ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு

ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு

அட்டகத்தி, மெட்ராஸ், காலா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநா் பா.ரஞ்சித். சமத்துவம் குறித்து தொடா்ந்து குரல் கொடுத்து வருபவா். பா.ரஞ்சித் அண்மையில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். அப்போது, சோழ மன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா். இயக்குநா் ரஞ்சித்தின் கருத்து பெரும் சா்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குநா் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில்…

Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு

40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என ஓய்வு அறிவிப்பின் போது கூறினார். 2011 உலக கோப்பை கிரிகெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வாங்கியிருந்தார். இந்திய அணிக்காக 400-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்டுள்ளார் யுவராஜ்…

Read More

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் இன்று (வயது 66) மாரடைப்பால் காலமானார். உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர். சென்னையை சேர்ந்த கிரேஸி 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது. கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’ படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு…

Read More

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் இன்று சந்தித்து கலந்துரையாடல்

இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் தனது நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டது, இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதாக உலகிற்கு வழங்கிய நற்செய்தி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோதியிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நரேந்திர மோதி, தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக மாலத்தீவிற்கு நேற்றைய தினம் சென்று, இலங்கைக்கு இன்று அடுத்த கட்டமாக விஜயம் மேற்கொண்டிருந்தார். சுமார் ஐந்து மணி நேரம் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும்…

Read More

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனி அணிந்த ‘கிளவுசில்’ இடம்பெற்றிருந்த முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல எனக்கூறியுள்ள பிசிசிஐ நிர்வாக குழு தலைமை அதிகாரி வினோத் ராய், இதற்காக அனுமதி கேட்டு ஐசிசியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில், தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது, ‘கிளவுசில்’ இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் ‘பாலிதான்’ லோகோ பொறிக்கப்பட்டு இருந்தது. தோனி ஏற்கனவே இந்திய ராணுவ கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இதனால், தோனியின் தேசப்பற்றை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிப்படி ”வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும்…

Read More

‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

‘காவு’ வாங்கியது ‘பிரெக்சிட்’; தெரசா மே பதவி விலகினார்

பிரிட்டனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையில், தெரசா மே, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை இன்று(ஜூன் 7) ராஜினாமா செய்தார். இரண்டாம் உலகப் போருக்கு பின், அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக ஆஸ்திரேலியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரிட்டன் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய யூனியன் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. குடியேற்ற விஷயத்தில் தாராள போக்கை கடைப்பிடித்தன. ஆனால், குடியேறும் பிற நாட்டினரால் தங்களின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டனில் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியலாமா என பொதுமக்களின் கருத்தைக்கேட்டு 2016 ஜூனில் வாக்கெடுப்பு நடந்தது. இது பிரெக்சிட் எனப்பட்டது. பிரெக்சிட்டுக்கு மக்கள் ஆதரவளித்ததால்…

Read More

சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் – கண்டனம்

சவுதி மன்னரை அவமதித்த இம்ரான் –  கண்டனம்

சவுதி சென்றுள்ள பாகிஸ்தான் இம்ரான் கான், அந்நாட்டு மன்னரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய ஒத்துழைப்பிற்கான அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். மெக்காவில், அந்நாட்டு மன்னர் சல்மானை சந்தித்தார். இம்ரானை, மன்னர், தனது மொழி பெயர்ப்பாளருடன் வரவேற்றார். தொடர்ந்து, இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது, இம்ரான் கான், மொழிபெயர்ப்பாளரிடம், மன்னரிடம் ஏதோஒன்றை கூற சொல்லிவிட்டு, பதிலுக்கு காத்திருக்காமல், உடனடியாக அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவின. பலர், சவுதி மன்னரை, இம்ரான் கான் அவமதித்து விட்டதாக கண்டனம் தெரிவித்தனர்.

Read More

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின் அமெரிக்காவுடன் ஒரு நீடித்த வணிக ஒப்பந்தத்தை பிரிட்டன் பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் மூன்று நாட்கள் அரச பயணமாக பிரிட்டன் சென்றுள்ளனர். பிரிட்டன் அரசி எலிசபெத்தை நேற்று சந்தித்த டிரம்ப், இன்று தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்றினார். டிரம்பின் பயணத்தின் இரண்டாவது நாளில் பிரதமர் தெரீசா மேயால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஹூவாவே என்கிற சீன நிறுவனத்தோடு வணிகம் நடத்துவதை முதன்மையாக கொண்டு, இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வணிக நிறுவனங்களின் தலைவர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கூட்டம். டவுனிங்ஸ்டீரீட் அலுவலகத்தில் அதிபர்…

Read More

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

ரோகித் சதம், சகால் 4 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இடம் பிடித்தார். ‘வேகத்தில்’ பும்ரா, புவனேஷ்வர், ‘சுழலில்’ சகால், குல்தீப் இடம்பிடித்துள்ளனர். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா மீண்டும் அணிக்கு திரும்பினார். தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன்…

Read More

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா பயண எச்சரிக்கை

உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த அதிரடியை அவர் மேற்கொண்டார். அதன்படி சீன இறக்குமதி பொருட்களுக்கு 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) அளவுக்கு கடந்த ஆண்டு வரி விதித்தார். டிரம்பின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த சீனாவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனாவும் வரியை…

Read More
1 170 171 172 173 174 256