கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை உயர்வு
கலிஃபோர்னியாவை மிரட்டி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயினால் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானர்வர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மோசமான காட்டுத்தீயாக கருதப்படும் 1933ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கிரிஃபித் பூங்காவில் நிகழ்ந்த காட்டுத்தீயிக்கு சமமான நிலையை இது அடைந்துள்ளது. அதேசமயத்தில், கலிஃபோர்னியாவின் தென்பகுதியிலுள்ள வூல்சி பகுதியில் ஏற்பட்ட தீயில் கடற்கரையோர உல்லாச விடுதிகளில் பரவியதில் தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில்…
Read More









