மாவட்டங்கள்தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்கள்தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் 6 எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொரோனா தொற்று பரவலால் புத்தக கண்காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாக இருந்தது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும். சென்னை புத்தகக்காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில்…

Read More

காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது; முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சையில் நடைபெற அரசு விழாவில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றேன். 23 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு பல்வேறு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. ரூ. 1366- கோடிக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. காவிரி மண்ணுக்கும் வேளாண் பெருங்குடி மக்களுக்கும் என்றும் துணையாக இருப்பேன். காவிரி ஆணையம் அமைக்க திமுக கடுமையாக போராடியது. காவிரி நடுவர் மன்றம் அமைக்க முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி; காவிரி இறுதி தீர்ப்பை பெற்று…

Read More

இளவரசருக்காக எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு

இளவரசருக்காக எனது ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டது: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி தாக்கு

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக நேரடியாக பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். ஜலந்தரில் நடந்த பிரசார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:- பஞ்சாப் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மாநிலத்தில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும். மாநில மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் அவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக சாத்தியமான அனைத்து பணிகளையும் மேற்கொள்வோம் என உறுதியளிக்கிறேன். காங்கிரஸ் கொள்கைகள் பஞ்சாப் மாநிலத்தில் தொழில்களை அழித்துவிட்டது, வேலைவாய்ப்பை பாதித்துள்ளது. தங்களுக்குள் சண்டை போடுபவர்கள் நிலையான அரசாங்கத்தை தருவார்களா? காங்கிரசை கட்டுப்படுத்தும் குடும்பம், பஞ்சாப் மீதான பழைய…

Read More

மக்களை பிரிப்பதும் கொள்ளையடிப்பதும்தான் காங்கிரசின் கொள்கை: பிரதமர் மோடி தாக்கு

மக்களை பிரிப்பதும் கொள்ளையடிப்பதும்தான் காங்கிரசின் கொள்கை: பிரதமர் மோடி தாக்கு

70 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டமன்றத்துக்கு வரும் 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன. உத்தரகாண்டின் அல்மோரா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினர். பிரதமர் மோடி பேசியதாவது:- உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்துள்ளது. அங்கு பாஜக மிகப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதில் எங்களை விட மக்கள் உறுதியாக உள்ளனர். நல்ல நோக்கங்கள் கொண்டவர்களை வாக்காளர்கள் ஒருபோதும் கைவிட…

Read More

“திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்” – பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

“திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்” – பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

சென்னை, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டதாகவும் கூறினார். ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர்,அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டங்களையும், திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்குமாறு அதிமுகவினரை கேட்டுக்கொண்டார். சட்ட மன்ற தேர்தலில் நழுவ விட்ட வாய்ப்பை நகர்ப்புற தேர்தலில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அப்போது அவர் வலியுறுத்தினார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக இணை…

Read More

நீட் தேர்வு எதிர்ப்புக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு- எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு எதிர்ப்புக்கு அ.தி.மு.க. முழு ஆதரவு- எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது இந்நிலையில் சட்டசபையில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:- நீட் எதிர்ப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக உள்ளது. நீட் தேர்வு அ.தி.மு.க.வால் தான் கொண்டு வரப்பட்டது என்று தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. நீட் தேர்வை ரத்து…

Read More

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்கக் கோரி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, இலங்கை அரசு வசம் உள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடுவதற்கு இலங்கை அரசின் மீன்வளம் மற்றும் நீரியல் வளத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. எனவே இந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கடந்த 24.1.2022 அன்று எழுதிய கடிதத்தில், 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைப்பிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை வெளிப்படையான…

Read More

தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு…!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 457 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19 ஆயிரத்து 280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 2,897 பேரும், கோவையில் 2,456 பேரும், செங்கல்பட்டில் 1,430 பேரும், திருப்பூரில் 1,425 பேரும், சேலத்தில் 1,101 பேரும், ஈரோட்டில் 1,070 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 17 லட்சத்து 54 ஆயிரத்து 673 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 45 ஆயிரத்து 220 பேருக்கு தொற்று உறுதி…

Read More

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி…!

மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசி; 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி…!

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்குவழியாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், பாரத் பயோடெக் உருவாகியுள்ள மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியுள்ளது. மூக்குவழியாக செலுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோசாக பயன்படுத்தப்பட உள்ளது….

Read More

அகிலேஷ் ஆட்சிக்கு வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம்: அமித் ஷா காரசாரம்

அகிலேஷ் ஆட்சிக்கு வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம்: அமித் ஷா காரசாரம்

மதுரா: ”உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் குண்டர்கள் ராஜ்ஜியம் மீண்டும் தலை துாக்கும்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: உ.பி.,யின் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து விமர்சிக்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு தகுதி இல்லை. அவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் உ.பி.,யில் குண்டர்களின் ராஜ்ஜியம் மீண்டும் தலை துாக்கும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால்…

Read More
1 65 66 67 68 69 256