சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

சீன பொருட்களுக்கு வரி உயர்வு செய்தது அமெரிக்கா

இதற்கு பதிலடி தரப்படும் என, சீனா தெரிவித்துள்ளால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்து, வரியை குறைப்பதாக சீனா உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘சீனா உறுதி அளித்தபடி நடந்து கொள்ளாததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும், 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு, 10ம் தேதி வரி உயர்த்தப்படும்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து, நேற்று, சீன துணை அதிபர், லியு ஹீ தலைமையிலான குழு, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, ராபர்ட் லைட்திசர் உள்ளிட்ட, உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசியது. இரவு வரை…

Read More

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

தேவராட்டம் – சினிமா விமர்சனம்

`கொம்பன்’, ‘குட்டிப்புலி’, `மருது’, `கொடிவீரன்’ படங்களுக்கு அடுத்து முத்தைய்யா இயக்கியிருக்கும் படம் தேவராட்டம். அவரது முந்தைய படங்களின் வரிசையை வைத்து இந்தப் படத்தின் பின்னணியை ஒருவாறாக யூகித்துக்கொள்ள முடியும். மதுரை மாவட்டத்தில் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வெற்றியை (கௌதம் கார்த்தி) அவரது சகோதரிகள் வளர்த்து, படிக்கவைக்கிறார்கள். வழக்கறிஞர் ஆகிறார் வெற்றி. அதே மாவட்டத்தைச் சேர்ந்த கொடும்பாவி கணேசன் (ஃபெப்சி விஜயன்) தன்னை எதிர்ப்பவர்களை கொன்று குவிக்கும் நபர். கணேசனின் மகன் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு பெண் விவகாரத்தில் தலையிட நேர்ந்தபோது, கணேசனின் மகனை வெற்றி கொலைசெய்துவிடுகிறான். அதற்கு பழிவாங்கத் துடிக்கும் கணேசன், வெற்றியின் சகோதரியையும் (வினோதினி) அவரது கணவரையும் (போஸ் வெங்கட்) கொன்றுவிடுகிறான். பிறகு என்ன…

Read More

தூக்கத்தில் இருந்த காதலியை கற்பழித்த வாலிபர் சிக்கினார்

தூக்கத்தில் இருந்த காதலியை கற்பழித்த வாலிபர் சிக்கினார்

இங்கிலாந்து நாட்டின் நியூகேசில் நகரை சேர்ந்த இளம்பெண் ஜேட் பெய்லி ரீக்ஸ் (வயது 21). இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர் டேவிஸ் பேட்டன் (வயது 23) பல்கலை கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் உடல்நல குறைவு ஏற்பட்ட ஜேட் தனது வீட்டில் உள்ள அறையொன்றில் படுத்து தூங்கியுள்ளார். அங்கு வந்த பேட்டன் அவரது அனுமதியின்றி ஜேடை கற்பழித்து விட்டார். தூங்கியெழுந்த ஜேட் தனது ஆடைகள் களையப்பட்டு இருந்தது அறிந்து அதிர்ந்துள்ளார். இதன்பின் பேட்டனிடம் பேசியதில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது ஜேடுக்கு தெரியவந்தது. ஆனால் அவர்கள் இருவரும் பேசிய தகவல்களை ஜேடின்…

Read More

தமிழகம் முழுவதும் மழை

தமிழகம் முழுவதும் மழை

மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ் முதல், 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகிறது. தமிழகத்தில் இன்று(மே 9) 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்த அனல் காற்றுக்கு நடுவே, சில பகுதிகளில், கோடை மழையும் கொட்டுகிறது. இன்று பகலில் வெயில் கொளுத்திய நிலையில், மாலை நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது….

Read More

பாகிஸ்தானை விட்டு கனடா வந்தார் ஆசியா பீபி

பாகிஸ்தானை விட்டு கனடா வந்தார் ஆசியா பீபி

பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த கிறித்துவ பெண் ஆசியா பீபி 12 மணிநேரங்களுக்கு முன்னால் பாகிஸ்தானைவிட்டு கனடாவுக்கு சென்றுவிட்டதாக அவரது வழக்கறிஞர் சாய்ஃப் உல் மாலூக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். இவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை விடுதலை செய்ததை எதிர்த்து பெரும் போராட்டங்கள் எழுந்தன. தனது பக்கத்துவீட்டு பெண்ணுடன் நடைபெற்ற சண்டை ஒன்றில் அவர் முகமது நபிகளை அவமதிக்கும் விதமாக பேசிவிட்டார் என 2010ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தார் ஆசியா. நாடு முழுவதும் இது முக்கியதுவம் வாய்ந்த வழக்காக…

Read More

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது

இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கலின் திருமணம் கடந்த ஆண்டு மே 19-ம் தேதி லண்டனுக்கு அருகே உள்ள வின்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.2 கிலோ எடை இருந்தது. இதுகுறித்து இளவரசர் ஹாரி கூறும்போது, ‘‘மேகனும், குழந்தையும் நலமாக உள்ளனர். நான் இதுவரை கனவிலும் காணாத மிகவும் அற்புதமான அனுபவம் இது. ஒவ்வொரு தந்தையையும் போல நானும் எனது மனைவியை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்றார். குழந்தைக்கான பெயரை தேர்வு…

Read More

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியர்கள் -சீனர்கள்

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியர்கள் -சீனர்கள்

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் பாதி பேர் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் அந்தநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7  லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5.8 லட்சம் மாணவர்கள், அதாவது 49.5 சதவீதம் மாணவர்கள் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை பட்டப்படிப்புகள் பயின்று வருகிறார்கள் என்றும், 11 சதவீதம் மாணவர்கள் இளநிலை படிப்புகளும் 10 சதவீதம் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கும் பயின்று வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள்…

Read More

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல்? இந்திய உளவுத்துறை ரகசிய தகவல்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்கள். இதில் 40 வெளிநாட்டினர் உள்பட 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என…

Read More

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. மகாவேலா கார்டன்ஸ் பகுதியில் 3 அடுக்கு மாடி வீடு ஒன்றில் வசித்து வந்த இவர்களில் இன்ஷாப் இப்ராஹிம் (33) என்பவர் காப்பர் ஆலை உரிமையாளராக உள்ளார். மசாலா பொருட்கள் உற்பத்தி ஆலையின் உரிமையாளரான இவரது சகோதரர் இப்ராஹிம், தாக்குதல் நடத்தப்பட்ட சொகுசு ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டுகளை வைத்து சென்றது தெரிய வந்தது. இதனை அறிந்து போலீசார் அவரை தேடிச் சென்ற போது, தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர், இப்பகுதியில் இவர்களின் குடும்பம் செல்வாக்கு…

Read More

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – ”ஒரு தற்கொலை குண்டுதாரி பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் படித்தவர்” – ருவன் விஜயவர்த்தனே

”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய அமைச்சர் ருவன் விஜயவர்த்தனே தெரிவித்துள்ளார். ”அவர்கள் தனிப்பட்ட வகையில் நல்ல பொருளாதார வசதியோடு இருப்பவர்கள். அவர்களது குடும்பம் பொருளாதார ரீதியாக நிலையாக நல்ல நிலைமையில் இருந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார். ”தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் பிரிட்டனில் படித்ததாகவும் பின்னர் முதுகலை படிப்பை ஆஸ்திரேலியாவில் படித்து முடித்துவிட்டு இலங்கையில் நிரந்தரமாக குடியேறியதாக அறிகிறோம்” என்றும் ருவன் தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றது. ஆனால் இதுவரை இந்த தாக்குதலில் அந்த குழு ஈடுபட்டதற்கான…

Read More
1 172 173 174 175 176 256