பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கை

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறியது உண்மை தான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, சிறையில் திடீர் சோதனை நடத்தினார். சோதனையில், சிறை விதிமுறைகளை மீறி தனி சமையல், சிறையிலிருந்து வெளியே சென்றது உள்ளிட்டவற்றை கண்டுபிடித்தார். விஷேச சலுகைகளுக்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ், சசி தரப்பிலிருந்து ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இப்புகார்களை விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்டக் குழுவை கர்நாடக அரசு அமைத்தது….

Read More

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று ‘ஷாஸ்த்ரா பூஜை’ செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன. படத்தின் காப்புரிமை ANI பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். விமானங்களில் ஆர்பி – 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத்…

Read More

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி

ஆப்கானிஸ்தானில் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் உட்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்க படைகளும் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள மூசா ஹலா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அமெரிக்கா-ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் இணைந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக்கண்டத்தின் தலைவர் அசிம் உமர் உள்பட 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீர் நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

காஷ்மீரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது அரசின் மிக தைரியமான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டார். விஜயதசமி நாடு முழுவதும்,கொண்டாடப்பட்டு வருகிறது. நாக்பூரில் நடந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின்கட்காரி, வி.கே.சிங், மகாராஷ்ட்டிர முதல்வர் பட்னாவிஸ், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசியதாவது: தேச நலனே எங்களுக்கு மிக முக்கியம். தேச நலனுக்கென மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. நாட்டில் சிலர் வன்முறைகளை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதனை ஏற்க முடியாது. சமூகத்தில் சில அருவருக்க தக்க சம்பவங்கள் வன்முறைகள் நடக்கிறது. இது இந்த தேசத்தையும், இந்து மக்களையும் இழிவுப்படுத்துவதற்காக…

Read More

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட மாட்டோம்’ – அமெரிக்கா

வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர்….

Read More

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா போட்டி இல்லை – கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிறார்

இலங்கை அதிபர் தேர்தலில் சிறிசேனா போட்டி இல்லை – கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தருகிறார்

அதிபர் சிறிசேனா வின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து அங்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். இவர் எதிர்க்கட்சிகளின் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இவரை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமர் ரனில் விக்ரம சிங்கே போட்டியிட விரும்பினார். இதே போன்று நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியாவும் களம் இறங்க விருப்பம் கொண்டார். ஆனால், கட்சியில் பெரும்பாலோர் முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகனான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். இதையடுத்து அவர் வேட்பாளராக ஒருமனதாக அறிவிக்கப்பட்டார். இதுவரை…

Read More

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் இராணுவ ஆட்சியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குண்டு வெடித்ததில் 10 பேர் பலியாகினர் என்று ஒரு அதிகாரி ஏ.எஃப்.பி கூறினார். பஸ் கடந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து வெடிகுண்டு ஒன்று விசப்பட்டதாக நங்கர்ஹார் கவர்னர் செய்தித் தொடர்பாளர் அதாவுல்லா கோக்யானி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட 10 பலியாகினர், மற்றும் 27 பேர் காயமடைந்தனர், என்று அவர் கூறினார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியபோது, ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கிய 18-வது ஆண்டு நினைவு நாளில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அயோத்தி வழக்கு விசாரணை; அக்.,17 ல் முடிக்க உத்தரவு

அயோத்தி வழக்கு விசாரணை; அக்.,17 ல் முடிக்க உத்தரவு

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் அனைத்து வாதங்களையும் அக்.,17 க்குள் முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வழக்கின்…

Read More

மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்

மயங்க் அகர்வால் முதல் இரட்டை சதம் – ரோகித் சர்மா 176 ரன்கள்

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துளார். இவருடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மாவும் ஆட்டமிழக்கும் முன் 176 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 450 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. தொடக்க வீரராக முதல்முறையாக களமிறங்கி அசத்திய ரோகித் சர்மா – 5 முக்கிய அம்சங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வாலுக்கு இது வெறும் எட்டாவது இன்னிங்க்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவரைப்…

Read More

ஜமால் கஷோக்ஜி: சௌதி பத்திரிகையாளர் ‘கொடூரமாக கொல்லப்பட்டதன்’ ஆதாரங்கள்

ஜமால் கஷோக்ஜி: சௌதி பத்திரிகையாளர் ‘கொடூரமாக கொல்லப்பட்டதன்’ ஆதாரங்கள்

இஸ்தான்புல் நகரில் வரிசையாக மரங்கள் நின்றிருந்த அமைதியான ஒரு பகுதி வழியே நான் நடந்து சென்று, நிறைய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியிருந்த நிற கட்டடம் ஒன்றை நெருங்கினேன். ஓராண்டுக்கு முன்பு நாடு கடத்தப்பட்டிருந்த சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் படம் இதே கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும். சௌதி அரேபிய தூதரகத்தில் அவர் நுழைந்தார். அங்குதான் அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் தூதரகத்தை துருக்கி புலனாய்வுத் துறை உளவு பார்த்து வந்தது. இதற்கான திட்டமிடல், கொலை எல்லாமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒலிநாடாக்களை மிகவும் சிலர் மட்டுமே கேட்டிருக்கின்றனர். அதில் இரண்டு பேர் பிபிசியின் பனோரமா நிகழ்ச்சிக்கு பிரத்யேகப் பேட்டி…

Read More
1 167 168 169 170 171 425