வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்
வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவர்மீது வங்கதேசத்தில் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக சின்ஹா உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு கமிஷன் வங்க தேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலபதிர்கள் இருவர் போலி ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும் அந்த தொகை முழுவதும் சின்ஹாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது….
Read More









