நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரை சந்திக்க மாட்டோம்: அதிகாரிகளை திருப்பி அனுப்பிய மக்கள்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக முதல்வரைச் சந்திக்கப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ள நெடுவாசல் மக் கள், பேச்சுவார்த்தைக்கு வந்த அதி காரிகளை திருப்பி அனுப்பினர். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட் டம் நெடுவாசலில் 92-வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத் தின்போது, மாவட்ட வருவாய் அலு வலர் எ.ராமசாமி, கோட்டாட் சியர்(பொ) ஜெயபாரதி, ஆலங்குடி வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது, “இந்தத் திட்டத் துக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் உறுதி அளித் துள்ளார். எனவே, போராட்டத்தைக் கைவிட்டு, முதல்வரைச் சந்தித்துப் பேச மக்கள் முன்வர வேண்டும்” என…
Read More









