நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்தியாவைவிட்டு தப்பி வந்ததாக கூறப்படுவதை மறுத்த விஜய் மல்லையா…
Read More









