16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ்

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா துன்பர்க்கின் படத்தை அட்டையில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி உள்ளது.     ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த வரிசையில் கிரேட்டா இடம் பெற்று உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார். பருவ நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் குரல் எழுப்பத் தயங்காதவர் கிரேட்டா. செப்டம்பர் மாதத்தில் நியூயார்க் நகரில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா., கூட்டத்தில் 2018 ம் ஆண்டு இவர் ஆற்றிய உரை உலக நாடுகளால் பாராட்டப்பட்டது. அட்லான்டிக் கடல்பகுதியில் சுமார் 14 நாட்கள் பயணித்த தனது…

Read More

ஆண்ட்ரூ ஷியர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்

ஆண்ட்ரூ ஷியர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறார்

புதிய தலைவரை தேர்ந்தெடுத்ததும், தாம் கன்செர்வ்டிவ் பார்ட்டி தலைமை பொறுப்பிலிருந்து விலக போவதாக இன்று ஆண்ட்ரூ ஷியர் அறிவித்தார். வெல்ல வேண்டிய 2019 எலெக்ஷனை சரியாக போட்டியிடாமல் லிபெரல் பார்ட்டி தலைவர் ஜஸ்டின் த்ருதீவிடம் தோற்றதாக அவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவியது. இந்நிலையில் அவர் தனது ராஜினாமாவை சமர்ப்பிப்பதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதனால் கட்சியில் யாரும் சந்தோஷத்தை வழிபடுத்தாவிட்டாலும் வருத்தத்தையும் வெளிப்பதுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. SNC லவ்லின் வூழல் மற்றும் மோசமான குடிவரவு கொள்கை மேலும் தீவிரவாதிகளிடம் மெம்மை போக்கு போன்ற பல குற்றங்களை சுமந்திருந்த லிபரல் கட்சி தலைவர் மற்றும் கனடியன் பிரதம…

Read More

இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடை ?

இலங்கை தமிழ் பெண்கள் பொட்டு வைக்க தடை ?

புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் தமிழ் பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடிஅகல்வு திணைக்களம் அறிவித்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த விடயம் இலங்கையில் தமிழ் பெண்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கயான் மிலிந்தவிடம் பிபிசி தமிழ் வினவியது. சர்வதேச நியமங்களுக்கு அமைய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் விதிமுறையின் பிரகாரம், 2015ஆம் ஆண்டு புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தை எடுக்கும் போது முகத்தில் ஒப்பனைகளோ அல்லது வேறு எந்தவித…

Read More

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்ற அவை நீதிக் குழு அவர் மீதான புகார்களை முறைப்படியாக வெளியிட்டது

ஜெர்ரி நாட்லர் தலைமையிலான அவை நீதிக்குழு வெளியிட்ட குற்றச்சாட்டின் முதல் பிரிவு டிரம்ப் தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டுகிறது. அடுத்த பிரிவு நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை தடுத்ததாக கூறுகிறது. அத்துடன் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக யுக்ரைனுக்கான உதவியை நிறுத்திவைத்ததாகவும் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், தாம் எந்த குற்றமும் செய்யவில்லை என்று மறுக்கும் அதிபர் டிரம்ப் இந்த நடவடிக்கையே ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிறார். அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் சபையின் நீதிக்குழு இந்தக் குற்றச்சாட்டுகளை அங்கீகரித்துவிட்டால், இந்தவாரக் கடைசியில் இது பிரதிநிதிகள் சபையில் ஓட்டெடுப்புக்கு விடப்படும். இந்த அவையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆதிக்கம் அதிகம். அங்கே இந்த குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டால், பிறகு அவை ஆளுங்கட்சியான…

Read More

நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் – மு.க. ஸ்டாலின்

நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் – மு.க. ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியில் 1,20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்துள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 80-ம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது. அப்போது 7 நிர்வாகிகளில் ஒருவராக இளைஞரணியில் பணியை தொடங்கினேன். நான் கலைஞரின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றிவிட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நன்றாக உழைப்பேன் என்ற பெயரை கலைஞரிடத்தில் வாங்கியிருக்கிறேன். நான் கலைஞரிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன். நான் பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதி செயலாற்ற வேண்டும். இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன். உதயநிதி மீது…

Read More

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, ‘கைலாஷ்’ என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது. ‘புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை’ என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, ‘வீடியோ’வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று…

Read More

இலங்கை குறித்து சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை

இலங்கை குறித்து சர்ச்சையை உருவாக்கிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் அறிக்கை

பிரிட்டனின் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆளும் கன்சவேட்டிவ் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆகியன வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள விடயங்கள் தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ளன. வெளிநாட்டு தேர்தல் ஒன்று என்ற போதிலும், அதனுடன் தொடர்பில்லாத மக்கள் மத்தியில்கூட இதனால் பிரச்சனை எழுந்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார். இலங்கையில் இனங்களுக்கு இடையில் காணப்படும் பிரச்சினைக்கு ‘இரண்டு நாடுகளுக்கிடையிலான தீர்வு” (two-state solution) என பிரிட்டனை ஆளும் கன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளதாக அவர் ஊடக சந்திப்பொன்றின் ஊடாக சுட்டிக்காட்டினார். ”பிரிட்டனின் நாடாளுமன்றத் தேர்தல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

Read More

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ., கடுமையான விளைவுகளை சந்திக்கும் – சிதம்பரம் எச்சரிக்கை

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ., கடுமையான விளைவுகளை சந்திக்கும் – சிதம்பரம் எச்சரிக்கை

திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.,வான ரகுபதியின் வீட்டிற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அங்கு ரகுபதி மற்றும் காங்., நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் கூறியதாவது: குடியுரிமை மசோதா என்பது அரசியல் சாசனத்திற்கு முரணானது. மத்திய அரசு இதற்கு பதிலாக எல்லா நாடுகளிலும் உள்ளது போல முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வரவேண்டும். அதிலுள்ள பல மரபுகளை ஆராய்ந்து, நமது தேவைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்து அகதிகள் சட்டத்தை கொண்டு வரவேண்டும். அதற்கு பதிலாக சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தி ஒரு மதத்தினருக்கும் மற்றோர் மதத்தினருக்கும் இடையே பாகுபாடு செய்யக்கூடிய வகையில் குடியுரிமை என்ற தவறான சட்டத்தை அரசு கொண்டு வருகிறது….

Read More

பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் – இலங்கை தமிழ் எம்.பி

பிரபாகரன் குறித்தும் ஈழப் பிரச்சனை குறித்தும் தேவையில்லாமல் பேசுவதை சீமான் நிறுத்தவேண்டும் – இலங்கை தமிழ் எம்.பி

பிரபாகரன் உடனான தனது மலரும் நினைவுகளை மேடைதோறும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிர்ந்துவருகிறார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை மட்டகளப்பு எம்.பி. யோகேஸ்வரன், சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சீமான் போன்ற அரசியல்வாதிகள் எல்லா பிரச்சனையும் தீர்ந்த பிறகு, வெறும் பேச்சு பேசுவதாக தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்று கேள்வி எழுப்பினார் யோகேஸ்வரன். விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள். ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், இங்குள்ளவர் பேசுகிற பேச்சால் தங்களுக்குத் தான் பிரச்சனை என்றார். பிரபாகரன் குறித்தும்…

Read More

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் – பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதல் : உஸ்மான் கான் – பாக்., பயங்கரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன்

லண்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதி , பாகிஸ்தானை மையமாக கொண்ட பயங்கரவாதிகளிடம் பயிற்சி மேற்கொண்டவன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவன் லண்டன் பங்குச்சந்தையில் குண்டு வைக்க முயற்சி செய்த வழக்கில் 8 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றவன் என்றும் தெரிய வந்தது.   லண்டன் பிரிட்ஜ் அருகே பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டன் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானில் பிறந்து பின் பிரிட்டன் குடியுரிமை பெற்றவன்…

Read More
1 157 158 159 160 161 425