மஹாராஷ்டிராவில் தொடரும் இழுபறி ஏட்டிக்குப் போட்டி
மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வுக்கும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே, ஆட்சி அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. ‘முதல்வர் பதவியை சுழற்சி முறையில் ஒதுக்குவது குறித்து, சிவசேனாவுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை’ என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கு பதிலடியாக, ஆட்சியில் சிவசேனாவுக்கு சம பங்கு தருவதாக, முதல்வர் பட்னவிஸ் பேசிய பழைய, ‘வீடியோ’வை, சமூக வலைதளத்தில், சிவசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா, 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இங்கு ஆட்சி அமைக்க…
Read More









