கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் வெள்ளம்: 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளாவில் கடந்த ஒருவாரமாக தீவிரமாக பெய்துவரும் பருவமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில் நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். திருவனந்தபுரம், கொல்லம் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் மாநிலத்தில் மேலும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவ உதவியை கேரள அரசு கோரியுள்ளது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மிக அதிகன மழைக்கும், வயநாடு மற்றும் இடுக்கி ஆகிய…

Read More

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டது பாகிஸ்தான்

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விவாதிப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. அப்போது பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி பாவத் சவுத்ரி, இந்தியா உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும் என கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இந்திய தூதர் ஏன் இங்கே இருக்கிறார்? நாம் ஏன் தூதரக உறவுகளை துண்டிக்கவில்லை? இரு நாடுகளுக்கும் இடையில் தூதரகம் இல்லாதபோது, அங்கு (இந்தியாவில்) நமது தூதர் என்ன செய்கிறார்?’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும், ‘‘காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனமாக மாற பாகிஸ்தான் அனுமதிக்கக்கூடாது’’ என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘பாகிஸ்தான் போருக்கு பயப்படக்கூடாது, ஏனென்றால் எதையும் விட மரியாதை முக்கியமானது….

Read More

தூதரை திரும்ப அழைக்க பாக்., முடிவு

தூதரை திரும்ப அழைக்க பாக்., முடிவு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு பறித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப பெற்று கொள்ள பாக்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 – ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. மாநிலத்தை ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. மோடி அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிித்திருந்தது. இந்த விவகாரத்தில், இந்தியாவிற்கான தூதரை திரும்ப அழைத்து கொள்ள பாகிஸ்தான்…

Read More

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் இன்று (ஆக்.06) காலமானார். பா.ஜ.,வின், மூத்த தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ், 67 , கடந்த 2014 லோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்….

Read More

பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள் தனியே : போகலாம் இனியே

பெண்கள், ஆண் துணை இல்லாமல் வெளிநாடு செல்ல சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான், பொறுப்பேற்றுக் கொண்டது முதல் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சவுதியில் தியேட்டர், விண்வெளித் திட்டம் போன்றவை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் தனியாக பாஸ்போர்டிற்கு விண்ணப்பித்து, வெளிநாடு செல்வதற்கு சவுதி அரேபிய அரசு அனுமதி அளித்துள்ளது. 21 வயது நிறைவடைந்த எந்த ஒரு பெண்ணும், யாரின்…

Read More

ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா

மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது. 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது. புதியவகை சீரியங்கு ஏவுகணைகளை (குரூய்ஸ் மிசைல்) பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம் இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா மீறுவதாக அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்தே குற்றம்சாட்டிவந்தன. ஆனால், இதை ரஷ்யா மறுத்துவந்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா…

Read More

ராணுவ உடையில் எம்.எஸ். டோனி

ராணுவ உடையில் எம்.எஸ். டோனி

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்றுள்ள டோனி ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். செவ்வாயன்று காஷ்மீரில் ராணுவப்படையில் சேர்ந்த அவர், ராணுவ சீருடையில் அவர் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்குக் காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் டோனி பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் வரை பணியாற்றுவார் என்று தெரிகிறது.

Read More

தூத்துக்குடிக்கு கடலில் மாலத்தீவு மாஜி துணை அதிபர் கைது?

தூத்துக்குடிக்கு கடலில் மாலத்தீவு மாஜி துணை அதிபர் கைது?

மாலத்தீவில் இருந்து வந்த இழுவைக் கப்பலில் மாறுவேடத்தில் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமத் அதிப் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடியில் இருந்து கடந்த 11 ஆம் தேதி மாலத் தீவிற்கு கருங்கல் ஏற்றி சென்ற விர்கோ 9 என்ற இழுவைப் படகில் இந்தோனீசியாவை சேர்ந்த 8 ஊழியர்களும், ஓர் இந்தியரும் சென்றுள்ளனர்.கடந்த 27 ஆம் தேதி சரக்கை இறக்கிவிட்டு தூத்துக்குடி நோக்கி வந்த இந்த இழுவைப் படகில் பத்தாவதாக ஒரு நபர் வந்துள்ளார். இது தொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து உளவுத்துறையினர் நடுக்கடலில் படகில் வந்த பத்தாவது நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்தப் பத்தாவது நபர் மாலத்தீவு முன்னாள் துணை ஜனாதிபதி…

Read More

நேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது

நேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது

புதன்கிழமை காலை மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றின் அருகே கஃபே காஃபி டேயின் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேநீர் அருந்துவதில் ஆர்வமாக இருந்த இளம்வயது இந்தியர்களை காஃபியை நோக்கி திருப்பிய 59 வயதான சித்தார்த்தாவின் பங்கு மிகவும் முக்கியமானது. தென் இந்திய உணவகங்கள் விற்கும் பொதுவான காஃபியைவிட வித்தியாசமான முறையில் கஃபே காஃபி டேயின் தயாரிப்புகள் இருந்த நிலையில், தங்களின் சகபோட்டியாளரான ஸ்டார்பக்ஸ் போன்ற புதிய காஃபி குழுமத்தைவிட தங்களின் கிளைகளை நாட்டின் அனைத்து இடங்களிலும் கஃபே காஃபி டே தொடங்கியது. இதுவே கஃபே காஃபி டே இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக காரணமாக அமைந்தது. இந்தியாவில் காஃபி பயன்பாட்டை அதிகரிப்பது…

Read More

துபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

துபாய் இளவரசி: கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார். ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார். இளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தில் நடந்தது என்ன? ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது,…

Read More
1 164 165 166 167 168 256