சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில், அரியானாவிலும் பா.ஜ., அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ.,- சிவசேனா கூட்டணியே அமோகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. அரியானாவிலும் பா.ஜ., வே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு டி.வி மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பு ஆக்ஸிஸ் மை இந்தியா, இந்தியா டுடே இணைந்து நடத்திய கருத்து கணிப்பில்; மஹாராஷ்டிராவில் பா.ஜ., – சிவசேனா, கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.,166 முதல் – 194 , காங் 72 முதல் 90 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதுபோல் அரியானாவில் மீண்டும் பா.ஜ.,வே ஆட்சியை பிடிக்க…

Read More

கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! !

கணவனை ரூ.5 லட்சத்திற்கு விற்ற மனைவி ! !

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார். முதலில் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்ளாத மனைவி, பின்னர் தொகையை உயர்த்தியுள்ளார். ரூ.17 லட்சம் தொடங்கி பேரம் நடந்து ஒருவழியாக ரூ.5 லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. கணவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அந்தப் பெண்ணிடம் மனைவி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனைவியான அந்த பெண்ணுக்கு கடன் இருப்பதை…

Read More

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் – பேஸ்புக்

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் – பேஸ்புக்

சென்சார் என்ற பெயரில் உண்மையை மறைக்க சீன அரசின் கையாளாக டிக்டாக் பணியாற்றுகிறது என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் விமர்சித்துள்ளார். சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் பிரபலமடைந்து வருகிறது. இதில் சிலர் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் கலாசாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், ஆபாசமாகவும் வீடியோ பதிவிட்டு சர்ச்சையில் சிக்குகின்றனர். அதே நேரத்தில் அரசியல், பொதுமக்கள் போராட்டங்கள், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் என அனைத்தையும் டிக்டாக் செயலி, சென்சார் செய்துவிடுவதால் அவ்வாறான பதிவுகளை வெளியிட முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. உதாரணமாக ஹாங்காங் போராட்டம் குறித்து ஒரு சிறு வரி கூட டிக்டாக்…

Read More

நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி – சீமான்

நான் திராவிட பன்றிகளை வேட்டையாட வந்த புலி – சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார். நாங்குநேரி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபகாலமாக பலரையும் வம்புக்கு இழுத்து வருகிறார். அந்த வகையில், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்களையும் சீண்டியுள்ளார். நாங்குநேரி தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் வரும் அக்., 21ல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். சீமான் பேசுகையில், என்னை எதிர்க்கிறவன் எல்லாம் என் எதிரி அல்ல, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர் தான் என்…

Read More

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் ஒரு புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “நம்மிடம் மீண்டும் கட்டுப்பாடு வரும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆவணங்கள் தயாரிக்கும் பணியை இரு தரப்பும் செய்து வருகிறது. எனினும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதல் இதற்கு வேண்டும். பிரதான எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் இதுதொடர்பாக கூறுகையில், முன்னாள் பிரதமர் தெரீசா மே கலந்து பேசி முடிவெடுத்த ஒப்பந்தத்தைவிட இது மிகவும் மோசமானது என்று தெரிவித்தார். இதனை எம்பிக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான் என்று கூறும் ஐக்கிய ஜனநாயக கட்சி, இதற்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறுகிறது….

Read More

துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், சிரியாவில் குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அரசு தெரிவித்தது. வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி ஒன்பதாவது நாளாக தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடந்த 9-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் டிரம்ப் எழுதிய கடிதம்…

Read More

மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளையடித்தோருக்கு சிறை: மோடி

மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி துவங்கி விட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் பார்லி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போது, நாட்டு நலனுக்காகஎடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அப்போது, அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும். காங்கிரஸ் தலைவர் ஒருவர், காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்தால், சிறப்பு சட்டம் நீக்கம் என்ற முடிவை பா.ஜ., எடுத்திருக்காது என கூறினார். நீங்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து முஸ்லிம் என பார்க்கிறீர்களா? காஷ்மீர் குறித்த…

Read More

பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்

பிப்ரவரி 2020 வரை நிதி கண்காணிப்புக் குழுவின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் இருக்கும்

பணமோசடி, பயங்கரவாத குழுக்களுக்கு  நிதியுதவி அளிப்பது  மற்றும் சர்வதேச நிதி அமைப்பிற்கான பிற அச்சுறுத்தல்களை எதிர்த்து 1989 ஆம் ஆண்டில்  நிறுவப்பட்ட ஒரு அமைப்பு  நிதி கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்)  ஆகும். இந்த அமைப்பு பாரீசை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நிதி கண்காணிப்புக் குழுவால் பாகிஸ்தான் கறுப்பு  பட்டியலில் இடம்பிடித்தது. பயங்கரவாதிகளுக்கு  நிதி வழங்குவது  மற்றும் பணமோசடிகளை முற்றிலுமாக நிறுத்தும் நடவடிக்கைகளை  2019 அக்டோபருக்குள் நிறுத்த வேண்டும். இல்லை என்றால்  ஈரான் மற்றும் வட கொரியாவுடன் கறுப்புப் பட்டியலில் இடம் பெறும் அபாயத்தை எதிர்கொள்ளும் என நித அமைப்பு பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த…

Read More

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் – மத்திய பிரதேச அமைச்சர் பி.சி.சர்மா

மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள சாலைகள் ஹேமமாலினி கன்னம் போல் அழகாக மாறி விடும் என அம்மாநில அமைச்சர் பி.சி.சர்மா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்., அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் போபாலில் சமீபத்தில் பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறின. சேதமடைந்த சாலைகள் குறித்து சட்ட அமைச்சர் பி.சி.சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது உள்ள சாலைகள் பா.ஜ பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னங்களை போன்று பெரியம்மை வந்தது போல் உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் சஜ்ஜன் வர்மா மற்றும் முதலமைச்சர் கமல் நாத்தின் உத்தரவின் பேரில், 15 நாட்களில்…

Read More

அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை

அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. பாகிஸ்தான், வங்காளதேசம், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 25 நாடுகளில் இருந்து பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய  மத்திய அரசு தடை விதித்தது. பாலியெதிலீன் டெராப்தலேட்(PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையே அதிகமாக…

Read More
1 165 166 167 168 169 425