10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்

10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub) என்ற இணையதளத்திலும் தற்பெருமை அடித்துள்ளார். இதை கவனித்த இணையதள பயனாளர் ஒருவர், கேபிடல் ஒன் வங்கிக்கு தகவல் அளித்துள்ளார். வங்கியும் கிரடிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டதை அறிந்து புகார் அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தகவல் திருட்டில் ஈடுபட்ட பெய்ஜ் தாம்சனை கைது செய்த எப்பிஐ அதிகாரிகள், திருடி வைத்திருந்த விவரங்களையும் மீட்டுள்ளனர். கிரடிட் கார்டு கணக்கு விவரங்களையோ…

Read More

பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்

பிரேசில் காட்டில் பழங்குடியின தலைவர் கொலை – தங்க சுரங்கத்திற்காக விரட்டப்படும் பூர்வகுடிகள்

வடக்கு பிரேசிலில் உள்ள தொலைதூர அமேசான் காடு ஒன்றில் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய தங்கச் சுரங்க பணியாளர்கள், பழங்குடியின தலைவர்களில் ஒருவரை கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பழங்குடியினர் தங்கம் நிறைந்த அந்த பகுதியை மீண்டும் கைப்பற்ற முயன்றால், வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் அமாபா மாநிலத்தில் உள்ள அந்த கிராம மக்கள் ஊரைவிட்டு சென்று வருகின்றனர். அந்த பகுதியில் கூடுதலாக போலீஸார் காவலில் பணியமர்த்தப்பட்டனர். பிரேசிலில் அதிதீவிர வலதுசாரி கொள்கைக் கொண்ட போல்சானாரோ அதிபராக பதியேற்றப் பிறகு காப்பு காடுகளுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருவதால் அமேசான் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காப்பு காடுகளில் பல பகுதிகளில் சுரங்கப் பணிகள் நடத்தப்படும் என அவர்…

Read More

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா?

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா?

நெல்லை மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). தி.மு.க.வை சேர்ந்த இவர் நெல்லை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராகவும் இருந்து வந்தார். உமா மகேசுவரியின் கணவர் முருகசங்கரன் (72). நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுடைய வீடு நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகில் உள்ள ரோஸ்நகரில் உள்ளது. இவர்களுக்கு கார்த்திகா, பிரியா என 2 மகள்கள் உள்ளனர். உமா மகேசுவரி வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரி என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உமா மகேசுவரி, முருகசங்கரன், மாரி ஆகிய 3 பேரையும் கொள்ளை கும்பல் கொடூரமாக கொலை செய்து…

Read More

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு

இஸ்லாமாபாத்:’சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி,இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, இந்திய துாதரக அதிகாரிகளை சந்தித்து பேச, வாய்ப்பு வழங்கப்படும்’ என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன், குல்பூஷன் ஜாதவ், , பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான அவருக்கு, பாக்., ராணுவ நீதிமன்றம், மரண தண்டனை விதித்துள்ளது. அதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின், 17ல், தீர்ப்பு வழங்கப்பட்டது. ‘குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாக்., மறு பரிசீலனை செய்ய வேண்டும்; இந்திய துாதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், பாக்., வெளியுறவுத்…

Read More

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையையும் மீறி, தைவான் நீரிணையில் அமெரிக்கக் கடற்படை போர் கப்பல் பயணித்து இருப்பது சீனக்கடல் பகுதியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தென் சீனக்கடலில், சீனா தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி வருகிறது. சமீபமாக தங்களது கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு சுய அதிகாரம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது. தைவானுக்கு சுதந்திரம் அளிப்பது தங்கள் இறையாண்மைக்கு எதிரானது என்றும் சீனா கூறி உள்ளது. தங்களிடம் இருந்து தைவானைப் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் படைபலத்தை பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம் என்று கடந்த புதன்கிழமை (ஜூலை 24) அன்று சீனா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் சீனா – தைவானைப் பிரிக்கும்…

Read More

மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள், புதிதாக மோசடி சர்ச்சையில் சிக்கி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி. தோனியும் அவரது மனைவி சாக்ஷியும், தங்களின் நிறுவனங்களில் போலி ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.தோனி மனைவி சாக்ஷி நடத்தும் அம்ராபாலி மகி (மகி என்பது தோனிக்கு ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர்) நிறுவனம் போலி ஒப்பந்தங்கள் தயாரித்து, வீடு கட்டி தருவதாக மக்கள் பணத்தை ஏமாற்றியதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒப்பந்தங்களின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்ய 2 ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது….

Read More

இஸ்ரோவின் மூன்றாண்டு வருமானம் ரூ. 6 ஆயிரம் கோடி

இஸ்ரோவின் மூன்றாண்டு வருமானம் ரூ. 6 ஆயிரம் கோடி

கடந்த மூன்று ஆண்டுகளில் வணிக ரீதியாக செலுத்தப்பட்ட செயற்கை கோள்கள் மூலம் இஸ்ரோ 6 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது குறித்து அமைச்சர் ஜிதேந்திரசிங் பார்லியில் கூறியதாவது: இஸ்ரோவின் துணை அமைப்பான ஆண்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் செயற்கை கோள்களை வணிக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 239 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் இஸ்ரோவின் வருவாய் சுமார் 6 ஆயிரத்து 289.05 கோடி ரூபாயாக உள்ளது. நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(என்.எஸ்.ஐ.எல் ) என்பது இந்திய விண்வெளி திட்டத்தில் அதிகரித்து வரும் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கும்,…

Read More

இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்து புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு

இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவர் (பிரதமர்) யார்? என்பதை தீர்மானிப்பதாக இருந்தன . போரிஸ் ஜான்சனுக்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே அதிக ஆதரவு இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தெரிய வந்திருப்பதால் அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆவார் என நம்பப்பட்டது…

Read More

றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

கனடாவின் றிச்மன்ட்ஹில் மாநகரில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கனடா உதயன் “கிளிக்” செய்த ஹர்சிதாவின் அற்புதமான நடனத் தோற்றங்கள் பல. நடனச் செல்வி ஹர்சிதா சிவகரன் அவர்களின் குரு (மார்) கலைமன்றம் நுண்கலைக் கல்லூரி யின் ஸ்;தாபகர் ஶ்ரீமதி நிரஞ்;சனா சந்துரு மற்றும் அவரது புதல்வி செல்வி ஐஸ்வரியா சந்துரு ஆகியோர். அன்பான பெற்றோர் திரு சிவகரன் மற்றும் சர்மிளா ஆகியோர் அற்புதமான ஒரு அரங்கேற்றத்திற்கு வருகை தந்த ஒவ்வொருவரும் நன்றாக துயில் கொள்ளலாம். ஹர்சிதா சிவகரனுக்கு எமது வாழ்த்துக்கள்

Read More

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம்

ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வத்தின் கொடியேற்ற வைபவம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை தொடக்கம் நடைபெற்று மதியம் 11.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்கள் ஆலயத்தின் சக சிவாச்சாரியப் பெருமக்கள் சகிதம் அனைத்து கிரியைகள் மற்றும் அபிசேகங்கள் அனைத்தையும் மி;கவும் நேர்த்தியாகவும் வேதாகம விதிப்படியும் ஆற்றினார்கள். கொடியேற்றத்தின் உபயகாரர்கள் திரு ரூபன் அரியரத்தினம் தனது துணைவியார் மற்றும் தனது பெற்றோர் சகிதம் அங்கு சமூகமளித்திருந்தார். மற்றும் தேர் உற்சவ உபயகாரர் வர்த்த்கப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் வர்த்தகப் பிரமுகர் திரு கேதா நடராஜா போன்றவர்கள் உட்பட பல…

Read More
1 165 166 167 168 169 256