கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இந்தியா… டெல்லி மருத்துவர் பேட்டி

நாட்டில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவற்றில் டெல்லி, மராட்டியம் அதிக அளவிலான ஒமைக்ரான் பாதிப்புகளை கொண்டுள்ளன. இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த மருத்துவர் எஸ். சந்திரா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 3வது அலையின் தொடக்கத்தில் நாடு உள்ளது என காட்டுகிறது. இந்த காலகட்டத்தில், ஒமைக்ரான் வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும். டெல்டா வகை கொரோனாவை விட இதன் அறிகுறிகளின் கடுமை மிக குறைவாகவே உள்ளது. அதனால் பாதிப்பு அதிகளவில் இருக்க…

Read More

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

ஒமைக்ரான் தடுப்பு பணிகள்; உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதேபோன்று ஒமைக்ரான் பரவலும் ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி, 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் வருகிற 10ந்தேதி வரை திறக்கப்படாது என்று அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு திருவிழா என அடுத்தடுத்து பண்டிகைகள் மக்களால் கொண்டாடப்பட உள்ள சூழலில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் பற்றி சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ துறை உயரதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

Read More

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு

கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களுக்கு விரைவில் விலக்கு

பெங்களூரு: கர்நாடகத்தில் கோவில்களுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான சட்டம் சட்டசபை கூட்டுக்கூட்டத்தில் கொண்டுவரப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். விரைவில் விலக்கு கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் உப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உள்பட மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:- பிற மதங்களின் வழிபாட்டு தலங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சில கட்டுப்பாடுகளால் தொந்தரவை அனுபவித்து வருகின்றன. அதனால் கர்நாடகத்தில் கோவில்களுக்கு…

Read More

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா

மும்பையில் அதிகரிப்பு மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை ஏற்பட்டு மக்களை ஆட்டிப்படைத்தது. அதன்பிறகு மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. நவம்பர் மாதம் முதல் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாகவே இருந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மாநிலத்தில் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்படி புதிதாக 2 ஆயிரத்து 172 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 22 பேர் பலியானார்கள். இதேபோல மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு திடீரென எகிறி உள்ளது. இங்கு நேற்று ஒரேநாளில் 1,377 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது….

Read More

வியாபாரி வீட்டில் ரூ.257 கோடி பறிமுதல் – சமாஜ்வாதி கட்சியை சாடிய பிரதமர் மோடி

வியாபாரி வீட்டில் ரூ.257 கோடி பறிமுதல் – சமாஜ்வாதி கட்சியை சாடிய பிரதமர் மோடி

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், வாசனைப் பொருட்கள் வியாபாரி பியூஷ் ஜெயின் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். 120 மணி நேரம் நடைபெற்ற இந்த மெகா ரெய்டில் ரூ.257 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதோடு 16 ஆடம்பர சொத்துக்கள் குறித்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதில் 2 சொத்துக்கள் துபாயில் இருப்பது தெரியவந்துள்ளது. இதோடு 23 கிலோ தங்கமும், 250 கிலோ வெள்ளியும் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட பியூஷ் ஜெயின் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்புடையவர் தகவல்…

Read More

பகலில் அரசியல் கட்சி பேரணி: இரவுநேர ஊரடங்கில் என்ன பயன்? வருண்காந்தி கேள்வி

பகலில் அரசியல் கட்சி பேரணி: இரவுநேர ஊரடங்கில் என்ன பயன்? வருண்காந்தி கேள்வி

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். விரைவில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தொடர்ந்து பேரணிகளையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதில் லட்சக்கணக்கானவர்கள் திரண்டு வருவதால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி கூறுகையில், ‘பகல் நேரத்தில் நடைபெறும் அரசியல் கட்சி பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுகிறார்கள். அதே சமயம் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் தமிழ் டிரஸ்ட்டியுடன் நேர்காணல் !!

காசி விஸ்வநாதர் கோவில் காரிடார்பற்றிய புது தகவல்கள் !! தற்சமயம் அமைந்துள்ள கோவில் வல்லஹத்தின் முக்கியத்துவம் !! காசி விஸ்வநாதர் – அன்னபூரணா தேவியின் மகிமை !! கிளிக் செய்து கோவிலின் முதல் தமிழ் டிரஸ்டி ஸ்ரீ வெங்கட்ராமன கனபாடிகளிடமிருந்து கேட்டு கண்டு … அனைவரோடும் பகிரவும்

Read More

ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் – பிரதமர் மோடி

ஒமைக்ரான்: நாம் எச்சரிக்கை, விழிப்புடன் இருக்கவேண்டும் – பிரதமர் மோடி

இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் நாடு முழுவதும் தற்போது 300-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. டெல்டா வைரசை விட 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவலை தடுப்பதற்கான வழிவகைகள் குறித்து பிரதமர் மோடி சுகாதார நிபுணர்களுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றவும், மாநில அரசின் செயல்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். கொரோனா தொற்றுக்கு எதிராக போராட…

Read More

ஒமைக்ரான் பரவல்: மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? – பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

ஒமைக்ரான் பரவல்: மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? – பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு உறுதி செய்திருக்கிறது. இந்தியாவிலும் கடந்த 2-ந்தேதி நுழைந்த இந்த வைரஸ் 20 நாளில் 227 பேருக்கு பாதித்துள்ளது. டெல்டா வைரசை விட குறைந்தது 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச நிர்வாகங்களையும் உஷார்படுத்தி மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். இந்த…

Read More

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல்: பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை தொற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்ட அறிவிப்பில், ஒமைக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 90 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 123 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மராட்டியத்தில் 57, டெல்லியில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலுங்கானா 20, கர்நாடகம் 19, ராஜஸ்தான் 18, கேரளம் 15, குஜராத் 14, ஜம்மு – காஷ்மீர் 3, ஒடிசா 2, உத்தரப் பிரதேசம் 2, ஆந்திரம், சண்டிகர், தமிழகம், லடாக், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது….

Read More
1 67 68 69 70 71 256