இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது பொய் !!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது பொய் !!

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார். இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாகவே, தேசிய ஒருமைப்பாடு…

Read More

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம். 2001 – 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது. 1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய…

Read More

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களை அடுத்து சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். ஆனாலும் அவர், சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு சமூக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்யும் அவர், கைலாசா என்ற நாட்டை அமைக்க போவதாக கூறி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் நித்யானந்தா ஆற்றிய சொற்பொழிவில் கூறியதாவது: கடந்த 2003 ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மிக துறையில் என்றோ நான் தலைவனாகிவிட்டேன். கைலாசாவில்…

Read More

விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை 2-1 என வென்றது. புதன்கிழமை மும்பையில் நடைபெற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டியையும், தொடரையும் இந்தியா வென்றது. கே. எல். ராகுல் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டியையும், தொடரையும் இந்தியா வெல்ல 5 முக்கிய…

Read More

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார். மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 21 நாடுகளை சேர்ந்தோர் இம்முறை போட்டியில் போட்டியிட்டுள்ளனர். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவரே சமந்திகா குமாரசிங்க, ஒரு பிள்ளையின் தாயாவார். 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிற்காக அழகு கலை கலைஞராக முதல் முதலில் இந்த துறைக்குள் சமந்திகா குமாரசிங்க பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பல முன்னணி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். விளம்பரங்கள் மாத்திரமன்றி சில தொலைக்காட்சி…

Read More

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் – பா.ஜ.க

அரசியல் ஆதாயத்துக்காக திருடிய ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும் – பா.ஜ.க

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “நான் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி. எனவே, மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு பா.ஜனதா சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சாவர்க்கரை ‘மண்ணின் மைந்தர்’ என்று கூறினார். ஆனால், அவருடைய பேரன் ராகுல் காந்தியோ, சாவர்க்கரை அவதூறாக பேசுகிறார். மேலும், ராகுல் காந்தி குடும்பம், அரசியல் ஆதாயத்துக்காக ‘காந்தி’ என்ற பெயரை திருடி, தங்களது குடும்பப்பெயராக ஆக்கி விட்டது. ஆகவே, ‘காந்தி’ என்ற பெயரை ராகுல் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read More

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பொதுத் தேர்தல் 2019: இங்கிலாந்து ராணியிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 650 இடங்களில், 365 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சியும், 203 இடங்களில் தொழிலாளர் கட்சியும், ஸ்காடிஷ் தேசிய கட்சி 48 இடங்களிலும், தாராளவாத ஜனநாயகவாதிகள் அமைப்பு 11 இடங்களிலும்,டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் பிற கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதுடன்,…

Read More

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

எனக்கு எய்ட்ஸ் உங்கள் மகளுக்கு வேண்டுமா? கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார்

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் கிரண் குமார் (வயது 30) இவர் அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் பெங்களூரை சேர்ந்த பெண்ணிற்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில், டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில்,  தன்னுடைய பெயருக்கு களங்கம் வந்தாலும் பரவாயில்லை என, பெண் வீட்டாருக்கு போன் செய்து தனக்கு எய்ட்ஸ் இருக்கிறது. என்னை உங்கள் வீட்டு பெண் திருமணம் செய்து கொண்டால் அவளுக்குத்தான் பாதிப்பு என்று சொல்லி விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகள் குடும்பத்தார் பெண் பார்க்கும்போதே சொல்லி இருந்தால் எந்த…

Read More

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு – அருணாசலேஸ்வரர் கிரிவலம்

திருவண்ணாமலை, தீப திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார். வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீபதிருவிழாவில், 10ம் தேதி, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி நேற்று, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் ஆகியோர் கிரிவலம் சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அடி அண்ணாமலை கிராமத்தில் உள்ள, ஆதி அருணாசலேஸ்வரர் கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தை மாதத்தில் நடக்கும்திருவூடல் திருவிழா மற்றும் மஹா தீபம் ஏற்றிய மூன்றாவது நாள் என,…

Read More

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : “இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” – அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : “இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை” – அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். “யாராவது உங்களை அச்சத்திற்கு உள்ளாக்க முயற்சித்தாலும் அச்சப்படாதீர்கள்” என்று அவர் கூறினார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை)மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சட்ட மசோதாவால் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த…

Read More
1 156 157 158 159 160 425