிமென்ட் தேர்தல் ஏப். 25ம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்லி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை நடக்க உள்ளது.

Read More

சமூக வலைதளங்களிலிருந்து விலக பிரதமர் மோடி முடிவு

சமூக வலைதளங்களிலிருந்து விலக பிரதமர் மோடி முடிவு

சமூக வலைதளங்களிலிருந்து விலக யோசித்து வருவதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவது குறித்து, ஞாயிற்றுக்கழமை திட்டமிட்டேன். இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.   சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரதமர் மோடியை பேஸ்புக்கில் 44.72 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 35.2 பேரும், யூடியூபில் 4.5 மில்லியன் பேரும், டுவிட்டரில் 53.3 மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில் அவரது இப்பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை, பாக்., நாடியுள்ளது.   சீனாவில், சில ஆண்டுகளுக்கு முன், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவற்றை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற வாத்துகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு வாத்தும், தினமும், 200 வெட்டுக்கிளிகளை பிடித்து தின்னும் திறன் பெற்றவை. கோழிகளும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றாலும், அவற்றால், தினமும், 70…

Read More

டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக பணிபுரிந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் சந்தேகம் வலுத்தது. தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது…

Read More

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், பாதுகாப்பு – ட்ரம்ப், மோடி பேட்டி !!

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி பேசுகையில், கடந்த 8 மாதங்களில் 5வது முறையாக ட்ரம்பை சந்தித்துள்ளேன். நேற்றைய தினம் அலகாபாத்தின் மோதிரா மைதானத்தில் அதிபர் ட்ரம்பிற்கு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவொரு மறக்க முடியாத தருணமாக இருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய நட்பு நாடுகள் ஆகும். இன்றைய தினம் அமெரிக்கா – இந்தியா இடையிலான அனைத்து முக்கியமான விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பாதுகாப்புத்துறை, ஆற்றல், வர்த்தகம் ஆகியவற்றில் இருதரப்பு உறவை மேம்படுத்த உள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் பாதுகாப்புத் துறை தொடர்பாக உருவாகும் ஒப்பந்தம் மிக முக்கியமானது. வர்த்தகத்துறையில் நமது அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு…

Read More

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! குவியும் வாழ்த்துக்கள்!

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி ராமன் (26) என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் மெல்போர்னில் பிறந்தார், ஆனால் தென்னிந்தியாவின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 26, 2020 அன்று நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதுகுறித்து மருந்தளராக பணிபுரிந்து வரும் வினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த வாரம் எனக்கு பிடித்த நபர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார்” என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும், மேக்ஸ்வெல்லிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து…

Read More
1 144 145 146 147 148 256