சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது
சபரிமலை நடை இன்று(நவ.,16) மாலை திறக்கப்படுகிறது. மண்டல காலம் நாளை தொடங்குகிறது. கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம் ஆகும். இந்த பூஜைக்காக இன்று மாலை 5:00 மணிக்கு சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுகிறார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவார். மாலை 6:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரிக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து சன்னதிக்குள் அழைத்து செல்வார். மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரியும் இதே போன்று அழைத்து செல்லப்படுவார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை…
Read More









