60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண் – தென் கொரியாவில் அதிர்ச்சி

60 சதவீத பேருக்கு கொரோனா பரப்பிய பெண் – தென் கொரியாவில் அதிர்ச்சி

தென் கொரியாவில் 60 சதவீதம் பேருக்கு ஒரு பெண்ணால் மட்டும் கொரோனா பரவி உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஆழ்த்தியுள்ள கொரோனா சமீப காலமாக படு வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் மூன்றரை லட்சத்திற்கும் மேலாக பரவியுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேல் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இந்த நோய் பரவல் மிக வேகமாக இருக்கும் என்பதால் அனைத்து நாடுகளும் எமர்ஜென்ஸி நிலை போல் கண்காணித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர் எங்கு சென்றார், யாரிடம் எல்லாம் பேசினார். யாருடன் தங்கினார் என்ற தகவலின்படி சுகாதார துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்கொரியாவில் மொத்தம் 8 ஆயிரத்து 961 பேர்…

Read More

22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம்

22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம்

இந்த 22 மார்ச் 2020 அன்று ஜனதா ஊரடங்கு (ஜனதா கர்ப்பியூ) உத்தரவு மற்றும் பாரதத்தையும் ஆதரிப்போம் !! #CoronaVirus # COVID-19 க்கு எதிரான போராடத்தில் கைகோர்ப்போம் !! வீட்டின் உள்ளிருந்து நம் வீட்டவரின் ஆரோக்கியத்தை பாதுகாப்போம் !! பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மகிழ்ச்சியான & ஆரோக்கியமான பாரதத்தை உருவாக்குவோம் !! சனாதன் தர்மம் “வாசுதைவ குட்டம்பகம்” என்று கற்பிக்கிறது, அதாவது முழு உலகமும் என் குடும்பம் .. எல்லா உயிரினங்களும் என் குடும்பம். விலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் பூச்சிகளைக் கொன்று சாப்பிடாமல் அன்பாகவும் அக்கறையுடனும் இருக்கட்டும், அவை நம்மிடமும் அன்பு காட்டும் !! நான் ஒரு பெருமைமிக்க இந்து …..

Read More

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

ஈரானில் கொரோனா கொலைவெறி; 10 நிமிடத்திற்கு ஒருவர் பலி

‘ஈரானில் கொரோனாவின் கொலைவெறிக்கு, 10 நிமிடங்களுக்கு ஒரு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது’ என, ஈரான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று தன் கொலைவெறிக்கு உலகம் முழுவதும் இதுவரை, 10 ஆயிரம் பேரை பலிகொண்டுள்ளது. முதன் முதலில் கொரோனா பரவிய சீனா, தற்போது பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது. ஆனால், 170க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த வைரஸ் உலுக்கி எடுத்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியும் ஈரானும் இந்த வைரசால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வைரசால் சீனாவில் – 3,248, இத்தாலியில் – 3,405, ஈரானில் – 1,284 பேர் பலியாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து…

Read More

கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து !!

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்து இருப்பதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்துஅமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டின. இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “

மோடி வேண்டுகோள் – மார்ச்-22 ம் தேதி ” ஜனதா கர்ப்பியூ “

மார்ச் 22 ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம் என மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லவேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடைமுறையை…

Read More

தெரு நாயகளுக்கு உணவளிப்பதின் மூலம் எப்படி ராகு / கேது / பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடலாம் !!

தெரு நாயகளுக்கு உணவளிப்பதின் மூலம் எப்படி ராகு / கேது / பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடலாம் !!

ஒழுக்கமான நாய்கள் சாப்பிடுவதற்கான முறைக்காக காத்திருக்கின்றன .. திருவண்ணாமலை ஆசிரமத்திலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள சிறந்த வீடியோ !! அவர்கள் ஒவ்வொரு நாயையும் பெயரால் அழைக்கிறார்கள், பின்னர் அவர்கள் சாப்பிட வருகிறார்கள். நீங்கள் இந்த வீடியோவை பார்த்தாலே அதை நம்பமுடியும். சைவ நாய்கள். அவர்கள் எப்போதாவது எந்த இறைச்சியையும் சாப்பிடுவதில்லை. அனைவரையும் தங்கள் பூஜை / தியானம் / சேவையை மௌனமாக செய்ய ஆசிரமம் அனுமதிக்கும் விதிகளையும் விதிகளையும் பின்பற்றுங்கள். நம்பமுடியாதது ஆனால் உண்மை !! தனித்து விடப்பட்ட தெரு நாயகளுக்கு உணவளிப்பதின் மூலம் எப்படி ராகு / கேது / பித்ரு தோஷங்களிலிருந்து விடுபடுவதுக்கு இந்த வீடியோவை முழுமையாமையாக பார்க்கவும். திருமணம் செய்த்துக்கொள்ள விரும்பியும்…

Read More

அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!

அமெரிக்காவின் முயற்சி – கொரோனா தடுப்பூசி சோதனை !!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி, சோதனை முயற்சியாக, முதன்முறையாக 43 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கு செலுத்தப்பட்டது. அதன் முடிவுக்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 1.84 லட்சம் பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 7,157 பேர் உலகெங்கும் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்ததாக, ஐரோப்பிய நாடுகளில், இந்த வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. சீனாவில் 3,226 பேர், இத்தாலியில் 2,158 பேர், ஈரானில் 853, ஸ்பெயினில் 342 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய மருத்துவ மையம், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பூசி பரிசோதனையை…

Read More

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?

இத்தாலி வெளியிட்ட வீடியோ – எப்படி பரவுகிறது கொரோனா வைரஸ் ?

உலகில் உள்ள 162 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் தொற்று இதுவரை 1,82,725 பேருக்கு பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இத்தாலியில் மட்டும் இதுவரை 2158 பேர் உயிரிழந்துள்ளனர். 23073 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலி முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு மனிதர்களிடம் பரவுகிறது என்பது குறித்து இத்தாலி அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று உள்ளவருக்கு எந்தவித பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போது மருத்துவ பணியாளர்களுக்கும், நோயாளியை தொடும் உறவினர்களுக்கும் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தும்போது அதன்மூலமும் கொரோனா பரவுகிறது என்பது அந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது. இதற்கு…

Read More

அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்க பள்ளிகளில் யோகா – 27 ஆண்டு தடை நீங்குகிறது !!

அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா வகுப்புகள் நடைபெற்று வந்தன. கன்சர்வேடிவ் கட்சியினரின் எதிர்ப்பால், அலபாமா கல்வி வாரியம், 1993ல், யோகா வகுப்புகளை தடை செய்தது. இந்நிலையில், ஜனநாயக கட்சி உறுப்பினர் ஜெர்மி கிரே, ”மன அழுத்தம், பதற்றம், மன சோர்வு உள்ளிட்டவற்றை நீக்க உதவும் யோகா வகுப்புகளை, மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்,” என, வலியுறுத்தினார். அவரது முயற்சியால், அலபாமா மாகாண பிரதிநிதிகள் சபையில், யோகா மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. மசோதாவில், ‘யோகாவின் அனைத்து தோற்றங்கள், பயிற்சிகள்…

Read More

துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்…

Read More
1 142 143 144 145 146 256