கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது – பல பகுதிகளில் மண்சரிவு
வியாழக்கிழமை இரவு முதல் முதல் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார். மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதேபோன்று, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை…
Read More








