புதுமுகங்களை நம்பி களமிறங்கும் அதிமுக – வேட்பாளர் பட்டியல் கூறுவது என்ன?

நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளன.
எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ ரவீந்திரநாத் தேனி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார்.

சென்னை பொதுவாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாத போதுகூட திமுகவுக்கு கணிசமான எம்.எல்.ஏக்களை கொண்டு கை கொடுத்தது சென்னை.
எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளரையும் சேர்த்து 34 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட்டு, தேனி தொகுதியில் மட்டுமே அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ ரவீந்திரநாத் தேனி தொகுதியிலிருந்து வெற்றி பெற்றிருந்தார்.

சென்னை பொதுவாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாத போதுகூட திமுகவுக்கு கணிசமான எம்.எல்.ஏக்களை கொண்டு கை கொடுத்தது சென்னை.
அதிமுகவின் வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ என்று அறியப்படும் மனோகர். காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் அறியப்பட்டிருந்த ராயபுரம் மனோ, ஓராண்டுக்கு முன்பாக, அதிமுகவில் இணைந்தார்.

அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியை வகித்திருக்கும் ஒரே நபர் ஜெயவர்த்தன். 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவில் கிட்டத்தட்ட 50% வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வென்றவர்களாக இருக்கும் நிலையில், அதிமுகவின் வேட்பாளர்கள் தேர்வு இந்த முறை இப்படி அமைந்துள்ளது.
தென் சென்னை தொகுதியில் 2014ஆம் ஆண்டு வெற்றி பெற்ற, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்த்தனுக்கு இந்தத் தேர்தலில் மீண்டும் தென் சென்னையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் தொகுதியில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பாக மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பாக, தனது ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்து வந்த, தமிழிசை சௌந்தர்ராஜன் களமிறங்குகிறார்.