லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்

லண்டன் பாலத்தில் கத்தியால் தாக்குதல்: துப்பாக்கிச்சூடு; மர்மநபர் கொல்லப்பட்டார்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் கத்தியால் குத்தி தாக்கிய மர்ம மனிதனை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர் லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற லண்டன் பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளார். சரமாரியாக அவர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். பொதுமக்கள் சிலர் அந்த மர்ம மனிதனை பார்த்து அலறியடித்து ஒடினர். தகவலறிந்த ஆயுதமேந்திய ரோந்து போலீசார் அந்த மர்ம மனிதன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சுற்றி வளைத்து கைது செய்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவியுள்ளது. மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர்…

Read More

தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா – மோடி

தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா –  மோடி

வலிமையான இலங்கை அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் கோத்தபயவை தேர்வு செய்தனர். வலிமையான இலங்கை என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கடல் பகுதிக்கும் முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா இலங்கை இடையே வலிமையான உறவு உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், இலங்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் கண்டனம் தெரிவிப்பதுடன், போரிட்டும் வருகிறது. இலங்கைக்கு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 50 மில்லியன் டாலரும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலரும், சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா செய்யும். இலங்கையில், இந்தியா சார்பில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி…

Read More

இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகம் – சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர்

இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகம் – சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர்

கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் சிறிசேனா அரசு செயல்பட்டது. சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார். இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றலாம் என்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை மறுத்த சீனா, இந்தியா – ஐரோப்பியா கண்டத்தை இணைக்கும் பாலமாக இத்துறைமுகம் நிகழும் எனவும் இதன்மூலம் வர்த்தகம், இலங்கையின் பொருளாதாரம் மேம்படும் எனவும் விளக்கம் அளித்தது. மேலும், ராணுவத்தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கையும் மறுப்பு தெரிவித்தது. சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில்…

Read More

லவ் ஜிஹாத் – ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் இணைந்த கேரள தம்பதி

லவ் ஜிஹாத் – ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் இணைந்த கேரள தம்பதி

ஆப்கானிஸ்தானில் சரணடைந்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகளில், தன் மகளும், மருமகனும் இருப்பதை, கேரளாவை சேர்ந்த பெண் உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், பிந்து சம்பத். இவருக்கு, நிமிஷா என்ற மகள் உள்ளார். நிமிஷாவுக்கும், பெக்சின் என்பவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின், நிமிஷா என்ற பெயரை, பாத்திமா என்றும், பெக்சின் என்ற பெயரை, இஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.இவர்கள், கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ்., பயங்கரவாதியுடன் சேர்ந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு இருந்தபடியே, தாயார்…

Read More

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார்

சமீபத்தில் நடந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். டில்லியில் அவர், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இலங்கை உள்நாட்டுப் போரில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்த இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும், பொதுமக்களும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதாக புகார்கள் உண்டு. இந்தப் பின்னணியில் கோட்டாபய இந்திய வருகையை ஒட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினார்….

Read More

சிதம்பரத்தின் மகன் கார்த்தியை கைது செய்வதற்காக காத்திருக்கிறோம் – அமலாக்கத்துறை

சிதம்பரத்தின் மகன் கார்த்தியை கைது செய்வதற்காக காத்திருக்கிறோம் – அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்காக நடவடிக்கைக்காக காத்திருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வாதத்தை கேட்ட சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமின் கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ”12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகள், 12 வெளிநாட்டு சொத்துக்களில் சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 16 நாடுகளில் கண்டறியப்பட்ட சொத்துக்களுடன் சிதம்பரத்திற்கு தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை மிரட்ட வாய்ப்புள்ளது” என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. அதை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் வழங்க டில்லி…

Read More

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு – சோனியா, ராகுல் ஆப்சென்ட்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்பு – சோனியா, ராகுல் ஆப்சென்ட்

மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்று கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. விழாவிற்கு பங்கேற்காதது குறித்து இருவரும் உத்தவுக்கு கடிதம் அனுப்பினர். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து ‘மகா விகாஸ் அஹாதி’ எனப்படும் மஹாராஷ்டிரா மேம்பாட்டு முன்னணியை அமைத்தன. இந்த கூட்டணி தலைவராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டணி, கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வழங்கினார். இதையடுத்து ஆட்சி அமைக்க உத்தவ் தாக்கரேவுக்கு, கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இன்று(நவ.,28) மாலை 6.40 மணிக்கு…

Read More

நாதுராம் கோட்சே தேசபக்தர் – பா.ஜ எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேச்சு

நாதுராம் கோட்சே தேசபக்தர் – பா.ஜ எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேச்சு

நாதுராம் கோட்சே தேசபக்தர் என பா.ஜ.வைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மஹாத்மா காந்தியை கொன்றது ஏன் என நாதுராம் கோட்சே கூறியதை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது குறிக்கிட்ட பா.ஜ. பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் “ஒரு தேசபக்தரை உதாரணமாக கூறக்கூடாது” என்றார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பிரக்யா தொடர்ந்து பேச முற்பட்டார். அவரை பா.ஜ.வினர் உட்காரும்படி சமாதானப்படுத்தினர்.”ராஜா பேசியது மட்டுமே சபைக் குறிப்பில் இடம்பெறும்” என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர…

Read More

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு சிதம்பரம் – ஜாமின் தராமல் மறுக்க பில்லாவா? ரங்காவா? – காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல்

ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு சிதம்பரம் – ஜாமின் தராமல் மறுக்க பில்லாவா? ரங்காவா? – காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபல்

‘ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், கார்த்தியின் தந்தை என்பதற்காக மட்டுமே சிதம்பரத்துக்கு குறி வைக்கப்பட்டுள்ளது. ஜாமின் தராமல் மறுக்க அவர் என்ன பில்லாவா? ரங்காவா?’ என அவரது வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது. அவரது ஜாமின் மனுவை டில்லி உயர் நீதிமன்றம் 20ல் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று(நவ.,27) விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்…

Read More

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை !!

இலங்கையில் முஸ்லிம்களே இல்லாத ராஜபக்‌ஷவின் அமைச்சரவை !!

இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகிய நிலையில், ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சி செய்யும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமே கையளித்தது. இதற்கமைய, ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் தேதிக்கு பின்னரே கிடைக்கும் என்ற நிலையில், இடைகால அரசாங்கமொன்றை உருவாக்க கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 21ம் தேதி நியமிக்கப்பட்டார். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் அமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாத…

Read More
1 158 159 160 161 162 425