அமெரிக்கா மீது இரான் தாக்குதல் !!

அமெரிக்கா மீது இரான் தாக்குதல் !!

இராக்கில் செயல்பட்டு வந்த தங்களின் ராணுவத் தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களில் இராக் மற்றும் இரானில் நடந்த 10 முக்கிய விஷயங்களை இங்கு தொகுத்துள்ளோம். இராக்கில் அமெரிக்க துருப்புகள் செயல்பட்டுவந்த குறைந்தது இரண்டு ராணுவ தளங்கள் மீது இரானில் இருந்து டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட…

Read More

இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்வு – கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்

இம்ரான் கான் தவறான காணொளியை பகிர்வு – கேலி செய்யும் ட்விட்டர் வாசிகள்

வங்கதேசத்தில் 2013ஆம் ஆண்டு நடந்த வன்முறை சம்பவத்தின் காணொளி ஒன்றை, உத்தரப்பிரதேச காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல் என்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட காணொளியை நீக்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதேபோன்று வேறொரு செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மாலை முதலில் பதிவிட்ட காணொளியை நீக்கியுள்ள இம்ரான் கான், நியூஸ் 18 செய்தி இணையதளத்தின் செய்தி ஒன்றை சனிக்கிழமை மதியம் பதிவிட்டுள்ளார். புகைப்பட காப்புரிமை @ImranKhanPTI@IMRANKHANPTI பாகிஸ்தானில் இருக்கும் வறுமை உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்காமல் இந்தியாவில் நடப்பதைப் பற்றி தவறான தகவல்களை பகிர்ந்து வருவதாக அவரது பதிவின் பின்னூட்டத்திலேயே இந்தியாவைச் சேர்ந்த பலரும் அவரைக் கண்டித்திருந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான…

Read More

நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

‘பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று, நெ.கண்ணன் கைது குறித்தும், கோலமிட்டவர்கள் கைது குறித்தும் காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். அவர் கூறியதாவது: பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெ.கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார். சென்னையில்…

Read More

முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் !!

முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை பாரிய அளவில் குறையும் !!

இலங்கையின் அரசியலமைப்பில் 21ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான தனிநபர் சட்டமூலமொன்று நாடாளுமன்றுக்குக் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்குரிய வர்த்தமானி அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டமொன்றில் நடைபெறும் தேர்தலொன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதியாக, குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 5 சதவீதத்தினை, கட்சி அல்லது சுயேட்சை குழுவொன்று பெறவேண்டும் எனும் தற்போதைய சட்டத்தை, 12.5 சதவீதம் பெற வேண்டும் என மாற்றுவதற்காகவே 21ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த நிலையில் மேற்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், சிறுகட்சிகளும், சிறுபான்மை சமூகங்களும் நாடளுமன்ற உறுப்பினர்களை பெறுவதில் பாரிய தடை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது….

Read More

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவர்மீது வங்கதேசத்தில் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக சின்ஹா உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு கமிஷன் வங்க தேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலபதிர்கள் இருவர் போலி ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும் அந்த தொகை முழுவதும் சின்ஹாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது….

Read More

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் குறித்து அதிகம் பேசும் அரசியல்வாதிகளாக திருமாவளவன் மற்றும் சீமான் இருக்கின்றனர். இருவரும் தமிழ் தேசியம் என்ற கோட்பாடை கொண்டிருந்தாலும், அரசியலில் வெவ்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை உள்ளது, தமிழர் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது தன்னால் மட்டுமே முடியும், என க்கூறும் சீமான் தனியாகவே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திருமாவளவன், இதே கோரிக்கையுடன் இருந்தாலும், தற்போது திராவிடத்தை முன்னிறுத்தும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது குறித்து திருமாவளவன் பேசியதாவது: கோட்பாட்டில் நம் இருவருக்கும் மாறுபாடு…

Read More

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகளும், இரண்டு கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியுண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார். ஹப்புத்தளை பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். விசாரணைகளின் பின்னரே விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்களை வெளியிட முடியும் என இலங்கை விமானப்படை…

Read More

அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

அ.தி.மு.க., – தி.மு.க., சம அளவில் வெற்றி

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க. – தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தி.மு.க.,வின் கை சற்று ஓங்கி உள்ளது. மாவட்ட கவுன்சிலர்களாக, அதிமுக கூட்டணி 243, திமுக கூட்டணி 267, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களாக அதிமுக கூட்டணி 2,165, திமுக கூட்டணி 2,330, மற்றவை 536 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. அ.தி.மு.க. – தி.மு.க. கூட்டணி…

Read More

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு…

Read More

மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்!!

மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்!!

ஜிஹாதி கூடத்தில் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், நீங்கள் வாராவாரம் வெள்ளி கிழமை தொழுஹை முடித்து வருகிறீர்ர்ஹல் .. உங்களுக்கு அல்லாஹ மீது நம்பிக்கை இல்லையா ? எப்படி இன்னமும் மோடி – அமித் ஷாவின் கதை முடியாமல் இருக்கிறது என்று கேட்டான் காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் !! அங்கே அமர்ந்திருந்த ஜிஹாதி கூட்டம் கை கொட்டி சிரிக்கிறது !! ஹிந்து பெரும்பான்மை நிறைந்த பாரத திருநாட்டில் பிரதம மந்திரிக்கும், உள்துறை அமைச்சருக்கும் இந்த நிலையென்றால் சாதாரண ஹிந்துக்களின் நிலையென்னவென்று யோசிக்கும் நேரத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். திராவிட – ஜிஹாதி கூட்டங்கள் இலங்கை தமிழரகளையும், தமிழிழத்தையும் அளித்ததுபோலவே, தற்சமயம் இந்தியாவையும், தமிழகத்தியும் அழிக்கும்…

Read More
1 153 154 155 156 157 425